• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, June 28, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

யானை – மனித மோதலைத் தடுப்பதற்கான குழு அமைத்தல் தொடர்பான கலந்துரையாடல்..!

admin by admin
July 31, 2025
in இலங்கை செய்திகள்., கிளிநொச்சி செய்திகள்
0
யானை – மனித மோதலைத் தடுப்பதற்கான குழு அமைத்தல் தொடர்பான கலந்துரையாடல்..!
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சி மாவட்டத்தில் யானை – மனித மோதலைத் தடுப்பதற்கான முகாமைத்துவக் குழுவினை அமைத்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்று (31.07.2025) காலை 9.30 மணிக்கு நடைபெற்றது.

இலங்கை முழுவதும் அதிகரித்து வரும் யானை – மனித மோதல்களால் ஏற்படும் நெருக்கடிகளை தீர்ப்பதற்கான துரிதமானதும், நன்கு ஒருங்கிணைக்கப்பட்டதுமான நடவடிக்கைகளின் முக்கியத்துவம் பெரிதும் வலியுறுத்தப்படுவதனால், யானை – மனித மோதல்களை முகாமை செய்வதற்கும், அவற்றுக்கான நிரந்தரத் தீர்வுகளை வழங்குவதற்குமாக மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் உத்தியோகத்தர் குழுவொன்றினை அமைக்குமாறு ஜனாதிபதி செயலகத்தினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமையை குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில், மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்றைய தினம் நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை, பூநகரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் காட்டு யானைகள் – மனித மோதல் அதிகளவில் காணப்படுகின்றது.

இதன்போது மாவட்டத்தில் நிலவும் யானை – மனித மோதலைத் தவிர்ப்பதற்கான உபாயமுறைகள் குறித்து முகாமைத்துவக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.

யானை – மனித மோதல்கள் உள்ள பகுதிகளில் சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளின் பங்குபற்றலுடன் பிரதேச செயலர் தலைமையில் விசேட கலந்துரையாடல்களை நடாத்தி தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் குழுக்களை நியமித்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இதற்காக இரனைமடு, அக்கராயன், கல்மடு, பூநகரி ஆகிய பிரதேசங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் புதிய யானை வேலிகளை அமைத்தல், விழிப்புணர்வு நடடிக்கைகள், கண்காணிப்பு நடவடிக்கைகள் போன்ற பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர்கள், இராணுவ பொலிஸ் அதிகாரிகள், பூநகாரி பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர், வனஜீவராசிகள் திணைக்களத்தின் பிராந்திய உதவிப் பணிப்பாளர், மாவட்ட அனர்த்த முகாமத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர், கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர், கமநல சேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர், வனஜீவராசிகள் வலயங்களின் உத்தியோகத்தர்கள், துறைசார் திணைக்கள உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Related Posts

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் புதிய தலைவராக சந்திக எபிடகடுவ தெரிவு!

by selvan
June 27, 2026
0

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) 2026/27 ஆம் ஆண்டுக்கான புதிய தலைவராக மருத்துவ நிபுணர் சந்திக எபிடகடுவ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் இன்று (27)...

காணாமல்போன 25 இலட்சம் டொலர் அரச நிதி எங்கே? – அறிக்கை கோரும் எதிர்க்கட்சித் தலைவர்!

by selvan
June 27, 2026
0

மோசடியான முறையில் காணாமல்போன 25 இலட்சம் அமெரிக்க டொலர் அரச தவணைப் பணம் குறித்து அரசு நாடாளுமன்றத்துக்கு முழுமையான அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர்...

சலே உயிரிழக்கும் வரை அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பார்களா? – சலேயின் மனைவி  கேள்வி

சலே உயிரிழக்கும் வரை அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பார்களா? – சலேயின் மனைவி  கேள்வி

by selvan
June 27, 2026
0

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வரும் அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

நாயை உதைத்து துன்புறுத்திய குற்றச்சாட்டின் கீழ் நபர் ஒருவர் கைது!

நாயை உதைத்து துன்புறுத்திய குற்றச்சாட்டின் கீழ் நபர் ஒருவர் கைது!

by selvan
June 27, 2026
0

கதிர்காம பாதயாத்திரை அடியார்களுடன் வீதியில் சென்ற நாயை உதைத்து துன்புறுத்திய சந்தேக நபரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் இன்று(27) மாலை இடம்பெற்றுள்ளதுடன் கல்முனை...

சுரேஷ் சலேவுக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பில்லை – சரத் வீரசேகர தெரிவிப்பு.!

சுரேஷ் சலேவுக்கு திடீர் மாரடைப்பு!

by selvan
June 27, 2026
0

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, திடீரென ஏற்பட்ட இதய பாதிப்பு காரணமாகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதய சிகிச்சைப்...

9வது தர்மமுழக்கம் துடுப்பாட்டத்தொடர் சமநிலையில் நிறைவு!

9வது தர்மமுழக்கம் துடுப்பாட்டத்தொடர் சமநிலையில் நிறைவு!

by selvan
June 27, 2026
0

தர்மமுழக்கம் என்று அழைக்கப்படும் கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லூரி மற்றும் கிளிநொச்சி முழங்காவில் மகா வித்தியாலய அணிகள் மோதும் 9வது தர்மமுழக்கம் துடுப்பாட்ட தொடர் தர்மபுரம் மத்திய...

போதைப்பொருளின் அபாயங்கள் குறித்து விழிப்புணர்வூட்டும்  துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்

போதைப்பொருளின் அபாயங்கள் குறித்து விழிப்புணர்வூட்டும்  துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்

by selvan
June 27, 2026
0

அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மருதமுனை பகுதியில் உள்ள முச்சக்கர வண்டிகளுக்கு   ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வும் போதைப்பொருளின் அபாயங்கள் குறித்து விழிப்புணர்வூட்டும் வகையில்...

உலக சுகாதார அமைப்பின் சர்வதேச ஒத்துழைப்பு மையமாக
அங்கொடை தொற்று நோய்கள் நிறுவனம் தெரிவு!

by selvan
June 27, 2026
0

இலங்கையின் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பு சர்வதேச அளவில் பெற்றுள்ள அசைக்க முடியாத நம்பிக்கைக்குச் சான்றாக, அங்கொடையில் அமைந்துள்ள தேசிய தொற்று நோய்கள் நிறுவனம், டெங்கு நோயாளிகள் சம்பந்தமான...

காலிமுகத்திடல் கின்னஸ் நாட்டிய சாதனைக்கு எதிராக அரசியல் உள்நோக்கத்துடன் அவதூறு.!

காலிமுகத்திடல் கின்னஸ் நாட்டிய சாதனைக்கு எதிராக அரசியல் உள்நோக்கத்துடன் அவதூறு.!

by Mathavi
June 27, 2026
0

கொழும்பு, காலிமுகத்திடலில் அண்மையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் பங்கேற்புடன் மிகவும் வெற்றிகரமாக நடத்தப்பட்ட பிரம்மாண்ட பரதநாட்டிய கின்னஸ் உலக சாதனை நிகழ்ச்சி குறித்து, ஊடகங்களிலும்...

சிற்றூர்தியை சாரதிக்கு தெரியாமல் செலுத்திய சிறுவனால் நேர்ந்த விபரீதம்.!

சிற்றூர்தியை சாரதிக்கு தெரியாமல் செலுத்திய சிறுவனால் நேர்ந்த விபரீதம்.!

by Mathavi
June 27, 2026
0

வீதியில் தரித்து நின்ற சிற்றூர்தியை சாரதிக்கு தெரியாமல் செலுத்திய 16 வயது சிறுவனின் சாரதியத்தினால் மின்சார கம்பம், சமிஞ்சை கம்பம், சைக்கிள், பல கடைகள் என்பன சேதமடைந்துள்ளன....

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி