1812
இலங்கையில் பாப்திச சபை நிறுவப்பட்டது.
1812
கொழும்பு நூலகம் அமைக்கப்பட்டது.
1977
இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்திற்குள் தமிழர்கள் மீது இனப்படுகொலைகள் நடத்தப்பட்டதில் 300 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
1985
ஈழத் தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் 2ஆம் கட்ட திம்புப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின.
1990
வீரமுனைப் படுகொலைகள், 1990: அம்பாறை, வீரமுனையில் நானூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
2005
இலங்கைவின் வெளிவிவகார அமைச்சர் லக்சுமன் கதிர்காமர் கொழும்பில் அவரது வீட்டில், நீச்சல் தடாகத்தில் நீராடும் போது சுடப்பட்டு அடுத்த நாள் இறந்தார்.
2005
இலங்கையின் தமிழ் வானொலி, தொலைக்காட்சி அறிவிப்பாளர் ரேலங்கி செல்வராஜா கொலை செய்யப்பட்டார்.
2006
இலங்கைத் தமிழ் அரசியல் செயற்பாட்டாளர் கேதீஸ் லோகநாதன் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1851
ஐசாக் சிங்கர் தனது தையல் இயந்திரத்துக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.
1865
பிரித்தானிய மருத்துவர் ஜோசப் லிஸ்டர் தனது முதலாவது நோய்நுண்மத் தடுப்பு முறை அறுவை சிகிச்சையை மேற்கொண்டார்.
1914
முதலாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம் ஆத்திரியா – அங்கேரி மீது போர் தொடுத்தது.
1944
நாட்சி ஜேர்மனிப் படைகள் போலந்தில் வோலா என்ற இடத்தில் நடத்திய படுகொலைகள் முடிவுக்கு வந்தன. 40,000 பேர் கொல்லப்பட்டனர்.
1950
கொரியப் போர்: அமெரிக்க போர்க்கைதிகள் 75 பேர் வடகொரிய இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர்.
1952
மாஸ்கோவில் 13 யூத இன அறிவியலாளர்கள், கவிஞர்கள் கொல்லப்பட்டனர்.
1953
கிரேக்கத்தில் இயோனியத் தீவுகளில் 7.2 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 445 முதல் 800 பேர் வரை உயிரிழந்தனர்.
1953
சோவியத் ஒன்றியம் ஜோ 4 என்ற தனது முதலாவது ஐதரசன் குண்டு சோதனையை நடத்தியது.
1960
எக்கோ I என்ற நாசாவின் முதலாவது தகவல் தொடர்பு செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
1964
இனவெறிக் கொள்கை காரணமாக தென்னாபிரிக்கா ஒலிம்பிக்கில் விளையாடத் தடை செய்யப்பட்டது.
1976
லெபனான் உள்நாட்டுப் போர்: தெல் அல்-சாத்தார் என்ற இடத்தில் 1,000 முதல் 3,500 வரையான பாலத்தீனர்கள் கொல்லப்பட்டனர்.
1981
ஐபிஎம் தனி மேசைக் கணினி வெளியிடப்பட்டது.
1985
ஜப்பானில் விமானம் ஒன்று ஒசுத்தாக்கா மலையில் மோதியதில் 520 பேர் உயிரிழந்தனர்.
1990
அமெரிக்காவின் தெற்கு டகோட்டாவில் மிகப்பெரியதும், முழுமையானதுமான டைரனொசோரசு என்னும் டைனசோரின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது.
2000
கூர்ஸ்க் என்ற உருசியக் கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் பயிற்சியின் போது 118 பேருடன் பாரெண்ட்சு கடலில் மூழ்கியது.
2005
மாலை தீவுகளில் அரசுக்கெதிராக கிளர்ச்சி இடம்பெற்றது.
2015
சீனாவில் தியான்ஜின் மாகாணத்தில் நிகழ்ந்த இரண்டு பெரும் குண்டுவெடிப்புகளில் 173 பேர் உயிரிழந்தனர், 800 பேர் காயமடைந்தனர்.















