• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, June 25, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

இலங்கை பெரும் ஆபத்தில்; சர்வதேச நாணய நிதியத்துடன் உடனே அடுத்த கட்ட பேச்சுகளை ஆரம்பியுங்கள்.!

Mathavi by Mathavi
May 21, 2026
in இலங்கை செய்திகள்.
0
இலங்கை பெரும் ஆபத்தில்; சர்வதேச நாணய நிதியத்துடன் உடனே அடுத்த கட்ட பேச்சுகளை ஆரம்பியுங்கள்.!
Share on FacebookShare on Twitter

இலங்கை தற்போது புதியதொரு பொருளாதார மரணப் பொறிக்குள் சிக்கி, நாடு பெரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது என்று எச்சரித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, தற்போதைய திட்டம் முடிவடைவதற்கு முன்னரே உடனடியாக சர்வதேச நாணய நிதியத்துடன் அடுத்த கட்ட தொடர்ச்சித் திட்டம் ஒன்றுக்கான பேச்சுகளை ஆரம்பிக்குமாறு அரசிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இந்த விவரங்களை வெளியிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தற்போது செயற்பாட்டில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் 2027 மார்ச் மாதத்துடன் முடிவடைகின்றது. அதன் பிறகு என்ன நடக்கும் என்பது குறித்து அரசிடம் எந்தவொரு தெளிவான திட்டமும் இல்லை.

எமது தற்போதைய திட்டம் முடிவடையும் போது, சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்க்கும் இலக்கு 14.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். ஆனால், தற்போது இலங்கையிடம் 7 பில்லியன் டொலர் மட்டுமே மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பில் உள்ளது. அதாவது இலக்கில் 50 வீதம் மட்டுமே காணப்படுகின்றது.

இந்த 14.2 பில்லியன் டொலர் இலக்கை நாம் அடைவதற்கான வாய்ப்பு வெறும் 0.01 வீதம் மட்டுமே உள்ளது. அந்த இலக்கை எட்ட வேண்டுமாயின், எதிர்வரும் 12 மாதங்களில் ஒவ்வொரு மாதமும் தலா 600 மில்லியன் டொலர் வீதம் கையிருப்பைச் சேகரிக்க வேண்டும். ஆனால் தற்சமயம் மாதத்துக்கு 60 மில்லியன் டொலர் மட்டுமே கிடைத்து வருகின்றது.

கடந்த காலங்களில் எமது கையிருப்புகள் முற்றிலும் வற்றிப்போய், நாடு நலிவடைந்த நிலையிலேயே நாம் சர்வதேச நாணய நிதியத்துடன் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து பேசினோம். ஆனால், தற்போது நம்மிடம் 7 பில்லியன் டொலர் கையிருப்பு உள்ளதால், பேரம் பேசுவதற்குச் சாதகமான ஒரு வலுவான நிலையில் நாம் இருக்கின்றோம். எனவே, இந்தத் தற்போதைய தருணத்தைப் பயன்படுத்தி அடுத்த கட்ட தொடர்ச்சித் திட்டத்துக்கான பேச்சுகளை உடனடியாக ஆரம்பியுங்கள்.

2027 ஆம் ஆண்டு முதல் நாம் வட்டிக்கு மேலதிகமாக அசலையும் சேர்த்து ஆண்டுதோறும் 3 முதல் 4 பில்லியன் டொலர்கள் வரை கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டுதலும் மேற்பார்வையும் இல்லாமல் நாம் இந்தக் கடன் சேவைச் சுழற்சிக்குள் நுழைந்தால், நாடு மிகப்பெரிய கடன் மலைக்குள் மூழ்கிவிடும். அரசு நாட்டை ஒரு மரணப் பொறிக்குள் இட்டுச் சென்று கொண்டிருக்கின்றது.

பொருளாதார நெருக்கடி இல்லை என்று அரசு கூறிவந்தாலும், நேற்று 346 ரூபாவாக இருந்த டொலரின் விலை இன்று 354 ரூபாவாக அதிகரித்துள்ளது. கடந்த 12 மாதங்களுக்குள் ரூபாவின் மதிப்பு 14 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஜனவரியில் 294 ரூபாவாக இருந்த 92 ரக பெற்றோல் விலை, வெறும் நான்கு மாதங்களுக்குள் 39 வீதத்தால் அதிகரித்து இன்று 410 ரூபாவாக உயர்ந்துள்ளது. இது 2022 நெருக்கடி காலத்தின் உச்ச விலையான 470 ரூபாவை நெருங்கிக் கொண்டிருக்கின்றது.

உலகச் சந்தையில் எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 110 டொலரைத் தாண்டியுள்ளது. இதனால் எரிபொருளை இறக்குமதி செய்ய எமது கையிருப்பிலிருந்து பெருமளவிலான நிதியைப் பயன்படுத்த நேரிடுவதால் டொலர் தட்டுப்பாடு ஏற்பட்டு, இறக்குமதி ஆவரணம் இரண்டரை மாதங்களுக்கும் குறைவான நிலைக்குச் செல்லும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக எமக்கு ஆண்டுதோறும் கிடைக்கும் 8.1 பில்லியன் டொலர் வெளிநாட்டு அனுப்பீடுகளில் 60 வீத வளைகுடா நாடுகளிலேயே தங்கியுள்ளது. அங்கு ஏற்படும் வேலையில்லாப் போக்கினால் இந்த வருமானம் பாதிக்கப்படும். மறுபுறம் எமது சுற்றுலா வருமானமும் 17 வீதத்தால் குறைந்துள்ளது.

இவை தவிர, என்.டி.பி. வங்கியில் நிகழ்ந்த 13.2 பில்லியன் ரூபாய் மோசடி, கடன் செலுத்தச் சென்றபோது 25 இலட்சம் டொலர் காணாமல்போனமை, அஸ்வெசும நிதி இருமுறை வழங்கப்பட்டமை போன்ற உள்நாட்டு நிதி மோசடிகளால் சர்வதேச தர மதிப்பீடுகளில் எமது நாடு மேலும் கீழ் மட்டத்தை நோக்கிச் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நாட்டின் இந்த உண்மையான நிலைமையை மக்களிடம் அரசு மறைக்காமல் கூற வேண்டும். இந்நாட்டு மக்கள் மீண்டும் ஒருமுறை மருந்துக்காகவும், உரத்துக்காகவும், எரிபொருளுக்காகவும் வரிசைகளில் நிற்பதை எதிர்க்கட்சி ஒருபோதும் விரும்பாது. எனவே, கர்வத்தைக் கைவிட்டு, வலுவான நிலையில் இருந்து புதிய இணக்கப்பாட்டுக்கு அரசு உடனடியாகச் செல்ல வேண்டும்.” – என்றார்.

Related Posts

காக்கைதீவு குப்பை மேட்டில் பாரிய தீ விபத்து – சுமார் 200 குடும்பங்கள் பாதிப்பு!

by selvan
June 24, 2026
0

யாழ்ப்பாணம் காக்கைதீவு, கல்லுண்டாய் பகுதியில் அமைந்துள்ள மாநகர சபையின் பிரதான குப்பை மேட்டில்  ஏற்பட்ட பாரிய தீ விபத்து காரணமாக, அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 200 க்கும்...

சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு!

சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு!

by selvan
June 24, 2026
0

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்டமூலம், ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபாவினால் இன்று (24) பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி,...

சாதாரண தர பரீட்சையில் இம்முறை  11,790 பரீட்சாத்திகள் அனைத்துப் பாடங்களிலும் ‘A’ சித்தி

இவ்வாண்டு நடைபெற உள்ள பரீட்சைகளுக்கான கால அட்டவணையில் எவ்வித மாற்றங்களும் இல்லை!

by selvan
June 24, 2026
0

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பரீட்சைகளுக்கான கால அட்டவணையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார். எனவே முன்னர்...

தேர்தல்களின் போது அழியா மை பயன்படுத்துவதை தவிர்த்தால் சுமார் 100 மில்லியன் ரூபாய் அரச நிதியைச் சேமிக்க முடியும்!

by selvan
June 24, 2026
0

தேர்தல்களின் போது வாக்களித்ததை உறுதிப்படுத்துவதற்காக விரலில் மை பூசும் முறையை நீக்குவதன் மூலம், ஒரு தேர்தலின் போது சுமார் 100 மில்லியன் ரூபாய் அரச நிதியைச் சேமிக்க...

தேசிய சுற்றுச்சூழல் திருத்தச் சட்டமூலம் 103 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

தேசிய சுற்றுச்சூழல் திருத்தச் சட்டமூலம் 103 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

by selvan
June 24, 2026
0

தேசிய சுற்றுச்சூழல் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று (24) பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 113 வாக்குகளும், எதிராக 10 வாக்குகளும் கிடைத்தன. இதன்படி,...

சாதாரண தரப் பரீட்சை சான்றிதழ்களை இணைய வழியில் மட்டுமே பெறலாம்!

சாதாரண தரப் பரீட்சை சான்றிதழ்களை இணைய வழியில் மட்டுமே பெறலாம்!

by selvan
June 24, 2026
0

2025 (2026) ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான சான்றிதழ்கள் இணையவழி முறைமையின் ஊடாக மட்டுமே வழங்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக பரீட்சைகள்...

நடைமுறையில் “க்ளீன் ஶ்ரீலங்கா” திட்டம் –  தலைநகரில் துர்நாற்றம்!

நடைமுறையில் “க்ளீன் ஶ்ரீலங்கா” திட்டம் –  தலைநகரில் துர்நாற்றம்!

by selvan
June 24, 2026
0

"அரசாங்கம் 'க்ளீன் ஸ்ரீலங்கா' என்று நாடெங்கும் விளம்பரம் செய்கிறது. ஆனால், தலைநகர் கொழும்பில் மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்குப் பயங்கரமான துர்நாற்றம் வீசுகிறது" என நாடாளுமன்ற...

புலமைப்பரிசில் பரீட்சை திகதி அறிவிப்பு!

புலமைப்பரிசில் பரீட்சை திகதி அறிவிப்பு!

by selvan
June 24, 2026
0

2026 ஆம் ஆண்டிற்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் 9 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி...

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளரை பதவி நீக்கக் செய்தமை வெளிப்படையான அதிகார துஷ்பிரயோகம்!

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளரை பதவி நீக்கக் செய்தமை வெளிப்படையான அதிகார துஷ்பிரயோகம்!

by selvan
June 24, 2026
0

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஜி. கிஷோரை பதவியில் இருந்து நீக்கியிருப்பது வெளிப்படையான அதிகார துஷ்பிரயோகம் என்றும், அது ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட கடுமையான தாக்குதல்...

வவுனியா மாநகர சபையின் முதல்வர்  வடக்கு மாகாண ஆளுநரால் பதவி நீக்கம்!

வவுனியா மாநகர சபையின் முதல்வர்  வடக்கு மாகாண ஆளுநரால் பதவி நீக்கம்!

by selvan
June 24, 2026
0

வவுனியா மாநகர சபையின் மேயர் சு.காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞா.கிசோர் ஆகியோர் தங்களது பதவிகளில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி