• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, May 29, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

தமிழரின் தீர்வு விடயத்தில் மௌனம் காக்கும் தேசிய மக்கள் சக்தி!

Mathavi by Mathavi
January 6, 2025
in இலங்கை செய்திகள், யாழ் செய்திகள்
0 0
0
தமிழரின் தீர்வு விடயத்தில் மௌனம் காக்கும் தேசிய மக்கள் சக்தி!
Share on FacebookShare on Twitter

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழரின் தீர்வு விடயத்தில் இதுவரை எவ்வித சமிக்ஞையையும் வழங்கவில்லை எனவும் காலத்தின் கட்டளைக்கு அமைய தமிழரின் தீர்வு தொடர்பில் வெளிப்படையான முன்னகர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் எனவும் யாழ் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் எஸ். ரகுராம் தெரிவித்தார்.

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 25 ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

ADVERTISEMENT

அனுர குமார அரசாங்கம் பதவியேற்று அதிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளை பெற்று இந்த அரசு அமைக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறான சூழலிலே நீண்டு தொடர்கின்ற எங்களுடைய ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளை எங்களுடைய போராட்ட வரலாற்றில் நாங்கள் தீர்வுகளை நோக்கி நகர வேண்டுமாக இருந்தால் அந்த தீர்வுக்காக கொழும்பிலிருந்து முன்னெடுக்கப்படும் நகர்வுகள் தொடர்பில் நாங்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.

வெறுமனே எங்களுடைய அபிலாசைகளை, கோரிக்கைகளை தன்னிச்சையாக நாங்கள் முன்னெடுப்பதை விட அவ்வாறான கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுவதற்கு கொழும்பிலிருந்து அறிகுறிகளாக சமிக்ஞைகளை நாங்கள் எதிர்பார்க்க வேண்டிய இடத்தில் இருக்கின்றோம். இன்று பதவி ஏற்றிருக்கக்கூடிய தேசிய மக்கள் சக்தி மிகப்பெரிய வலுவான கட்டமைப்புடன் இருந்தாலும் கூட கொழும்பிலிருந்து கிடைக்கின்ற செய்திகள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வலுவான அரசியலில் எதை சாதிக்க வேண்டும் என்ற கேள்விகளை எழுப்பி கொண்டிருக்கின்றது.

கட்டமைப்பு மாற்றத்தினை முன்வைத்துள்ள அரசாங்கம் முற்று முழுதாக அந்த கட்டமைப்பு மாற்றத்தினை எடுத்து செல்ல முடியுமா? அல்லது அந்த கட்டமைப்பு மாற்றத்தினை மேலிருந்து கீழாக விதைத்து செல்ல முடியுமா? எனும் கேள்வியினை இன்று வலுவாக அறிவிக்க வேண்டிய சூழலை பெற்றுள்ளது. மிகக் குறைந்த காலம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறான காலத்தில் அவர்கள் தங்களுடைய போக்கினை தாங்கள் செய்ய வேண்டியவற்றை நிரூபிக்க வேண்டிய காலப்பகுதி குறுகியது எனச் சொல்லலாம்.

அரசியல் வாழ்வு என்பதும் கடந்த காலத்திலே ஸ்ரீலங்கா அரசாங்கத்தினை ஆண்டு கொண்டிருந்தவர்கள் விட்டுச் சென்ற பாதையில் இருந்து வித்தியாசமான பாதையில் நகர வேண்டும் என்ற சூழ்நிலைக்குள் தேசிய மக்கள் சக்தி தள்ளபட்டுள்ளது. தனியே தமிழ் மக்கள் மத்தியில் மாத்திரமல்லாது தெற்கிலிருந்து மிகப்பெரிய எதிர்பார்ப்பு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு இருக்கிறது. இந்த எதிர்பார்ப்பு தான் பெரிய அச்சமாக இன்று உருவாகி வருகின்றது.

ஒரு எதிர்பார்ப்பு என்பது உச்சளவில் இருக்கின்ற பொழுது அந்த எதிர்பார்ப்பை எப்படி திருப்பி செய்து கொள்வது என்பதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒரு முனைப்பான முன்னகர்வை எடுத்து வருவதாக இன்னமும் உறுதிப்படுத்தப்படக்கூடிய தடயங்கள் எங்களுக்கு கிடைக்கப் பெறவில்லை.

ஈழத் தமிழ் பிரச்சினைகளை எடுத்துக்காட்டுகின்ற நிகழ்வுகளை நாங்கள் எதிர்பார்த்து நிற்கின்றோம் . இதுவரைக்கும் அவ்வாறான முயற்சிகள் எங்களுடைய கண்களுக்கு அறிவிப்புலத்திற்கும் கிடைக்கவில்லை. குறிப்பாக ஈத்தமிழர்களினுடைய பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ஆக்கபூர்வமான மனச் சுத்தியுடனான ஈடுபாடுகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் .

எங்களுடைய மிக முக்கிய பிரச்சினைகளாக இருக்கக்கூடிய காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினை, படைகளிடம் கையளிக்கப்பட்டிருக்கின்ற காணி விடயங்கள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் வெளிப்படுத்த வேண்டும், அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும், பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும், ஈழத் தமிழர்களின் நினைவூட்டல் உரிமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும், வடக்கு, கிழக்கு இணைப்பு அவசியமாக உள்ள பொழுது அதற்கான இணைப்பு அதிகார சபை ஒன்றில் அரசியல் பிரதிநிதிகளை உள்ளடக்கிய பிரதிநிதிகள் யோசனை முன்வைக்கப்பட வேண்டும், திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும், இராணுவ மயமாக்கம் தகர்க்கப்பட வேண்டும், இராணுவக் குறைப்புகள் விளக்கப்பட வேண்டும் அரசாங்கம் இப்படியான விடயங்கள் ஊடாக ஒரு நம்பிக்கையை கட்டி எழுப்பக்கூடிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உருவாக வேண்டும் .

காலம் அவர்களுக்கு கட்டளையிட்டு இருக்கின்றது. இதுவரை கடந்து வந்திருக்கின்ற நாட்கள் இந்த விடயங்கள் சார்ந்து அச்சம் பதிந்த ஆக்கபூர்வமான சமிஞ்சைகளை தரத் தவறி இருக்கின்றது என்பதனை நாங்கள் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஈழத்தமிழரின் அடிப்படை கோட்பாடுகள் குறித்து பேசுவதற்கு அவற்றைப் பற்றி உரையாடுவதற்கு அரசியலமைப்பு உருவாக்குவதற்கு முயற்சிகள் தொடர்பாக சொல்வதற்கு முன்னர் சர்வதேச மத்தியஸ்தர்களினுடைய பிரசன்னத்துடன் அதனை சொல்ல வேண்டும். சர்வதேச மத்தியஸ்தம் இல்லாத சந்தர்ப்பத்தில் மீண்டும் எங்களுடைய நேரத்தை நாங்கள் வீணடிக்கக் கூடாது.
அவ்வாறான நிலையிலே புதிய அரசியலமைப்பு தொடர்பில் நாங்கள் அரசாங்கத்துடன் பேச முடியும். அத்துடன் நாங்கள் பேசி வருகின்ற தாயகம் தேசியம் சுயநிர்ணயம் தொடர்பில் விரிவான விவரணத்தை பேசக்கூடியவர்களாக இருக்க வேண்டும். ஈழத் தமிழர்கள் தேசிய குடும்பமாக ஒன்றிணைவதற்குரிய அங்கீகாரத்தை எங்களுடைய முதலாவது கோரிக்கையாக முன் வைப்பதற்கு நாங்கள் முயற்சிக்க வேண்டும். தரக்கூடிய தீர்வுப்பொதிகளை மட்டும் வைத்துக் கொண்டு பேசக்கூடியவர்களாக நாங்கள் இருக்கக் கூடாது. அவ்வாறிருந்தால் வெவ்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் எங்களுடைய தீர்வுகளை நோக்கி பயணிக்க வேண்டியவர்களாக நாங்கள் தள்ளப்படுவோம்.

வடக்கு, கிழக்கு தமிழர்களின் பாரம்பரிய நிலம் சார்ந்த ஒருமைப்பாடும் தொடர்ச்சியும் பேணப்பட வேண்டும். வடக்கு, கிழக்கு தாயகத்தினை நாங்கள் உரத்துச் சொல்லக் கூடிய வகையில் முன்னகர்த்த வேண்டும். புலத்தில் இருப்பவர்களது நிலையும் கருத்திற் கொள்ளப்படவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Thinakaran
410 721.7K
  • Videos
  • Playlists
  • இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.!
    இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.! 1 day ago
  • போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.!
    போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.! 1 day ago
  • தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.!
    தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.! 2 days ago
  • 397 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Mathavi

      Mathavi

      Related Posts

      நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு; 477 பேர் கைது.!

      சுன்னாகத்தில் போதைப்பொருட்களுடன் பலர் கைது.!

      by Mathavi
      May 29, 2025
      0

      யாழ்ப்பாணம் - சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் நேற்றும் இன்றும் சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கைகளின்போது ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் மூவர்...

      மன்னார் மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம்.!

      மன்னார் மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம்.!

      by Mathavi
      May 29, 2025
      0

      உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய உறுப்பினர்களுக்கான சத்தியப் பிரமாண நிகழ்வு நேற்றைய தினம் புதன்கிழமை மாலை தேசிய மக்கள் சக்தியின்...

      மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தை அடைந்த பாதயாத்திரை.!

      மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தை அடைந்த பாதயாத்திரை.!

      by Mathavi
      May 29, 2025
      0

      வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய ஆடிவேல்விழாவினை முன்னிட்டு யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கி ஆரம்பமான இலங்கையின் மிக நீண்ட பாத...

      வீட்டின் மேல் சரிந்து விழுந்த மின் கம்பம்.!

      வீட்டின் மேல் சரிந்து விழுந்த மின் கம்பம்.!

      by Mathavi
      May 29, 2025
      0

      மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் உள்ள மவுஸ்சாகலை தோட்ட சீட்டன் பிரிவில் நேற்று இரவு வீசிய கடும் காற்று காரணமாக மின் கம்பம் ஒன்று சரிந்து வீட்டின்...

      புதிய கொரோனா அச்சுறுத்தல்; மீண்டும் பி.சி.ஆர். பரிசோதனை.!

      புதிய கொரோனா அச்சுறுத்தல்; மீண்டும் பி.சி.ஆர். பரிசோதனை.!

      by Mathavi
      May 29, 2025
      0

      புதிய கோவிட் - 19 திரிபால் ஏற்படும் உலகளாவிய அச்சுறுத்தலைக் கருத்தில்கொண்டு, சுகாதார அமைச்சு சில வைத்தியசாலைகளில் பி.சி.ஆர். பரிசோதனையை அதிகரித்துள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளர் அனில்...

      குற்றங்களைத் தடுக்க களமிறங்கிய உந்துருளிப் பிரிவு.!

      குற்றங்களைத் தடுக்க களமிறங்கிய உந்துருளிப் பிரிவு.!

      by Mathavi
      May 29, 2025
      0

      தென் மாகாணத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் துப்பாக்கி வன்முறைகளுக்கு துரிதமாக பதிலளிக்கும் வகையில், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் தலைமையில் விசேட உந்துருளிப்...

      வாவிக்கு அருகில் ஆணின் சடலம் மீட்பு – அடையாளம் காணப்படவில்லை.!

      வாவிக்கு அருகில் ஆணின் சடலம் மீட்பு – அடையாளம் காணப்படவில்லை.!

      by Mathavi
      May 29, 2025
      0

      கொழும்பில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கொழும்பு, கஹதுடுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சியம்பலாகொட பிரதேசத்தில் உள்ள வாவிக்கு அருகில் இருந்தே இந்தச் சடலம்...

      வடக்கு, கிழக்கு துரித அபிவிருத்தி; ஜனாதிபதியின் கோரிக்கைக்கு சில அதிகாரிகள் முட்டுக்கட்டை.!

      வடக்கு, கிழக்கு துரித அபிவிருத்தி; ஜனாதிபதியின் கோரிக்கைக்கு சில அதிகாரிகள் முட்டுக்கட்டை.!

      by Mathavi
      May 29, 2025
      0

      ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, வடக்கு, கிழக்கு மாகாணங்களைத் துரிதமாக அபிவிருத்தி செய்வதற்கு உதவுமாறு கோரிக்கை விடுத்தபோதும், கொழும்பிலுள்ள சில திணைக்களங்களின் அதிகாரிகள் அவற்றுக்கு முட்டுகட்டை போடும் விதத்தில்...

      இந்தியத் துணைத் தூதரக அதிகாரியின் பூதவுடலுக்கு ஆளுநர் நேரில் சென்று அஞ்சலி.!

      இந்தியத் துணைத் தூதரக அதிகாரியின் பூதவுடலுக்கு ஆளுநர் நேரில் சென்று அஞ்சலி.!

      by Mathavi
      May 29, 2025
      0

      வாகன விபத்தில் உயிரிழந்த இந்தியத் துணைத்தூதரக அதிகாரி அமரர் சச்சிதானந்தக் குருக்கள் பிரபாகரன் சர்மாவின் பூதவுடலுக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்....

      Load More
      Next Post
      வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் நாள் தொழில்.!

      வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் நாள் தொழில்.!

      யானையிடமிருந்து உயிரைக் காப்பாற்ற ஆற்றில் குதித்த தந்தையும் மகனும்.!

      யானையிடமிருந்து உயிரைக் காப்பாற்ற ஆற்றில் குதித்த தந்தையும் மகனும்.!

      கட்டிடத்தில் இருந்து வீழ்ந்த நபர் உயிரிழப்பு .!

      கட்டிடத்தில் இருந்து வீழ்ந்த நபர் உயிரிழப்பு .!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி