உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

சுடப்பட்டு பிடிபட்ட சந்தேக நபர் தொடர்பில் விசாரணை!!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
31 பார்வைகள்

பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பிய பின்னர் சுடப்பட்டு கைதான சந்தேக நபர் தொடர்பில் அம்பாறை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அம்பாறை பொது வைத்தியசாலையில் வைத்து திங்கட்கிழமை 18 ஆம் திகதி அதிகாலை பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பிய சந்தேக நபர் பின்னர் பொலிஸாரினால் சுடப்பட்டு கைது செய்யப்பட்டு அம்பாறை பொது வைத்தியசாலையில் கடும் பாதுகாப்பில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த சந்தேக நபர் அம்பாறை மாவட்டம் புறநகர் பகுதியான கொட்டவேஹெரா கிராமத்தில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை 17 ஆம் திகதி இரவு அம்பாறை முகாம் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக அம்பாறை தலைமையக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அம்பாறை தலைமையக பொலிஸார் சந்தேக நபரை திங்கட்கிழமை 18 ஆம் திகதி அம்பாறை வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக மருத்துவரிடம் அழைத்து சென்ற நிலையில் குறித்த சந்தேக நபர் பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பி சென்றிருந்தார். இந்நிலையில் தப்பி சென்ற குறித்த சந்தேக நபரை பின்தொடர்ந்த பொலிஸார் பின்னர் சந்தேக நபரை கடும் பிரயத்தனம் கொண்டு துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்து கைது செய்தனர்.

இதன் போது பொலிஸாரின் கையில் இருந்த துப்பாக்கியைப் பறிக்க முயன்ற சந்தேக நபரை அதே துப்பாக்கியினால் தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காக பொலிஸாரினால் சுடப்பட்டார். இதன் போது சந்தேக நபரின் தொடைப் பகுதியில் துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டு பொலிஸார் சந்தேக நபரை கைது செய்த பின்னர் அம்பாறை பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தற்போது சட்டவிரோத மதுபான விற்பனையுடன் தொடர்புடைய குறித்த சந்தேக நபரின் பாதுகாப்பை உறுதி செய்த பொலிஸார் கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் பணிப்பரைக்கமைய அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவிற்கமைய அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி வழிநடத்திலில் அம்பாறை மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் 1 சம்பத் விக்ரமரத்னவின் மேற்பார்வையில் மேற்பார்வையின் கீழ் அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய பொறுபப்திகாரி பி.பி. கஸ்தூரி ஆராச்சி தலைமையில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

34 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

70 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

67 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

66 0 0