1858
இலங்கை தொடருந்து சேவையை ஆளுநர் சேர் என்றி ஜார்ஜ் வார்டு ஆரம்பித்து வைத்தார்.
1990
கிழக்கிலங்கையில் காத்தான்குடியில் முஸ்லிம் பள்ளிவாசலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் பெண்கள், குழந்தைகள் உட்பட 103 பேர் கொல்லப்பட்டனர்.
2006
திருகோணமலை தோப்பூர் அல் நூராப் பாடசாலையில் தங்கியிருந்த பொதுமக்கள் 12 பேர் இராணுவத்தினரின் எறிகணை வீச்சில் கொல்லப்பட்டனர்.
1857
சிப்பாய்க் கிளர்ச்சி: அரா என்ற இடத்தில் 10,000 இற்கும் அதிகமானோர் எட்டு நாட்களாக முற்றுகையிட்டிருந்த 68 பிரித்தானியப் படைகளுடனான ஒரு வலுவான கோட்டை விடுவிக்கப்பட்டது.
1860
நியூசிலாந்தில் இரண்டாவது மாவோரி போர் ஆரம்பமானது.
1914
முதலாம் உலகப் போர்: ஜேர்மனி பிரான்சுடன் போர் தொடுத்தது. உருமேனியா நடுநிலை வகிப்பதாக அறிவித்தது.
1936
உருசியாவின் ரியாசன் மாகாணத்தில் தொழிற்துறைக் குடியிருப்பு ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 1,200 பேர் உயிரிழந்தனர், 20 பேர் மட்டுமே உயிர் தப்பினர்.
1940
இரண்டாம் உலகப் போர்: இத்தாலியப் படையினர் பிரித்தானிய சோமாலிலாந்து மீது போர் தொடுத்தது.
1946
உலகின் முதலாவது பல வணிக நோக்குடைய கேளிக்கைப் பூங்கா அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தில் அமைக்கப்பட்டது.
1949
அமெரிக்காவின் என். பி. ஏ. (தேசிய கூடைப்பந்தாட்டச் சங்கம்) அமைப்பு உருவானது.
1959
போர்த்துகலின் அரசக் காவல்துறையினர் போர்த்துக்கீச கினியின் பிசாவு நகரில் பணி நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 50 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
1960
நைஜர் பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
1975
மொரோக்கோவில் தனியார் விமானம் ஒன்று மலையில் மோதியதில் 188 பேர் உயிரிழந்தனர்.
1976
காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
1977
உலகில் பெருமளவு வெளியிடப்பட்ட முதலாவது தனி மேசைக் கணினிகளில் ஒன்றான டிஆர்எஸ்-80 ஐ டாண்டி கார்ப்பரேசன் வெளியிட்டது.
1997
அல்சீரியாவில் இரு கிராமங்களில் இடம்பெற்ற தாக்குதல்களில் 146 கிராமத்தவர்கள் கொல்லப்பட்டனர்.
2010
பாகிஸ்தான், கராச்சியில் உள்ளூர் அரசியல்வாதி ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து இடம்பெற்ற கலவரங்களில் 85 பேர் உயிரிழந்தனர்.
2014
சீனாவின் யுன்னான் மாகாணத்தில் இடம்பெற்ற 6.1 அளவு நிலநடுக்கத்தில் 617 பேர் உயிரிழந்தனர், 2,400 பேர் காயமடைந்தனர்.
2018
ஆப்கானிஸ்தானின் கிழக்கே சியா பள்ளிவாசல் ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் 29 பேர் கொல்லப்பட்டனர், 80 பேர் காயமடைந்தனர்.
2019
அமெரிக்கா, டெக்சாசு மாநிலத்தில் எல் பாசோ நகரில் பல்பொருள் அங்காடி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்சிச் சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டனர், 26 பேர் காயமடைந்தனர்.
















