• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, May 19, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

இறந்தவர்களால் நீதி கோரிப் பேச முடியாது; அவர்களுக்காக நாமே குரலெழுப்ப வேண்டும்!

Bharathy by Bharathy
May 19, 2026
in இலங்கை செய்திகள்
0
இறந்தவர்களால் நீதி கோரிப் பேச முடியாது; அவர்களுக்காக நாமே குரலெழுப்ப வேண்டும்!
Share on FacebookShare on Twitter

“இலங்கையில் இடம் பெற்ற மீறல்கள் தொடர்பில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிசெய்யப்படுவதை முன்னிறுத்தி நான் எனது குரலையும், அதிகாரத்தையும் பயன்படுத்துவேன். இறந்தவர்களால் நீதிக்காக குரலெழுப்ப முடியாது. அவர்களுக்கா அதனைச் செய்வது உயிருடன் இருப்பவர்களின் கடமையாகும்.”

இவ்வாறு பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமாரன் வலியுறுத்தியுள்ளார். 2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு நேற்றுடன் 17 ஆண்டுகள் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில், இது குறித்து உமா குமாரன் தெரிவித்துள்ளதாவது,

“மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுகூரப்படுகின்றது. இலங்கையில் இறுதிக்கட்டப் போரின்போது இராணுவத்தினரால் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களை 17 ஆண்டுகளின் பின்னர் இம்முறை நினைவுகூருகின்றோம்.

போரிலிருந்து தப்பிழைத்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வலியும், வேதனையும் இப்போதும் தொடர்கின்றது. இது உலகளாவிய ரீதியில் பரந்துவாழும் புலம்பெயர் தமிழர்களின் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கின்றது.

குழந்தைகளின் எலும்புக்கூடுகள் உள்ளங்கலாக மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட செம்மணி, சித்துபாத்தி மனிதப்புதைகுழியானது, தமிழ்மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மனிதாபிமான மீறல்களை நினைவூட்டுகின்றது.

ஒவ்வொரு ஆண்டும் கடந்து செல்லும்போது பொறுப்புக்கூறலுக்கான எமது குரல்கள், முன்னெப்போதையும் விட மிக வலுவாக ஓங்கி ஒலிக்கின்றன. நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு உண்மையையும், நீதியையும் உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகும். எனினும் இன்னமும் மௌனமும், தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்குமே தொடர்கின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் இத்தகைய மீறல்கள் மீண்டும் நிகழாத, அமைதியான எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். அதேபோன்று மீறல்களிலிருந்து உயிர்பிழைத்தவர்களின் கதைகள் மௌனமாக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வோம். இறந்தவர்களால் நீதிக்காக குரலெழுப்ப முடியாது. அவர்களுக்கான அதனைச் செய்வது உயிருடன் இருப்பவர்களின் கடமையாகும்.” – என்று பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமாரன் வலியுறுத்தியுள்ளார்.

Related Posts

மாணவர்களின் உயர் கல்விக்கு கைகொடுக்கும் மஸ்கெலியா  – “நடராஜா அறக்கட்டளை” புலமைப் பரிசில்!

மாணவர்களின் உயர் கல்விக்கு கைகொடுக்கும் மஸ்கெலியா – “நடராஜா அறக்கட்டளை” புலமைப் பரிசில்!

by Bharathy
May 19, 2026
0

வசதி குறைந்த மாணவர்களின் உயர்கல்விக்கு கைகொடுத்து மாதாந்த புலமைப் பரிசில் திட்டத்தை கடந்த ஆறு ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் “நடராஜா அறக்கட்டளை” மலையகக் கல்வி வளர்ச்சிக்கு பாரிய...

வானவில் வர்ணம் போல் மஸ்கெலியா நகரை மேம்படுத்த ; பிரதே சபை முதல்வர் முன்வந்துள்ளார் .

வானவில் வர்ணம் போல் மஸ்கெலியா நகரை மேம்படுத்த ; பிரதே சபை முதல்வர் முன்வந்துள்ளார் .

by Bharathy
May 19, 2026
0

1968 ம் ஆண்டில் புதிய மஸ்கெலியா நகரம் உருவாக்கப்பட்டது. அக் காலகட்டத்தில் இந் நகரம் பிரதான வீதிகளை ஒதுக்கி மலை பாங்கான பகுதியில் கட்டப்பட்டது. இதன் காரணமாக...

அருச்சுனா அரசியலை வெளியில் வைக்க வேண்டும் ; விரிவுரையாளர் இளம்பிறையன் சீற்றம்!

அருச்சுனா அரசியலை வெளியில் வைக்க வேண்டும் ; விரிவுரையாளர் இளம்பிறையன் சீற்றம்!

by Bharathy
May 19, 2026
0

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா தனது அரசியலை வெளியில் வைத்துக் கொள்ள வேண்டும். போட்டி அரசியலை பல்கலைக்கழகத்துக்குள் வைத்துக் கொள்ளக் கூடாது என யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சிரேஷ்ட...

சுடப்பட்டு பிடிபட்ட சந்தேக நபர் தொடர்பில் விசாரணை!!

சுடப்பட்டு பிடிபட்ட சந்தேக நபர் தொடர்பில் விசாரணை!!

by Bharathy
May 19, 2026
0

பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பிய பின்னர் சுடப்பட்டு கைதான சந்தேக நபர் தொடர்பில் அம்பாறை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அம்பாறை பொது வைத்தியசாலையில் வைத்து...

போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு!

போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு!

by Bharathy
May 19, 2026
0

போதைப்பொருள்  ஒழிப்புத் திட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட  போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் குறித்து அம்பாறை மாவட்ட மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி...

மே 31 முதல் அரச நிறுவனங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்குத் தடை!

மே 31 முதல் அரச நிறுவனங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்குத் தடை!

by Bharathy
May 19, 2026
0

இலங்கையிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும் திடக்கழிவு முகாமைத்துவத்தை வலுப்படுத்துவதற்காகவும், சூழல் மாசுபாட்டைக் குறைப்பதற்காகவும் புதிய அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு நிறுவனங்களின் திடக்கழிவு முகாமைத்துவ (Solid Waste...

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொ*லை  நினைவேந்தல் லண்டனில் அனுஷ்டிப்பு.

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொ*லை  நினைவேந்தல் லண்டனில் அனுஷ்டிப்பு.

by Bharathy
May 19, 2026
0

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொ*லையின் 17ஆம் ஆண்டு நினைவு தினமான மே-18   நினைவேந்தல் லண்டனில் இடம் பெற்றது. குறித்த நினைவேந்தல் நிகழ்வில் ஈழத்தமிழர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதன்...

வாகன இறக்குமதி செலவு குறித்து மத்திய வங்கி ஆளுநர் கவலை!

வாகன இறக்குமதி செலவு குறித்து மத்திய வங்கி ஆளுநர் கவலை!

by Bharathy
May 19, 2026
0

2026 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் வாகன இறக்குமதிக்காக இலங்கை ஏற்கனவே சுமார் 600 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளது. இதனால், ஆண்டுச் செலவினம் முந்தைய...

இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து சரிவில்; மத்திய வங்கி ஆளுநர் விளக்கம்!

இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து சரிவில்; மத்திய வங்கி ஆளுநர் விளக்கம்!

by Bharathy
May 19, 2026
0

மாறிவரும் உலகளாவிய சூழ்நிலைகள் மற்றும் வெளிப்புற அதிர்ச்சிகள் காரணமாக 2026 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக் கண்ணோட்டம் நிச்சயமற்றதாகவே உள்ளது என மத்திய வங்கி ஆளுநர்...

இன்று முதல் வெள்ளி வரை கூடுகிறது நாடாளுமன்றம்!

இன்று முதல் வெள்ளி வரை கூடுகிறது நாடாளுமன்றம்!

by Bharathy
May 19, 2026
0

இன்று செவ்வாய்க்கிழமை மு.ப. 11.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை உண்ணாட்டரசிறை சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்துக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பி.ப....

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி