1968 ம் ஆண்டில் புதிய மஸ்கெலியா நகரம் உருவாக்கப்பட்டது. அக் காலகட்டத்தில் இந் நகரம் பிரதான வீதிகளை ஒதுக்கி மலை பாங்கான பகுதியில் கட்டப்பட்டது. இதன் காரணமாக மஸ்கெலியா நகரம் ஒரு ஒதுக்கு புறமான நகரமாக தற்போது விளங்குகிறது.
இதன் காரணமாக நகரில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களின் கூரை பகுதிகளுக்கு வர்ணம் பூசப்பட்ட நகரை வெளி உலகிற்கு அறிமுகம் செய்யும் முயற்சியில் தற்போதைய மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் முன் வந்து உள்ளார்.
இத் திட்டத்தின் கீழ் ஹட்டன் நகரில் இருந்து மஸ்கெலியா நகருக்கு வருகை தரும் அனைத்து மக்களுக்கும் மஸ்கெலியா நகருக்கு வருகை தரும் வகையில் குடா மஸ்கெலியா பகுதியில் இருந்து வண்ணமயமான வழிகாட்டி இட்டு நகரை அடையளப்படுத்தும் பணியை மஸ்கெலியா பிரதேச சபை முன்எடுத்து வருகிறது.
பல் வேறு வர்ணங்களில் வர்ணம் பூசி உள்நாட்டு வெளிநாட்டு உல்லாசப் பயணிகளை ஈர்க்கும் வகையில் இந்த மஸ்கெலியா நகரை மெருகூட்டும் பணியை இலங்கையில் உள்ள நிறுவனம் ஒன்று மேற் கொண்டு வருகிறது என மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் தெரிவித்தார்.










