உலக செஞ்சிலுவை தினத்தை சிறப்பிக்கும் முகமாக, இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ் கிளையினரால் இன்றைய தினம் விசேட மரநடுகை நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 8 ஆம் திகதி உலக செஞ்சிலுவை தினமாக உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகின்றது.
அந்த வகையில், சூழல் பாதுகாப்பினை வலியுறுத்தியும் இந்நாளை நினைவுகூர்ந்தும் யாழ்ப்பாணத்தில் இந்த மரநடுகை செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நிகழ்வானது இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ் கிளைத் தலைமை அலுவலக வளாகத்தில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ் கிளைத் தலைவர் திரு. ச. திரவியராசா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இவ் நிகழ்வில் திரு. லின்ரன் – யாழ் கிளை இளைஞர் அணித் தலைவர் மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்தின் உத்தியோகத்தர்கள், யாழ் கிளை இளைஞர் அணியினர் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் இந்த நற்பணி நிகழ்வில் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
மனிதாபிமானப் பணிகளில் முன்னிற்கும் செஞ்சிலுவைச் சங்கம், இன்றைய உலகளாவிய காலநிலை மாற்றத்தைக் கருத்திற்கொண்டு இவ்வாறான பசுமைத் திட்டங்களை முன்னெடுப்பது பாராட்டுக்குரியது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
















