• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, May 14, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு.!

Mathavi by Mathavi
May 11, 2026
in இலங்கை செய்திகள்.
0
தெற்கு அதிவேக வீதியில் கோர விபத்து.!
Share on FacebookShare on Twitter

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி, யட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் – கொழும்பு வீதியின் கபுலுமுல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் யட்டியாந்தோட்டை – பருஸ்ஸெல்ல பகுதியைச் சேர்ந்த 59 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

கரவனெல்ல நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி, எதிரே வந்த பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதியும், பின்னால் பயணித்த 14 வயது சிறுவனும் கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி சாரதி உயிரிழந்தார்.

விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, கேகாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – கண்டி பிரதான வீதியின் பல்லபான பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் ஹேம்மாத்தகம பகுதியைச் சேர்ந்த 59 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொறியொன்றின் பின்னால் வந்த முச்சக்கரவண்டி, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து லொறியுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த சாரதி மற்றும் பின்னால் பயணித்த நபர் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னால் பயணித்தவர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் சடலம் கேகாலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கொழும்பு பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வார்ட் பிளேஸ் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பொரளை சந்தி நோக்கி பயணித்த கார் ஒன்று, வீதியைக் கடக்க முயன்ற பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ஹபரணை பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், இறக்குவானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதம்பை – தெனியாய வீதியின் ஹெந்தரலிய பகுதியில் உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இறக்குவானை நோக்கி பயணித்த உழவு இயந்திரத்தின் கொக்கி உடைந்ததால், கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்துள்ளது.

விபத்தில் உழவு இயந்திரத்தின் சாரதி மற்றும் அதில் பயணித்த நால்வர் காயமடைந்து இரக்குவானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கஹவத்தை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் இறக்குவானை பகுதியைச் சேர்ந்த 68 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இந்த விபத்துக்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts

13 வயது விசேட தேவைக்குட்பட்ட சிறுமி ஒருவர் பல தடவைகள் து*ஷ் பிரயோகம்!

13 வயது விசேட தேவைக்குட்பட்ட சிறுமி ஒருவர் பல தடவைகள் து*ஷ் பிரயோகம்!

by Bharathy
May 13, 2026
0

கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாயவனூர் கிராமத்தில் விசேட தேவைக்குட்பட்ட குடும்பத்திலுள்ள 13 வயதுடைய சிறுமி ஒருவர் பல தடவைகள் பா*லியல்து*ஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது....

யாழில் பொலிஸாரைக் கண்டதும் ஹெரோயினை விழுங்கிய இளைஞர்!

யாழில் பொலிஸாரைக் கண்டதும் ஹெரோயினை விழுங்கிய இளைஞர்!

by Bharathy
May 13, 2026
0

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் கைதில் இருந்து தப்பிப்பதற்காக, தன்னிடம் இருந்த ஹெரோயின் போதைப்பொருள் பொட்டலத்தை விழுங்கிய இளைஞர் ஒருவர், ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம்,...

வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கிடையிலான நில உரிமை தொடர்பான கலந்துரையாடல்.!

வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கிடையிலான நில உரிமை தொடர்பான கலந்துரையாடல்.!

by Mathavi
May 13, 2026
0

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவு மாதிரிக் கிராமத்தில் கிழக்கு மாகாண நில மீட்பு வலையமைப்பினரின் ஏற்பாட்டில் வடக்கு- கிழக்கு மாகாணங்களுக்கிடையிலான நில உரிமை தொடர்பான ஒருங்கிணைந்த கள விஜயமும்...

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நடைபெற்ற சர்வதேச தாதியர் தின நிகழ்வு.!

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நடைபெற்ற சர்வதேச தாதியர் தின நிகழ்வு.!

by Mathavi
May 13, 2026
0

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் தாதியர்களின் பணி தியாகம் மற்றும் மக்களுக்கான சேவையை கௌரவிக்கும் வகையில் சர்வதேச தாதியர் தின நிகழ்வு வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஐ.எல்.எம்....

பாதிக்கப்பட்ட மக்களை நாமே நாடிச் சென்று சேவையாற்ற வேண்டும்.!

பாதிக்கப்பட்ட மக்களை நாமே நாடிச் சென்று சேவையாற்ற வேண்டும்.!

by Mathavi
May 13, 2026
0

பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் தேவைகளுக்காக எங்களை நாடி வரத் தேவையில்லை. நாமே அவர்களை நாடிச் சென்று சேவையாற்ற வேண்டும். அப்படி அவர்கள் தங்களது தேவைகளுக்காக அரச அலுவலகங்களுக்கு...

காணி உரிமைச் சட்டங்கள் மற்றும் அரச காணி முகாமைத்துவம் தொடர்பான செயலமர்வு.!

காணி உரிமைச் சட்டங்கள் மற்றும் அரச காணி முகாமைத்துவம் தொடர்பான செயலமர்வு.!

by Mathavi
May 13, 2026
0

காணி உரிமைச் சட்டங்கள் மற்றும் அரச காணி முகாமைத்துவம் தொடர்பான செயலமர்வு முசலி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை (13) காலை நடைபெற்றது. மன்னார்...

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்.!

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்.!

by Mathavi
May 13, 2026
0

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக வழங்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.

இந்திர விழாவில் சுகாதார சீர்கேடு; 6 வியாபாரிகளுக்கு பிடியாணை.!

யாழில் ஹெரோயினை உடைமையில் வைத்திருந்தவருக்கு கடூழிய சிறைத்தண்டனை.!

by Mathavi
May 13, 2026
0

யாழ்ப்பாணம் - தெல்லிப்பளை பகுதியில் கடந்த 2021 மார்ச் மாதம் 1.44 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு 7 வருட...

வாய் சுகாதாரம் தொடர்பான கண்காட்சியும் விழிப்புணர்வு நிகழ்வும்.!

வாய் சுகாதாரம் தொடர்பான கண்காட்சியும் விழிப்புணர்வு நிகழ்வும்.!

by Mathavi
May 13, 2026
0

உலக வாய் சுகாதார தினத்தையொட்டி முன்பள்ளி மாணவர்களின் வாய் சுகாதாரம் தொடர்பாக பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி...

சம்மாந்துறை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்; முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்.!

சம்மாந்துறை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்; முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்.!

by Mathavi
May 13, 2026
0

சம்மாந்துறை பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை (12) ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா தலைமையில் பிரதேச செயலக...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி