• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, May 19, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

மாகாண சபைத் தேர்தல் இவ்வருட இறுதியில்.!

Mathavi by Mathavi
March 15, 2026
in இலங்கை செய்திகள்.
0
மாகாண சபைத் தேர்தல் இவ்வருட இறுதியில்.!
Share on FacebookShare on Twitter

நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை இவ்வருட இறுதிக்குள் நடத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளது. அத்துடன், எதிர்வரும் ஜூன் மாதத்துக்கு முன்னர் தேர்தலுக்கான திகதி மற்றும் எந்த முறைமையின் கீழ் தேர்தலை நடத்துவது என்பது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடவும் அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த உத்தேசித்த மாகாண சபைத் தேர்தலில், புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களுக்கும் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடத்துவது என்பது குறித்து ஆராய்வதற்காக அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள குழு இவ்வாரம் கூடவுள்ளது.

இக்கூட்டத்தின் போது தேர்தல் முறைமை மற்றும் புலம்பெயர் இலங்கையர்களுக்கான வாக்குரிமை தொடர்பான பரிந்துரைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.

இது தொடர்பான முக்கிய அறிவிப்புகள் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளின் போது அரச தரப்பால் வெளியிடப்படவுள்ளன. அத்துடன், குறித்த குழுவின் பரிந்துரைகளை ஜூன் மாதத்துக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.

புலம்பெயர் இலங்கையர்களுக்கான வாக்குரிமை குறித்து கொழும்பைத் தளமாகக் கொண்டு இயங்கும் பன்னாட்டு இராஜதந்திர மையங்களுடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஏற்கனவே கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தார். இதன்போது எட்டப்பட்ட தீர்மானங்கள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே இந்த வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இவ்வருடத்துடன் நிறைவடைகின்றது. இந்தச் சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு மனித உரிமைகள், நல்லாட்சி உள்ளிட்ட 27 நிபந்தனைகளை இலங்கை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. இதில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது ஆகியன பிரதான நிபந்தனைகளாக உள்ளன.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மீளாய்வுக் கூட்டத் தொடரில் இலங்கை மீது தேவையற்ற அழுத்தங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கில், அதற்கு முன்னதாகவே தேர்தலுக்கான திகதியை அறிவிக்க அரசு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

பிரபல மோசடி மன்னன் மொஹமட் ஆதில் அதிரடி கைது.!

பிரபல மோசடி மன்னன் மொஹமட் ஆதில் அதிரடி கைது.!

by Mathavi
May 19, 2026
0

வெளிநாடு அனுப்புவதாகக் கூறி நூற்றுக்கணக்கான மக்களிடம் பெருந்தொகை பணத்தை மோசடி செய்து குச்சவெளி பொலிஸார் மற்றும் அடியாட்களுடன் சுகபோகத்தை அனுபவித்து வந்த மொஹமட் ஆதில் என்பவர் குற்றத்தடுப்பு...

டயகம வெஸ்ட் தோட்ட மக்களுக்கும் முகாமைத்துவத்திற்கும் இடையிலான பிரச்சினைகளுக்கு தீர்வு.!

டயகம வெஸ்ட் தோட்ட மக்களுக்கும் முகாமைத்துவத்திற்கும் இடையிலான பிரச்சினைகளுக்கு தீர்வு.!

by Mathavi
May 19, 2026
0

குறுகிய காலமாக முறுகல் நிலையில் காணப்பட்ட டயகம வெஸ்ட் மூன்றாவது டிவிஷன் தோட்ட மக்களுக்கும் முகாமைத்துவத்திற்கும் இடையிலான பிரச்சினைகள் நேற்று ஹட்டன் தொழில் ஆணையாளர் முன்னிலையில் நடைபெற்ற...

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் 85,905 அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றல்.!

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் 85,905 அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றல்.!

by Mathavi
May 19, 2026
0

கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் முப்பத்தெட்டு இலட்சத்து தொன்னூற்றேழாயிரத்து எழுநூற்று ஜம்பத்தெட்டு சதுரமீற்றர் பரப்பளவில் (3,897,758) இருந்து எண்பத்தையாயிரத்து தொளாயிரத்தைந்து (85,905) அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப்...

ஜெனிவாவால் பயனே இல்லை; பாதிக்கப்பட்ட மக்களுக்கு எமது நாட்டிலேயே தீர்வு.!

ஜெனிவாவால் பயனே இல்லை; பாதிக்கப்பட்ட மக்களுக்கு எமது நாட்டிலேயே தீர்வு.!

by Mathavi
May 19, 2026
0

"மூன்று தசாப்த கால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜெனிவா ஊடாகத் தீர்வுகளை வழங்குவதில் எந்தப் பயனும் இல்லை. எமது நாட்டின் பிரச்சினைகளை எமது நாட்டுக்குள்ளேயே தீர்த்துக்கொள்ள வேண்டும்."...

புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வலைகள் மற்றும் படகுகளுக்கான இழப்பீடுகள் வழங்க நடவடிக்கை.!

புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வலைகள் மற்றும் படகுகளுக்கான இழப்பீடுகள் வழங்க நடவடிக்கை.!

by Mathavi
May 19, 2026
0

வட மாகாணத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வலை மற்றும் படகுகளுக்கான இழப்பீடுகள், அதேபோன்று அதன் சேதாரங்களை சரி செய்வதற்கான செயற்பாடுகளும் நடைபெற்று வருவதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின்...

கபில சந்திரசேனவின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காட்சிகள் தொடர்பில் வெளியான தகவல்.!

கபில சந்திரசேனவின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காட்சிகள் தொடர்பில் வெளியான தகவல்.!

by Mathavi
May 19, 2026
0

மர்மமான முறையில் உயிரிழந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன வசித்து வந்த வீட்டில் சி.சி.டி.வி காட்சிகள் பதிவாகவில்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு.!

இளம் குடும்பஸ்தர் கொ*லை.!

by Mathavi
May 19, 2026
0

இரத்தினபுரி, எஹெலியகொட - பொல்வத்தை கடை சந்திப்புக்கு அருகில் நபரொருவர் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்டவர் அவிசாவளையைச் சேர்ந்த நுவன்...

எரிபொருள் விநியோகத்துக்கான கியூ.ஆர் குறியீடு தொடர்பில் வெளியான அறிவிப்பு.!

எரிபொருள் விநியோகத்துக்கான கியூ.ஆர் குறியீடு தொடர்பில் வெளியான அறிவிப்பு.!

by Mathavi
May 19, 2026
0

எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், எரிபொருள் விநியோகத்துக்காக அறிமுகப்படுத்தப்பட்ட கியூ.ஆர் குறியீட்டு முறைமை தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில்...

யாழில் மின்னல் தாக்கி இளைஞன் உயிரிழப்பு.!

மண்மேட்டிலிருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு.!

by Mathavi
May 19, 2026
0

நாவலப்பிட்டிய, பெனிதுடுமுல்ல பகுதியில் நேற்று (18) திங்கட்கிழமை மண்மேடு ஒன்றிலிருந்து கீழே தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் பெனிதுடுமுல்ல பகுதியைச் சேர்ந்த 58...

அரச வாடி வீட்டில் வெடிப்புச் சம்பவம்.!

அரச வாடி வீட்டில் வெடிப்புச் சம்பவம்.!

by Mathavi
May 19, 2026
0

கெகிராவ வாடி வீட்டின் சமையலறைக்குள் இன்று (19) காலை வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் அங்கிருந்த நபர் ஒருவர் பலத்த காயமடைந்து தம்புள்ளை ஆதார...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி