• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, July 1, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

வெள்ள நஷ்ட ஈடுகளை உடனடியாக வழங்க வேண்டும் – கமக்காரர்கள் அதிகாரசபை கோரிக்கை.!

admin by admin
January 29, 2026
in இலங்கை செய்திகள்.
0
வெள்ள நஷ்ட ஈடுகளை உடனடியாக வழங்க வேண்டும் – கமக்காரர்கள் அதிகாரசபை கோரிக்கை.!
Share on FacebookShare on Twitter

2025 மற்றும் 2026 ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளத்தினால் ஏற்பட்ட பகுதி மற்றும் முழுமையான சேதங்களுக்கு இதுவரை உரிய நஷ்டஈடுகள் வழங்கப்படாமல் உள்ள நிலையில், அதனை கருத்தில் கொண்டு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த நஷ்டஈடுகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என, மட்டக்களப்பு மாவட்ட தேசிய கமக்காரர்கள் அதிகாரசபையின் தலைவர் சந்திரசேகரம் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.


மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட தேசிய கமக்காரர்கள் அமைப்புகளின் அதிகாரசபை உறுப்பினர்களின் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர், 2025–2026 பெரும் போக நெல் அறுவடை கடந்த 15 நாட்களாக மாவட்டத்தில் நடைபெற்று வருவதாகவும், ஏற்கனவே ஏற்பட்ட பெருவெள்ளத்தால் மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டதுடன், தற்போது அறக்கொத்தி தாக்கம் காரணமாகவும் விவசாயிகள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.


இவ்வாறான சூழ்நிலையில், நெல்லுக்கான நிர்ணய விலையை முந்தைய அரசாங்கத்தை விட தற்போதைய அரசாங்கம் முன்கூட்டியே அறிவித்தமைக்கு நன்றியையும் அவர் தெரிவித்தார். இருப்பினும், நிர்ணய விலை அறிவிக்கப்பட்டிருந்தாலும், மட்டக்களப்பு நெல் சந்தைப்படுத்தல் சபையை திறந்து அரசாங்கம் நேரடியாக நெல்லைக் கொள்வனவு செய்யாவிட்டால், இடைத்தரகர்கள் குறைந்த விலையில் நெல்லைக் கொள்வனவு செய்து விவசாயிகளை சுரண்டும் நிலை தொடரும் என எச்சரித்தார்.தற்போதைய நிலையில் இடைத்தரகர்கள் நெல்லை ரூ.55–60 வரையிலான விலையில் கொள்வனவு செய்து வருவதாகவும், ஏற்கனவே மாவட்டத்தில் சராசரியாக 15 மூடை மட்டுமே விளைவு கிடைத்துள்ள நிலையில், இந்த நிலை விவசாயிகளை மேலும் பாதிக்கக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, இடைத்தரகர்களுக்கு வாய்ப்பு வழங்காமல், உடனடியாக நெல் சந்தைப்படுத்தல் சபையை திறக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.நெல் சந்தைப்படுத்தல் சபையின் பிராந்திய முகாமையாளர் தன்னுடன் தொடர்பு கொண்டு, எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் கட்டாயமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபை திறக்கப்பட்டு நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்படும் என அறிவித்துள்ளதாகவும், அது நடைமுறைப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


மேலும், 2024 மற்றும் 2025 ஆண்டுகளில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக சமர்ப்பிக்கப்பட்ட நஷ்டஈடு விண்ணப்பங்களுக்கு இதுவரை எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை என்றும், அதனையும் அரசாங்கம் பரிசீலனை செய்து உரிய நஷ்டஈடுகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.அதேபோன்று, 2025 மற்றும் 2026 ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளத்தினால் ஏற்பட்ட பகுதி மற்றும் முழுமையான சேதங்களுக்கும் இன்னும் நஷ்டஈடு வழங்கப்படாத நிலையில், அவற்றையும் கருத்தில் கொண்டு உடனடியாக நஷ்டஈடுகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.


அரசாங்கம் நெல்லுக்கான நிர்ணய விலையாக ரூ.120 அறிவித்துள்ளமை நல்ல விடயமாக இருந்தாலும், உற்பத்தி செலவுகளை கருத்தில் கொண்டால் அந்த விலை போதுமானதாக இல்லை என்றும், விவசாயிகள் நியாயமான வருமானம் பெறும் வகையில் விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்றும் சந்திரமோகன் தெரிவித்தார்.

Related Posts

யானை தாக்கி குடும்பஸ்தர் படுகாயம்.!

யானை தாக்கி குடும்பஸ்தர் படுகாயம்.!

by Mathavi
July 1, 2026
0

யானை தாக்கி படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட குடும்பஸ்தர் மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் வளத்தாப்பிட்டி - புத்தங்கல எல்லைப் பகுதியில்...

ஊடகங்களை அடக்குகிறோம் என்பது அப்பட்டமான பொய்.!

ஊடகங்களை அடக்குகிறோம் என்பது அப்பட்டமான பொய்.!

by Mathavi
July 1, 2026
0

"நாம் ஊடகங்களை அடக்குவதாக தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் திட்டமிட்டு போலியான தகவல்களைப் பரப்பி வருகின்றனர்" என வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் உப தவிசாளர்...

இலங்கையிலேயே மிகச் சிறப்பாக செயற்படும் வட மாகாண சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள்.!

இலங்கையிலேயே மிகச் சிறப்பாக செயற்படும் வட மாகாண சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள்.!

by Mathavi
July 1, 2026
0

"இலங்கையிலேயே வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் மிகவும் சிறப்பாகச் செயற்படுகின்றார்கள். ஏனைய மாகாணங்களில் நடைபெறும் கலந்துரையாடல்களின் போது, இவர்களது சேவையையே நாம் முன்னுதாரணமாகச் சுட்டிக்காட்டுகின்றோம்." -...

பெண்களைத் துன்புறுத்துபவர்களின் முகத்திரைகளைக் கிழித்தெறிவோம்.!

பெண்களைத் துன்புறுத்துபவர்களின் முகத்திரைகளைக் கிழித்தெறிவோம்.!

by Mathavi
July 1, 2026
0

வடக்கு மாகாண சபை மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும், தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தகமும் வாணிபமும் அமைச்சின்...

என் பக்கமிருந்த தவறை ஒப்புக்கொள்கிறேன்; நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்கின்றேன்.!

என் பக்கமிருந்த தவறை ஒப்புக்கொள்கிறேன்; நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்கின்றேன்.!

by Mathavi
July 1, 2026
0

'மிஸ்டர் கொத்து' நிறுவனத்தின் உரிமையாளரான விராஜ் விக்கிரமநாயக்க, மகரகம பொலிஸாரால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என அவரது தரப்பு சட்டத்தரணி ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். இந்த...

கைது செய்யச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல்; சந்தேகநபர் தப்பியோட்டம்.!

கைது செய்யச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல்; சந்தேகநபர் தப்பியோட்டம்.!

by Mathavi
July 1, 2026
0

எல்பிட்டிய பகுதியில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்யச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் மீது கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் நடத்தி, கைவிலங்குடன் சந்தேக நபர்...

வளர்ப்பு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு.!

வளர்ப்பு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு.!

by Mathavi
July 1, 2026
0

குண்டசாலை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மெணிக்ஹின்ன பகுதியில், "முது" என்ற வளர்ப்பு யானை தாக்கியதில் 61 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை (30) இரவு...

கொழும்பு இராமநாதன் கல்லூரி மாணவியின் உயிரிழப்பு; ஒரு வருடமாகியும் முடியாத விசாரணை.!

கொழும்பு இராமநாதன் கல்லூரி மாணவியின் உயிரிழப்பு; ஒரு வருடமாகியும் முடியாத விசாரணை.!

by Mathavi
July 1, 2026
0

இலங்கையில் அண்மைக் காலமாக சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் துஷ்பிரயோகங்களும் அதிகரித்து வரும் நிலையில், அது தொடர்பான நீதிமன்ற விசாரணைகளில் நிலவும் மந்தகதி மற்றும் தாமதங்கள்...

வெவ்வேறு இடங்களில் கோடாவுடனும் மதுபானத்துடனும் மூவர் சிக்கினர்.!

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீனப் பிரஜைகள் கைது.!

by Mathavi
July 1, 2026
0

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 10.8 மில்லியன் ரூபாய் பெறுமதியுள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டுக்குள் சட்டவிரோதமாகக் கடத்த முயன்ற நான்கு சீனப் பிரஜைகள் சுங்க...

ஹரக் கட்டாவை விடுவிக்க மனைவியிடம் இலஞ்சம்; சட்டத்தரணிகளுக்கு எதிராக முறைப்பாடு.!

ஹரக் கட்டாவை விடுவிக்க மனைவியிடம் இலஞ்சம்; சட்டத்தரணிகளுக்கு எதிராக முறைப்பாடு.!

by Mathavi
July 1, 2026
0

பிரபல பாதாள உலகக் குழுத் தலைவரான 'ஹரக் கட்டா' என்பவரை விடுவிப்பதற்காக, அவரது மனைவியிடமிருந்து பெருந்தொகை பணத்தை இலஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படும் மூன்று சட்டத்தரணிகளுக்கு எதிராக இலஞ்ச,...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி