• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, May 19, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

மாணவர்களின் உயர் கல்விக்கு கைகொடுக்கும் மஸ்கெலியா – “நடராஜா அறக்கட்டளை” புலமைப் பரிசில்!

Bharathy by Bharathy
May 19, 2026
in இலங்கை செய்திகள்
0
மாணவர்களின் உயர் கல்விக்கு கைகொடுக்கும் மஸ்கெலியா  – “நடராஜா அறக்கட்டளை” புலமைப் பரிசில்!
Share on FacebookShare on Twitter

வசதி குறைந்த மாணவர்களின் உயர்கல்விக்கு கைகொடுத்து மாதாந்த புலமைப் பரிசில் திட்டத்தை கடந்த ஆறு ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் “நடராஜா அறக்கட்டளை” மலையகக் கல்வி வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்பை செய்து வருகின்றது என அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் திட்டப் பணிப்பாளர் கந்தையா விக்னேஸ்வரன் தெரிவித்தார்,

அனைத்துலக மருத்துவ நல அமைப்பும், நடராஜா அறக்கட்டளை அமைப்பும் இணைந்து நடத்திய, க.பொ.த. உயர்தரத்தில் கல்வி பயிலும் வசதி குறைந்த மாணவர்களுக்கு மாதாந்த புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு 17 ஆம் திகதி மஸ்கெலியா பி.எம்.டி. கலாசார மண்டபத்தில் இடம்பெற்றபோது தலைமை வகித்துப் பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

அட்டன் கல்வி வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் டி. நாகராஜ், பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கான கல்வி இணைப்பாளர் பி. சந்திரசேகரன் உட்பட அதிபர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் 75 மாணவர்கள் முதல் மாதத்துக்குரிய நிதியைப் பெற்றுக் கொண்டார்கள்.

அவர் தொடர்ந்து பேசுகையில்,மஸ்கெலியா மொக்கா தோட்டத்தில் பிறந்து வளர்ந்து சாதாரண குமாஸ்தாவாக இருந்து, தலைமை குமாஸ்தாவாக உயர்ந்து இயற்கை எய்திய நடராஜா அவர்களின் புதல்வரான சிவகுமார் அமெரிக்காவில் உள்ள நாஸா விண்வெளி ஆராய்ச்சி நிலையதில் பணிபுரியக் கூடிய அளவுக்கு உயர்ந்துள்ளார். பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் உயர்கல்வி கற்று இன்று நல்ல நிலைக்கு உயர்ந்துள்ள சிவகுமார் அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் இருக்கின்றார்.

எமது அமைப்பின் ஸ்தாபகர் ராஜம் தேவேந்திரன் அம்மையாரின் வழிகாட்டலில் சிவகுமார் தமது தந்தையார் நடராஜாவின் பெயரில் அறக்கட்டளை ஒன்றை நிறுவி கடந்த ஆறு ஆண்டுகளாக உயர்தர மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கி வருவதை நன்றியுடன் நினைவுகூர்வதோடு நின்று விடாமல் புலமைப் பரிசில் பெறும் ஒவ்வொரு மாணவரும் கல்வியின் மகத்துவத்தை உணர்ந்து சிறந்த பெறுபேறுகளோடு உயர்ந்த நிலைக்கு வருவதற்கு திடசங்கற்பம் பூண வேண்டும்.

மாணவர்கள் வாழ்க்கையில் உயர்வதற்கு கற்பதில் ஆசை, சாதிப்பதில் ஆர்வம், சவால்களை சமாளிக்கும் ஆளுமை ஆகிய மூன்றையும் மனதில் வளர்த்துக் கொண்டு, தமது பெற்றோரின் வறுமையை எண்ணிப் பார்த்து, அவர்களின் கனவை நனவாக்கி மலையகத்துக்கு பெருமை சேர்க்க முன்வர வேண்டும்.

பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்கள் இலகுவாக சித்தியடையக் கூடிய பாடநெறிகளைத் தெரிவு செய்யாமல், கணித, விஞ்ஞான, தொழில்நுட்ப, விவசாயத் துறை சார்ந்த பாடநெறிகளைத் தெரிவு செய்வதன் ஊடாக சிறந்த தொழில்வாய்ப்பைப் பெற்று சாதிக்க முடியும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதாந்தம் வழங்கப்படும் புலமைப் பரிசில் பல்கலைக்கழக அனுமதி பெறும் போதும் வழங்கப்படும். எனவே, உண்மை, நேர்மை, ஒழுக்கம் போன்ற நல்ல பண்புகளோடு அதிபர்களின் சிபாரிசுடன், தேவையான விபரங்களை உரிய நேரத்தில் தரும் போது, தடையின்றி தொடர்ச்சியாக புலமைப் பரிசிலைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் என்றார்.

Related Posts

வானவில் வர்ணம் போல் மஸ்கெலியா நகரை மேம்படுத்த ; பிரதே சபை முதல்வர் முன்வந்துள்ளார் .

வானவில் வர்ணம் போல் மஸ்கெலியா நகரை மேம்படுத்த ; பிரதே சபை முதல்வர் முன்வந்துள்ளார் .

by Bharathy
May 19, 2026
0

1968 ம் ஆண்டில் புதிய மஸ்கெலியா நகரம் உருவாக்கப்பட்டது. அக் காலகட்டத்தில் இந் நகரம் பிரதான வீதிகளை ஒதுக்கி மலை பாங்கான பகுதியில் கட்டப்பட்டது. இதன் காரணமாக...

அருச்சுனா அரசியலை வெளியில் வைக்க வேண்டும் ; விரிவுரையாளர் இளம்பிறையன் சீற்றம்!

அருச்சுனா அரசியலை வெளியில் வைக்க வேண்டும் ; விரிவுரையாளர் இளம்பிறையன் சீற்றம்!

by Bharathy
May 19, 2026
0

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா தனது அரசியலை வெளியில் வைத்துக் கொள்ள வேண்டும். போட்டி அரசியலை பல்கலைக்கழகத்துக்குள் வைத்துக் கொள்ளக் கூடாது என யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சிரேஷ்ட...

இறந்தவர்களால் நீதி கோரிப் பேச முடியாது; அவர்களுக்காக நாமே குரலெழுப்ப வேண்டும்!

இறந்தவர்களால் நீதி கோரிப் பேச முடியாது; அவர்களுக்காக நாமே குரலெழுப்ப வேண்டும்!

by Bharathy
May 19, 2026
0

"இலங்கையில் இடம் பெற்ற மீறல்கள் தொடர்பில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிசெய்யப்படுவதை முன்னிறுத்தி நான் எனது குரலையும், அதிகாரத்தையும் பயன்படுத்துவேன். இறந்தவர்களால் நீதிக்காக குரலெழுப்ப...

சுடப்பட்டு பிடிபட்ட சந்தேக நபர் தொடர்பில் விசாரணை!!

சுடப்பட்டு பிடிபட்ட சந்தேக நபர் தொடர்பில் விசாரணை!!

by Bharathy
May 19, 2026
0

பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பிய பின்னர் சுடப்பட்டு கைதான சந்தேக நபர் தொடர்பில் அம்பாறை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அம்பாறை பொது வைத்தியசாலையில் வைத்து...

போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு!

போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு!

by Bharathy
May 19, 2026
0

போதைப்பொருள்  ஒழிப்புத் திட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட  போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் குறித்து அம்பாறை மாவட்ட மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி...

மே 31 முதல் அரச நிறுவனங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்குத் தடை!

மே 31 முதல் அரச நிறுவனங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்குத் தடை!

by Bharathy
May 19, 2026
0

இலங்கையிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும் திடக்கழிவு முகாமைத்துவத்தை வலுப்படுத்துவதற்காகவும், சூழல் மாசுபாட்டைக் குறைப்பதற்காகவும் புதிய அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு நிறுவனங்களின் திடக்கழிவு முகாமைத்துவ (Solid Waste...

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொ*லை  நினைவேந்தல் லண்டனில் அனுஷ்டிப்பு.

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொ*லை  நினைவேந்தல் லண்டனில் அனுஷ்டிப்பு.

by Bharathy
May 19, 2026
0

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொ*லையின் 17ஆம் ஆண்டு நினைவு தினமான மே-18   நினைவேந்தல் லண்டனில் இடம் பெற்றது. குறித்த நினைவேந்தல் நிகழ்வில் ஈழத்தமிழர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதன்...

வாகன இறக்குமதி செலவு குறித்து மத்திய வங்கி ஆளுநர் கவலை!

வாகன இறக்குமதி செலவு குறித்து மத்திய வங்கி ஆளுநர் கவலை!

by Bharathy
May 19, 2026
0

2026 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் வாகன இறக்குமதிக்காக இலங்கை ஏற்கனவே சுமார் 600 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளது. இதனால், ஆண்டுச் செலவினம் முந்தைய...

இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து சரிவில்; மத்திய வங்கி ஆளுநர் விளக்கம்!

இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து சரிவில்; மத்திய வங்கி ஆளுநர் விளக்கம்!

by Bharathy
May 19, 2026
0

மாறிவரும் உலகளாவிய சூழ்நிலைகள் மற்றும் வெளிப்புற அதிர்ச்சிகள் காரணமாக 2026 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக் கண்ணோட்டம் நிச்சயமற்றதாகவே உள்ளது என மத்திய வங்கி ஆளுநர்...

இன்று முதல் வெள்ளி வரை கூடுகிறது நாடாளுமன்றம்!

இன்று முதல் வெள்ளி வரை கூடுகிறது நாடாளுமன்றம்!

by Bharathy
May 19, 2026
0

இன்று செவ்வாய்க்கிழமை மு.ப. 11.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை உண்ணாட்டரசிறை சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்துக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பி.ப....

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி