• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, July 1, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

பச்சிலைப்பள்ளி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.!

Mathavi by Mathavi
June 26, 2025
in இலங்கை செய்திகள்., கிளிநொச்சி செய்திகள்
0
பச்சிலைப்பள்ளி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.!
Share on FacebookShare on Twitter

பச்சிலைப்பள்ளி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தலைமையில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் த.ஜெயசீலன், பச்சிலைப்பள்ளி பிரதேச சபைத் தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், பொலிஸார், கடற்படை அதிகாரி, மாவட்டத்திலுள்ள அரச திணைக்களங்களின் திணைக்கள தலைவர்கள், கிராம சேவையாளர்கள், அரச உத்தியோகத்தர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இதன் போது தீர்க்கப்படாத பல்வேறு விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது. பளை பிரதேச வைத்தியசாலையில் குறைபாடுகள் உள்ளது தொடர்பாக பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுரேன் அவர்களால் தெரிவிக்கப்பட்ட விடயங்களாவன சிறு சிறு வைத்திய தேவை உடையவர்கள் கூட கிளிநொச்சி அல்லது சாவகச்சேரி வைத்தியசாலைக்கு மாற்றப்படுகின்றார்கள் எனவும் வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் சிலர் அசமந்த போக்குடன் செயற்படுவதாகவும் இனிவரும் காலங்களில் இச்சம்பவம் இடம்பெறாதிருக்க வைத்தியசாலை நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் பளையில் சில பகுதிகளில் மின்சாரம் இல்லாமல் பலர் பாதிக்கப்படுவதாகவும் மின்சாரத்தினை பெற்றுக் கொள்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் சிலர் தெரிவித்த கருத்துகளுக்கு அமைவாக பதிலளித்த பளை மின் பொறியியலாளர் தெரிவிக்கையில், பிரதேச சபையின் பொது வீதிகளாக இருப்பினும் பகுதிகளுக்கு 100 மீற்றர் அல்லது 110 மீற்றர்களுக்கு உட்பட்ட பகுதியில் மின் இணைப்பு வழங்கக்கூடிய வகையில் காணப்படுமாயின் விரைவாக குறைந்த செலவில் மின்சாரத்தை வழங்க முடியும். அதற்கான நடவடிக்கை மின்சார சபையினரால் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

அத்துடன் பளை பகுதியில் உள்ள சிறிய குளங்களின் அணைக்கட்டுகளை புனரமைப்பதாக கூறி அப்பகுதியில் உள்ள குளங்களின் மண் வளங்கள் வேறு பகுதிக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அதனை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சில பொது அமைப்புக்களால் தெரிவிக்கப்பட்டது.

சட்டவிரோத மண் அகழ்வு கிலாளி பகுதியில் இடம்பெறுவதாகவும் அதனை கட்டுப்படுத்த பளைப் பகுதியில் புதிதாக பதவியேற்றுள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு சட்டவிரோத மணல் அகவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் போக்குவரத்து சேவையினர் A9 பிரதான வீதிகளில் காலை வேளையில் பாடசாலை மாணவர்களை பேருந்துகளில் ஏற்றாது செல்வதனால் பல மாணவர்கள் உரிய நேரத்திற்கு பாடசாலைக்கு செல்ல முடியாத காரணத்தினால் மாணவர்களின் கற்றல் நடவடிக்கை பாதிகப்படுவதாக சிலர் கருத்து தெரிவித்தனர்.

அத்துடன் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இதன் போது கருத்து தெரிவித்த பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் இளங்குமரன் அவர்கள் தெரிவிக்கையில்,

இவ்விடயங்கள் அனைத்தும் கருத்தில் கொள்ளப்படுவதாகவும் உரிய தீர்வினை பெற்று தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், இன்றைய 26.06.2025 பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் சில அரசு அதிகாரிகள் வருகை தராத காரணத்தினால் அவர்களது விடயங்கள் தொடர்பாகவும் கவனத்தில் கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

Related Posts

இலங்கை முதலீட்டுச் சபைக்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்

இலங்கை முதலீட்டுச் சபைக்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்

by selvan
June 30, 2026
0

இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய தலைவராகவும் அதன் உறுப்பினராகவும் ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ நியமிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.அத்துடன்,...

இவ்வாண்டிற்கான தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டு வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைத்தார் – ரவிகரன் எம்.பி

இவ்வாண்டிற்கான தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டு வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைத்தார் – ரவிகரன் எம்.பி

by selvan
June 30, 2026
0

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசெயலகப்பிரிவில், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களது பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டின்மூலம் முன்னெடுக்கப்படவுள்ள சில அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வுகள்...

வவுனியா நெடுங்கேணியில் பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தார் ரவிகரன் எம்பி

வவுனியா நெடுங்கேணியில் பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தார் ரவிகரன் எம்பி

by selvan
June 30, 2026
0

வவுனியா வடக்கு - நெடுங்கேணி, ஒலுமடுப்பகுதியில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 29.06.2026இன்று மக்கள் குறைகேள் சந்திப்பொன்றை நடாத்தியுள்ளார். குறிப்பாக இச்சந்திப்பில் கிராமத்தின் அபிவிருத்தி சார்ந்த...

IMF தூதுக் குழுவினருக்கும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிற்கும் இடையில் சந்திப்பு

IMF தூதுக் குழுவினருக்கும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிற்கும் இடையில் சந்திப்பு

by selvan
June 30, 2026
0

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிப் பணிப்பாளர் சொனாலி ஜெயின்-சந்திரா தலைமையிலான தூதுக்குழுவினர் இன்று (30) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தனர்.ஜூன் 24 முதல் 30 வரை...

புத்தளத்தில் ஏரியில் மூழ்கி நன்கு மாணவர்கள் பலி!

புத்தளத்தில் ஏரியில் மூழ்கி நன்கு மாணவர்கள் பலி!

by selvan
June 30, 2026
0

புத்தளம் - வண்ணாத்திவில்லு பகுதியில் உள்ள ஏரி ஒன்றில் மூழ்கி 4 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நான்கு மாணவர்களும் தோணியில் தாமரை மலர்களைப் பறிக்கச்...

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷ்யாமிளா பெரேராவுக்குப் பிணை!

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷ்யாமிளா பெரேராவுக்குப் பிணை!

by selvan
June 30, 2026
0

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷ்யாமிளா பெரேராவை, தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில்...

அம்பாறை மாவட்ட விசேட வீதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

அம்பாறை மாவட்ட விசேட வீதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

by selvan
June 30, 2026
0

அம்பாறை மாவட்ட விசேட வீதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (30.06.2026) அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் திருமதி எம். எம். முத்து...

கொடூரமான படுகொ*லைகளைச் செய்துவிட்டு பிள்ளையான் நல்லவர் போல நடிப்பது வேடிக்கையானது!

கொடூரமான படுகொ*லைகளைச் செய்துவிட்டு பிள்ளையான் நல்லவர் போல நடிப்பது வேடிக்கையானது!

by selvan
June 30, 2026
0

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) என்பவர் கொடூரமான கொ*லைகளையும், பல்வேறு குற்றச் செயல்களையும் புரிந்தவர். அவருக்கான தக்க தண்டனையை நீதிமன்றம் நிச்சயம் வழங்கும் என்றும்...

மூத்த பத்திரிகையாளர் ஏ.என்.எஸ். திருச்செல்வத்தின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள்!

மூத்த பத்திரிகையாளர் ஏ.என்.எஸ். திருச்செல்வத்தின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள்!

by selvan
June 30, 2026
0

"மூத்த பத்திரிகையாளர் ஏ.என்.எஸ். திருச்செல்வத்தின் மறைவு பத்திரிகைத்துறைக்கு மாத்திரமல்ல சமூகத்துக்கும் ஏற்பட்ட இழப்பு" என 'தினக்குரல்' பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் வீரகத்தி தனபாலசிங்கம் தெரிவித்தார். காலமான...

தேர்தல்களில் போட்டியிட முடியாத ஆபத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி.!

தேர்தல்களில் போட்டியிட முடியாத ஆபத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி.!

by Mathavi
June 30, 2026
0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது எதிர்கொண்டுள்ள கடுமையான சட்ட மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு, அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து சுமூகமான சமரசத்துக்கு வருவதே ஒரே தீர்வு என்று நாடாளுமன்ற...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி