• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, May 10, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு தண்டனை வழங்குவதை விரைவுபடுத்துக.!

Mathavi by Mathavi
May 8, 2026
in இலங்கை செய்திகள்.
0
போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு தண்டனை வழங்குவதை விரைவுபடுத்துக.!
Share on FacebookShare on Twitter

இலங்கையிலிருந்து போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழிப்பதற்குத் தேவையான சட்டத் திருத்தங்கள் மற்றும் மறுசீரமைப்புகளை மிக விரைவாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளுக்குக் கடும் உத்தரவு பிறப்பித்தார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டுச் சபையின் கூட்டத்திலேயே அவர் இதனை வலியுறுத்தினார்.

கைப்பற்றப்படும் போதைப்பொருட்கள் மீண்டும் எக்காரணம் கொண்டும் சமூகத்துக்குள் ஊடுருவுவதைத் தடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி எச்சரித்தார். அவற்றைச் சட்டபூர்வமான நடைமுறைகளின் கீழ் விரைவாக அழிப்பதற்கும், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்குத் தண்டனை வழங்கும் செயற்பாடுகளைத் துரிதப்படுத்துவதற்கும் அவர் அறிவுறுத்தினார்.

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாடு ஆரம்பிக்கப்பட்ட 2025 அக்டோபர் 30 முதல் இதுவரை கிடைத்துள்ள முன்னேற்றங்கள் குறித்து கூட்டத்தில் ஆராயப்பட்டது. அதன் விவரங்கள் வருமாறு,

  • கைது செய்யப்பட்டவர்கள்: ஒரு இலட்சத்து 68 ஆயிரத்து 460 சந்தேகநபர்கள்.
  • கைப்பற்றப்பட்டவை: சுமார் 5437 கிலோ கஞ்சா, 1936 கிலோ ஹெரோயின், 1991 கிலோ ஐஸ் போதைப்பொருள் மற்றும் 15 இலட்சத்திற்கும் அதிகமான போதை மாத்திரைகள்.

இந்தச் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்ட பின்னர் சுற்றிவளைப்புகள் 80 வீதத்தால் அதிகரித்துள்ளன என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை மீட்டெடுப்பதற்காக 2007 ஆம் ஆண்டின் 54 ஆம் இலக்க புனர்வாழ்வு (திருத்த) சட்டமூலத்தை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புனர்வாழ்வு பெற்றவர்கள் மீண்டும் போதைக்கு அடிமையாவதைத் தடுக்க சுயதொழில் பயிற்சிகள் மற்றும் மனப்பாங்கு அபிவிருத்தித் திட்டங்களை மத வழிபாட்டுத் தலங்களை மையப்படுத்தி முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

போதைப்பொருள் தொடர்பான வழக்குகளுக்காகத் தனியான நீதிமன்றத்தை நிறுவுதல் மற்றும் இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கைகளை விரைவாகப் பெற்று வழக்குத் தொடர்வதை துரிதப்படுத்துவது குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. சிறைச்சாலை நெரிசலைத் தவிர்க்க போதைப்பொருள் குற்றவாளிகள் தொடர்பான சட்ட நடவடிக்கைகளை வேகப்படுத்துமாறும் அவர் குறிப்பிட்டார்.

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் விநியோகத்தைத் தடுக்க கல்வி அமைச்சு மற்றும் மகளிர் பணியகம் இணைந்து விசேட திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும், ஜூன் 26 சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பாரிய விழிப்புணர்வுப் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மகா சங்கத்தினர், மதத் தலைவர்கள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முப்படைகளின் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது.!

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது.!

by Mathavi
May 10, 2026
0

நீண்ட காலமாக சூட்சுமமாக கடல் மற்றும் தரை வழியாக ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்....

சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து.!

சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து.!

by Mathavi
May 10, 2026
0

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் இன்று (10) இடம்பெற்ற விபத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் தொழிலாளர்கள் 9 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதியுடன் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர சந்திப்பு.!

ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதியுடன் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர சந்திப்பு.!

by Mathavi
May 10, 2026
0

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஐரோப்பிய வெளி நடவடிக்கை சேவையின் இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதி மரியா காஸ்டிலோ பெர்னாண்டஸ், வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு...

மாணவிகளின் சீருடையில் சிவப்பு மை தெளித்த ஆசிரியர் கைது.!

கஞ்சாவுடன் ஒருவர் கைது.!

by Mathavi
May 10, 2026
0

மன்னார் - உயிலங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில், வட மாகாண குற்றத்தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது, பாரியளவு கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர்...

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வின் மூன்றாம் கட்ட முதற்பகுதி நிறைவு.!

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வின் மூன்றாம் கட்ட முதற்பகுதி நிறைவு.!

by Mathavi
May 10, 2026
0

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் முதலாம் பகுதி நேற்று நிறைவடைந்தது. 12 நாட்கள் இடம்பெற்ற இந்த ஆய்வின் முடிவில், இதுவரை மொத்தம்...

எயார்பஸ் மோசடி; மஹிந்தவுக்கு இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை.!

எயார்பஸ் மோசடி; மஹிந்தவுக்கு இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை.!

by Mathavi
May 10, 2026
0

எயார்பஸ் விமானக் கொள்வனவு மோசடி தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்வரும் 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆஜராகுமாறு இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை...

யாழ். போதனா வைத்தியசாலையில் தீ விபத்து; மீட்சிப் பணிகள் தீவிரம்.!

யாழ். போதனா வைத்தியசாலையில் தீ விபத்து; மீட்சிப் பணிகள் தீவிரம்.!

by Mathavi
May 10, 2026
0

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியசாலையில் இடம்பெற்ற தீ விபத்தால் ஏற்பட்ட இழப்புகளை ஈடு செய்யும் வகையில், உடனடியாக 9 பாரவூர்திகளில் அத்தியாவசிய மருந்துகளைக் கொண்டுவர நடவடிக்கை...

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி; ஒரு பகுதி நிதி அமெரிக்காவில் உள்ள வங்கிக்கு மாற்றம்.!

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி; ஒரு பகுதி நிதி அமெரிக்காவில் உள்ள வங்கிக்கு மாற்றம்.!

by Mathavi
May 10, 2026
0

திறைசேரியின் கணினி கட்டமைப்பிற்குள் ஊடுருவிய மோசடிக் குழுவினர் அவுஸ்திரேலிய நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களில் ஒரு பகுதி நிதியை அமெரிக்காவின் டெலவெயர் மாநிலத்தில்...

கபில சந்திரசேனவின் மரண மர்மம் விலகுமா? – பிரேத பரிசோதனை அறிக்கை நாளை நீதிமன்றில்.!

கபில சந்திரசேனவின் மரண மர்மம் விலகுமா? – பிரேத பரிசோதனை அறிக்கை நாளை நீதிமன்றில்.!

by Mathavi
May 10, 2026
0

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை, நாளை திங்கட்கிழமை கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது....

இலங்கை – வியட்நாம் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு வலுவடையும்.!

இலங்கை – வியட்நாம் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு வலுவடையும்.!

by Mathavi
May 10, 2026
0

இலங்கை மற்றும் வியட்நாம் நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புகளை மேம்படுத்துவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் நேற்றுமுன்தினம் கொழும்பில் நடைபெற்றது. கொழும்பு ஹில்டன்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி