1989
வல்வெட்டித்துறைப் படுகொலைகள்: யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 63 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
1994
பலாலி இராணுவத்தளத்தை விடுதலைப் புலிகள் தாக்கியதில் உலங்கு வானூர்தி, கவச வண்டி தாக்கியழிக்கப்பட்டன.
2006
திருகோணமலை மாவட்டத்தில் மகிந்தபுர, கிளிவெட்டி, பாலதோப்பு, பச்சனூர் இராணுவ முகாம்களைத் தாக்கி மூதூர் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் நுழைந்தனர்.
1830
பிரான்ஸின் பத்தாம் சார்லசு மன்னர் முடிதுறந்தார். அவரது பேரன் என்றி மன்னராக முடிசூடினார்.
1858
இந்தியாவில் கம்பனி ஆட்சி முடிவுக்கு வந்து பிரித்தானிய அரச ஆட்சி நடைமுறைக்கு வந்தது.
1870
உலகின் முதலாவது சுரங்கத் தொடருந்துச் சேவை லண்டனில் தொடங்கப்பட்டது.
1914
முதலாம் உலகப் போர்: ஜேர்மனியப் படையினர் லக்சம்பர்க்கை ஜேர்மனி ஆக்கிரமித்தது.
1916
முதலாம் உலகப் போர்: லியனார்டோ டாவின்சி என்ற இத்தாலியப் போர்க் கப்பல் ஆத்திரியாவினால் தாரந்தோவில் மூழ்கடிக்கப்பட்டது.
1918
கனேடிய வரலாற்றில் முதற் தடவையாக பொது வேலைநிறுத்தம் வான்கூவர் நகரில் இடம்பெற்றது.
1922
சீனக் குடியரசைத் தாக்கிய சூறாவளியில் 50,000 பேர் வரை உயிரிழந்தனர்.
1932
பாசிட்ரான் (இலத்திரனின் எதிர்மின்னி) கார்ல் ஆண்டர்சன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
1934
ஹிட்லர் ஜேர்மனியின் அரசுத் தலைவரானார்.
1937
ஐக்கிய அமெரிக்காவில் கஞ்சா போதை மருந்தும் அதன் துணை விளைபொருட்களும் தடைசெய்யப்பட்டன.
1939
அணுவாயுதத்தை தயாரிக்க உதவும் மன்காட்டன் திட்டத்தை முன்னெடுக்குமாறு ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், லியோ சிலார்ட் ஆகியோர் அமெரிக்கத் தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட்டிற்குக் கடிதம் எழுதினார்கள்.
1943
இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படகு ஒன்று ஜப்பானியக் கடற்படையினரின் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டது. லெப். ஜான் எஃப். கென்னடி (பின்னாளைய அமெரிக்க அரசுத்தலைவர்) உயிர் தப்பினார்.
1943
போலந்தில் திரெபிலிங்கா வதை முகாமில் நாட்சிகளுக்கு எதிராக யூதர்களின் கிளர்ச்சி இடம்பெற்றது. இவ்வதைமுகாமில் 18 மாதங்களில் 900.000 கைதிகள் கொல்லப்பட்டனர்.
1944
சோசலிச மக்கெடோனியக் குடியரசு உருவானது.
1945
இரண்டாம் உலகப் போர்: தோல்வியடைந்த ஜேர்மனியின் எதிர்காலம் குறித்து விவாதித்த நேச நாடுகளின் பொட்ஸ்டாம் உச்சி மாநாடு நிறைவடைந்தது.
1947
புவனெசு ஐரில் இருந்து சான் டியேகோ நோக்கிச் சென்ற பிரித்தானிய, தென்னமெரிக்க அவ்ரோ விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். இதன் சிதைவுகள் 1998 இல் கண்டுபிடிக்கப்பட்டன.
1968
பிலிப்பைன்ஸில் கசிகுரான் என்ற இடத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் சிக்கி 270 பேர் உயிரிழந்தனர்.
1973
மான் தீவில் டக்லஸ் நகரில் கேளிக்கை நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 51 பேர் உயிரிழந்தனர்.
1980
இத்தாலியில் பொலோனா தொடருந்து நிலையத்தில் குண்டு வெடித்ததில் 85 பேர் கொல்லப்பட்டனர், 200 பேர் காயமடைந்தனர்.
1985
டெல்ட்டா ஏர்லைன்ஸ் 191 விமானம் டாலஸ் – வொர்த் கோட்டை பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 137 பேர் உயிரிழந்தனர்.
1989
பாகிஸ்தான் பொதுநலவாய அமைப்பில் மீண்டும் இணைந்தது.
1990
ஈராக் குவைத்தின் மீது படையெடுத்தது. வளைகுடாப் போர் ஆரம்பமானது.
1999
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் தொடருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 285 பேர் உயிரிழந்தனர்.
2014
சீனாவில் குன்சான் நகரில் தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற வெடிப்பில் 146 பேர் உயிரிழந்தனர்.














