• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, May 14, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

கல்விளான் மக்களின் குடியிருப்புக் காணிகள், வீடுகள் பறிக்கப்படக்கூடாது.!

Mathavi by Mathavi
May 14, 2026
in இலங்கை செய்திகள்., முல்லைதீவு செய்திகள்
0
கல்விளான் மக்களின் குடியிருப்புக் காணிகள், வீடுகள் பறிக்கப்படக்கூடாது.!
Share on FacebookShare on Twitter

முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, கல்விளான் கிராம மக்கள் பருவப்பெயர்ச்சி மழைக்காலத்தில் வெள்ள அனர்த்தப் பாதிப்புக்குள்ளாகி வருகின்ற நிலையில் அவர்களை மாற்று இடங்களில் குடியேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.

அவ்வாறு கல்விளான் மக்கள் மாற்று இடங்களில் குடியேற்றப்பட்டாலும், அவர்களால் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்ற வீடுகளைகளை அழித்துவிட்டு, காணிகளை அவர்களிடமிருந்து மீளப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படக்கூடாதென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் வலியுறுத்தலையடுத்து, கல்விளான் மக்கள் தற்போது பயன்படுத்தும் வீடுகள் அழிக்கப்படாதெனவும், காணிகள் அவர்களிடம் மீளப் பெற்றுக்கொள்ளப்படாதெனவும் துணுக்காய் பிரதேச செயலாளரால் இதன்போது பதிலளிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் 13.05.2026 நேற்று இடம்பெற்றபோதே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,
பருவப்பெயர்ச்சி மழைக்காலங்களில் பாலியாறு பெருக்கெடுத்து கல்விளான் பகுதியிலுள்ள குடியிருப்பிற்குள் வெள்ள நீர் உட்புகுவதால் அந்தப் பகுதியில் குடியிருக்கின்ற மக்கள் பலத்த பாதிப்புக்களுக்கு முகங்கொடுத்து வந்தனர்.

இந்நிலையில் குறித்த வெள்ள அனர்த்தத்தினால் தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் பாதிக்கப்படுகின்ற கல்விளான் பகுதியைச் சேரந்த குடியிருப்பாளர்களை வேறு இடங்களில் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

ஆனால் அந்த கல்விளான் பகுதியைச் சேர்ந்த குடியிருப்பாளர்களை வேறு இடங்களில் குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கும்போது, அந்த மக்கள் ஏற்கனவே குடியிருக்கின்ற காணிகள் மற்றும் வீடுகளையும் பிரதேச செயலகம் மீளப் பெற்றுக்கொள்ளக் கூடாது. அந்த மக்களே அந்தக் காணிகளையும், வீடுகளையும் தொடர்ந்து பயன்படுத்த இடமளிக்கப்பட வேண்டும்.

அந்த கல்விளான் குடியிருப்பு அனர்த்த காலங்களில் குடியிருப்பதற்கு பொருத்தமற்ற இடம் என்பதற்காகவே, அந்த மக்களை வேறு இடங்களில் குடியேற்றத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அங்கு அந்த மக்களால் நடப்பட்ட பலன் தரு நீண்டகாலப் பயிர்களும், அந்த மக்களுக்கான பொருளாதார வளங்களும் உள்ளன. எனவே அந்தக் காணிகளையும், வீடுகளையும் அந்த மக்களே பயன்படுத்திக் கொள்ள இடமளிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது வலியுறுத்தினார்.

இந்நிலையில் துணுக்காய் பிரதேச செயலாளர் இதன்போது பதிலளிக்கையில்,

சுற்றுநிருபத்தின்படி அந்தமக்கள் ஏற்கனவே குடியிருக்கின்ற காணிகளிலுள்ள வீடுகள் இடித்தழிப்புச் செய்யப்பட வேண்டும். மீண்டும் அந்த மக்கள் அங்கு குடியிருக்க முடியாது.

எனினும் தாங்கள் கேட்டுக்கொண்டதற்கு அமைவாக நாம் அவ்வாறு செய்யப்போவதில்லை. எம்மால் அந்த வீடுகளை உடைப்பதற்கான அறிவுறுத்தல் வழங்கப்படாது. அவர்கள் அந்த வீடுகளையும், காணிகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அத்தோடு அந்த மக்களுக்கு புதிதாக வழங்கப்படுகின்ற காணிகளுக்கு பிரதேச செயலகத்தால் எதிர்காலத்தில் காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆனால் பழைய வீட்டில் இருக்கும்போது அனர்த்தம் ஏற்பட்டு பாதிப்புக்கள் ஏற்பட்டால் அதற்குரிய நிவாரணங்கள் எவற்றையும் அவர்களால் பெற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறானதொரு கட்டுப்பாடுள்ளது – என்றார்.

Related Posts

நுவரெலியா மாவட்டத்தில் தொடர் மழை.!

நுவரெலியா மாவட்டத்தில் தொடர் மழை.!

by Mathavi
May 14, 2026
0

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று 14 ஆம் திகதி காலை முதல் கடும் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மலையக பகுதியில் உள்ள...

கணேமுல்ல சஞ்சீவ கொ*லை; கம்பஹா ஒஸ்மண்ட் கைது.!

கணேமுல்ல சஞ்சீவ கொ*லை; கம்பஹா ஒஸ்மண்ட் கைது.!

by Mathavi
May 14, 2026
0

பாதாள உலகக் கும்பல் தலைவரான கணேமுல்ல சஞ்சீவ என்பவரைத் திட்டமிட்டு கொலை செய்யவதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில், ஒஸ்மண்ட் குணசேகர எனப்படும் “கம்பஹா ஒஸ்மண்ட் ” என்பவர்...

யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழப்பு.!

யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழப்பு.!

by Mathavi
May 14, 2026
0

பொலன்னறுவை, மெதிரிகிரியைப் பகுதியில் நேற்று மாலை காட்டு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:- மேற்படி விவசாயி தனது...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு.!

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு.!

by Mathavi
May 14, 2026
0

மாத்தளை, கட்டுதெனிய பிரதேசத்தில் வசித்து வந்த 52 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் சந்தேகிக்கின்றனர். கட்டுதெனிய...

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயற்பாட்டாளர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம்.!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயற்பாட்டாளர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம்.!

by Mathavi
May 14, 2026
0

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயற்பாட்டாளர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடு இன்று முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஒட்டுசுட்டான் பிரதேச...

விபத்தில் சிக்கி இளைஞன் ஒருவர் உயிரிழப்பு.!

விபத்தில் சிக்கி இளைஞன் ஒருவர் உயிரிழப்பு.!

by Mathavi
May 14, 2026
0

காலி - பிடிகல - பெலவத்தை பிரதான வீதியின் கரவ்வ 15ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மேல்...

இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம்.!

இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம்.!

by Mathavi
May 14, 2026
0

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தடை செய்யப்பட்ட பொருட்களை வைத்திருப்பதற்கு அனுமதி அளித்த சம்பவம் தொடர்பாக, மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவில் பணியாற்றும் இரு பொலிஸ் கான்ஸ்டபிள்கள்...

பொலிஸ் பரிசோதகர் சுட்டுக் கொ*லை; உந்துருளி ஓட்டுநர் கைது.!

இலஞ்சம் பெற்ற வருமான வரி அலுவலக ஊழியர் கைது.!

by Mathavi
May 14, 2026
0

35 ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்சமாக கோரிப் பெற்றுக்கொண்ட பொலன்னறுவை மாவட்ட வருமான வரி அலுவலக துப்புரவு பணியாளர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால்...

கிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உப்புக்கஞ்சி வழங்கும் நிகழ்வு!

கிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உப்புக்கஞ்சி வழங்கும் நிகழ்வு!

by Bharathy
May 14, 2026
0

கிளிநொச்சி மாவட்டத்தின் முச்சக்கர வண்டிகளின் சாரதிகளின் ஏற்பாட்டில் கிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உப்புக்கஞ்சி இன்று14 ஆம் திகதி வழங்கப்பட்டது . கடந்த 2009 ஆம்...

13 வயது விசேட தேவைக்குட்பட்ட சிறுமி ஒருவர் பல தடவைகள் து*ஷ் பிரயோகம்!

13 வயது விசேட தேவைக்குட்பட்ட சிறுமி ஒருவர் பல தடவைகள் து*ஷ் பிரயோகம்!

by Bharathy
May 13, 2026
0

கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாயவனூர் கிராமத்தில் விசேட தேவைக்குட்பட்ட குடும்பத்திலுள்ள 13 வயதுடைய சிறுமி ஒருவர் பல தடவைகள் பா*லியல்து*ஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது....

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி