இன்ஸ்டாகிராம் பிரபலமான ஜூலியானா மரின்ஸ் என்பவர் பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர். 26 வயதினை உடைய இவர் வெளிநாடுகளுக்குச் சென்று வீடியோ பதிவிடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் ஜூலியானா இந்தோனேசியாவுக்கு சுற்றுலா ஒன்றை மேற்கொண்டுள்ளார். தொடர்ந்து அங்குள்ள 3,500 மீட்டர் உயரம் கொண்ட எரிமலை சிகரமான ரின்ஜானிக்கு கடந்த 22 ஆம் திகதி சாசாகச குழுவினருடன் மலையேறியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக எரிமலையில் இருந்து சுமார் 600 அடி ராட்சத பள்ளத்தாக்கில் தவறி விழுந்துள்ளார்.
இது குறித்து தகவலறிந்த பேரிடர் மீட்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து ட்ரோன் மூலமாக அவர் விழுந்த இடத்தை கண்காணித்தனர்.
அப்போது மண்ணில் சிக்கி அவர் உயிருக்கு போராடி வந்தது தெரிந்தது. கயிறு கட்டி கீழே இறங்கி மீட்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால் அவர் 2 நாட்களுக்கு முன் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து மீட்புப் பணி தொடர்ந்து நடந்து வந்த நிலையில், ஜூலியானா உடலை 4 நாட்களுக்கு பிறகு மீட்டமை குறிப்பிடத்தக்கது.










