1947
இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற்றது.
1831
நாட்டர்னர் தலைமையிலான அடிமைகளின் கிளர்ச்சி முறியடிக்கப்பட்டது.
1839
கிங் சீனர்களுடன் போரிடுவதற்காக ஐக்கிய இராச்சியம் ஆங்காங்கைக் கைப்பற்றியது. இது பின்னர் முதலாம் அபினிப் போர் என அழைக்கப்பட்டது.
1914
முதலாம் உலகப் போர்: ஜப்பான் ஜேர்மனியுடன் போரை அறிவித்தது.
1921
பிரித்தானிய வான்படைக் கப்பல் ஆர்-38 இங்கிலாந்தில் மூழ்கியதில் 49 பிரித்தானிய, அமெரிக்கப் படையினரில், நால்வர் மட்டுமே உயிர் தப்பினர்.
1929
பாலஸ்தீனத்தில் எபிரோன் நகரில் அரபுக்கள் யூதர்களைத் தாக்கி அவர்களில் 65 பேரைக் கொன்றனர். ஏனையோர் நகரில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
1939
இரண்டாம் உலகப் போர்: நாட்சி ஜேர்மனியும் சோவியத் ஒன்றியமும் போர் தவிர்ப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. பால்ட்டிக் நாடுகள், பின்லாந்து, உருமேனியா, போலந்து ஆகியவற்றை தமக்கிடையே பகிர்வது என்றும் இரகசிய முடிவெடுக்கப்பட்டது.
1942
இரண்டாம் உலகப் போர்: சுடாலின்கிராட் சண்டை ஆரம்பமானது.
1943
இரண்டாம் உலகப் போர்: கார்கீவ் விடுவிக்கப்பட்டது.
1944
இரண்டாம் உலகப் போர்: மர்சேய் கூட்டுப் படைகளினால் விடுவிக்கப்பட்டது.
1944
இரண்டாம் உலகப் போர்: உருமேனியா மன்னர் மைக்கேல் நாட்சி – ஆதரவு அரசை ஏற்க மறுத்தார். அரசுத்தலைவர் இயோன் அந்தனெசுக்கு கைது செய்யப்பட்டார். உருமேனியா கூட்டுப் படைகளுக்கு ஆதரவளிக்க ஆரம்பித்தது.
1944
இரண்டாம் உலகப் போர்: அமெரிக்காவின் போர் விமானம் ஒன்று இங்கிலாந்தில் பிரெக்கில்டன் என்ற இடத்தில் உள்ள பாடசாலை மீது மோதியதில் 61 பேர் கொல்லப்பட்டனர்.
1948
44 நாடுகளில் இருந்து 147 திருச்சபைகள் இணைந்து “திருச்சபைகளின் உலகப் பேரவை” என்ற அமைப்பு நிறுவப்பட்டது.
1948
ஏ. கே. செட்டியார் தயாரித்த காந்தி பற்றிய முதல் ஆவணத் திரைப்படம் தமிழிலும், தெலுங்கிலும் வெளியிடப்பட்டன.
1966
“லூனார் ஆர்பிட்டர் 1” விண்கலம் முதல் தடவையாக நிலாவி சுற்றுவட்டத்திருந்து பூமியைப் படம் பிடித்தது.
1973
சுவீடன், ஸ்டாக்ஹோம் நகரில் இடம்பெற்ற வங்கிக் கொள்ளை ஒன்று பணயக் கைதிகள் விவகாரமாக உருவெடுத்தது. அடுத்த ஐந்து நாட்களில் பணயக் கைதிகள் கொள்ளைக்காரர்களுக்குப் பரிவு காட்ட ஆரம்பித்தனர். இது “இசுட்டாக்குஃகோம் நோய்க்கூட்டறிகுறி” என்ற சொற்றொடரை உருவாக்கியது.
1989
பாடல் புரட்சி: எசுத்தோனியா, லாத்வியா லித்துவேனியாவைச் சேர்ந்த இரண்டு மில்லியன் மக்கள் வில்னியஸ் – தாலின் நெடுஞ்சாலையில் கைகோர்த்து பாடல்கள் பாடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1990
ஆர்மேனியா சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலை பெற்றது.
1990
மேற்கு ஜேர்மனி மற்றும் கிழக்கு ஜேர்மனி ஆகியன அக்டோபர் 3 இல் இணையவிருப்பதாக அறிவித்தன.
2000
கல்ஃப் ஏர் விமானம் பாரசீக வளைகுடாவின் மனாமா அருகே வீழ்ந்ததில் 143 பேர் உயிரிழந்தனர்.
2006
நியூசிலாந்தின் ஆளுநராக ஆனந்த் சத்தியானந்த் பதவியேற்றார்.
2007
1918 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்ட ரஷ்யப் பேரரசின் கடைசி அரச குடும்பத்தினரான இளவரசர் அலெக்சி, இளவரசி அனஸ்தாசியா ஆகியோரின் எச்சங்கள் ரஷ்யாவின் எக்கத்தரீன்பூர்க் நகரில் கண்டுபிடிக்கப்பட்டன.
2011
லிபிய உள்நாட்டுப் போர்: லிபியத் தலைவர் முஅம்மர் அல் கதாஃபி அரசுத்தலைவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். தேசிய இடைக்காலப் பேரவை ஆட்சியைக் கைப்பற்றியது.
2013
பொலிவியாவில் சான்ட்டா குரூசு டெ லா சியேறா நகரில் இடம்பெற்ற சிறைக் கைதிகளின் கலவரத்தில் 31 பேர் உயிரிழந்தனர்.















