உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

மாகாண சபைத் தேர்தல் இவ்வருட இறுதியில்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
31 பார்வைகள்

நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை இவ்வருட இறுதிக்குள் நடத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளது. அத்துடன், எதிர்வரும் ஜூன் மாதத்துக்கு முன்னர் தேர்தலுக்கான திகதி மற்றும் எந்த முறைமையின் கீழ் தேர்தலை நடத்துவது என்பது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடவும் அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த உத்தேசித்த மாகாண சபைத் தேர்தலில், புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களுக்கும் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடத்துவது என்பது குறித்து ஆராய்வதற்காக அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள குழு இவ்வாரம் கூடவுள்ளது.

இக்கூட்டத்தின் போது தேர்தல் முறைமை மற்றும் புலம்பெயர் இலங்கையர்களுக்கான வாக்குரிமை தொடர்பான பரிந்துரைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.

இது தொடர்பான முக்கிய அறிவிப்புகள் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளின் போது அரச தரப்பால் வெளியிடப்படவுள்ளன. அத்துடன், குறித்த குழுவின் பரிந்துரைகளை ஜூன் மாதத்துக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.

புலம்பெயர் இலங்கையர்களுக்கான வாக்குரிமை குறித்து கொழும்பைத் தளமாகக் கொண்டு இயங்கும் பன்னாட்டு இராஜதந்திர மையங்களுடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஏற்கனவே கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தார். இதன்போது எட்டப்பட்ட தீர்மானங்கள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே இந்த வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இவ்வருடத்துடன் நிறைவடைகின்றது. இந்தச் சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு மனித உரிமைகள், நல்லாட்சி உள்ளிட்ட 27 நிபந்தனைகளை இலங்கை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. இதில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது ஆகியன பிரதான நிபந்தனைகளாக உள்ளன.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மீளாய்வுக் கூட்டத் தொடரில் இலங்கை மீது தேவையற்ற அழுத்தங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கில், அதற்கு முன்னதாகவே தேர்தலுக்கான திகதியை அறிவிக்க அரசு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொடர்ச்சியான ஏமாற்றுதல்களால் இலங்கை முற்றாக ஸ்தம்பித்துள்ளது : சஜித் குற்றச்சாட்டு!

தொடர்ச்சியாக இரண்டு சந்தர்ப்பங்களில் இந்நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, 2019ஆம் ஆண்டில் ஏமாந்து நாடு வங்குரோத்தடைந்தது போல், 2024 இலும்…

48 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டுக்கு அனைவரும் பூரண ஆதரவு வழங்க வேண்டும்! – தாயகச் செயலணி அழைப்பு

எதிர்வரும் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி, வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச மாநாட்டுக்கு…

49 0 0
இலங்கை செய்திகள்

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி.!

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 தொழிலாளர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று 27 ஆம் திகதி மாலை 3 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஆர்.…

55 0 0
இலங்கை செய்திகள்

விறகு வெட்டச் சென்ற மூவருக்கு நேர்ந்த துயரம்.!

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை தோட்டத்தில் உள்ள இரு மாணவர்கள் உட்பட மூவர் விறகு வெட்டச் சென்ற போது மின்சார தாக்குதலுக்கு இலக்கான நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில்…

40 0 0