காத்தான்குடியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் ஹம்ஸா கலீல் அவர்கள் நேற்று (02.04.2026) சனிக்கிழமை நள்ளிரவு கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.
தகவல்களுக்கு அமைவாக,
இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவிருந்த தனது மைத்துனரின் வலீமா நிகழ்விற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள காத்தான்குடி கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள திருமண மண்டபத்திற்குச் சென்று கொண்டிருந்த வேளையில், பால்வத்த ஓடை மற்றும் நட்சத்திர சுற்றுச் சந்திக்கு இடைப்பட்ட பகுதியில் அவரை வழிமறித்த சாவிக்கொத்து சுயேட்சைக் குழுவினர் சரமாரியாக தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலுக்கு உள்ளான ஹம்ஸா கலீல் அவர்கள் முதலில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவரது உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தாக்குதலில் தொடர்புடையதாகக் கூறப்படும் சாவிக்கொத்து குழுவினர் தாக்கிவிட்டு உடனடியாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முன்னெச்சரிக்கையாக முறைப்பாடு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக உரிய அதிகாரிகள் விரிவான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.










