எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக எதிர்வரும் காலப்பகுதியில் மின்கட்டணம் மீண்டும் உயரக்கூடும் என்றும், அது மக்களுக்கு கடினமானதாக அமையும் என்றும் மின்சாரத்துறை மறுசீரமைப்பு செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் புபுது நிரோஷன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், எரிபொருள் தட்டுப்பாடு, வறட்சியான காலநிலை மற்றும் நிலக்கரி பற்றாக்குறை போன்ற காரணங்களால் மின்சார உற்பத்தி செலவுகள் அதிகரித்துள்ளன என்றும் குறிப்பிட்டார்.
மின்கட்டண திருத்தம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட யோசனையின் அடிப்படையில் ஏற்கனவே 10 சதவீத உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் மேலும் அதிகரிப்பு தவிர்க்க முடியாததாக இருக்கலாம் என்றும் அவர் எச்சரித்தார்.
அதேவேளை, இந்த நெருக்கடியை சமாளிக்க மாற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களை மேம்படுத்த புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதுடன், புதிய முதலீடுகளை ஈர்க்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.










