மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள காந்திநகர் பிரதேசத்தில் ஹெரோயின் மற்றும் கேரள கஞ்சாவுடன் சிறுவன் ஒருவனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
கல்லடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த முகாம் பொறுப்பதிகாரியின் தலைமையில் நேற்று (06) பகல் கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள காந்திநகர் பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றை முற்றுகையிட்டு சோதனை மேற்கொண்ட போது சிறுவனின் உடைமையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்களை சிறுவன் வீசியுள்ளார்.
இதில் 10 கிராம் 950 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் பொதி செய்யப்பட்ட 650 மில்லிக்கிராம் கொண்ட 5 பக்கற் கேரள கஞ்சாவும், 7 கிராம் 200 மில்லிக்கிராம் கேரள கஞ்சாவும் மீட்கப்பட்டது.
17 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சிறுவனை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Related Posts
மீன்வாடியில் வெடிப்பு; நால்வர் படுகாயம்.!
மீன் களஞ்சிய வாடியில் உள்ள வாயு மீள் நிரப்பும் பகுதியில் இடம்பெற்ற அனர்த்தத்தில் 4 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்பாறை...
லசந்த, தாஜுதீன், பிரகீத் கொ*லைகளுக்கு எதிரான வழக்குகளைத் தடுத்தது யார்?
பிரபல ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் கொடூரப் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சாட்சியங்களையும், உளவுத்துறைத் தகவல்களையும் திட்டமிட்ட முறையில் மூடி மறைத்த முக்கிய புள்ளிகள்...
தங்களது குற்றங்களை மறைப்பதற்காக அரசியல் பழிவாங்கல் என எதிர்க்கட்சியினர் கூச்சல்.!
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே எவ்வித அரசியல் பழிவாங்கல்களுமின்றிக் நாட்டின் நடைமுறைச் சட்டத்தின் பிரகாரமே கைது செய்யப்பட்டு, சட்டத்துக்கு அமைவாகவே தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு...
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி; பெண் ஒருவர் கைது.!
வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் ஹொரணை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் பாணந்துறை...
போதைப்பொருளுடன் சிக்கிய சந்தேகநபர்கள்.!
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக பிரமந்தனாறு பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது...
ஈஸ்டர் தாக்குதலில் கம்மன்பிலவுக்கும் தொடர்பா? – நாடாளுமன்றத்தில் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. கேள்வி.!
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணி மற்றும் சுரேஷ் சலே தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் போது, பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பிலவின் தற்போதைய செயற்பாடுகள்...
வடக்கு மாகாண ஆளுநர் லண்டன் பயணம்.!
வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் இரண்டு வார கால அவசிய சுற்றுப் பயணமாக வெளிநாட்டுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்...
ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவி செயலாளர் கைது.!
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக வேறு ஒருவரின் பெயரில் போலி கடவுச்சீட்டை தயாரித்து மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (26)...
இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து; பலர் வைத்தியசாலையில் அனுமதி.!
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி இன்று சனிக்கிழமை (27) அதிகாலை பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் பேருந்து ஒன்று தியத்தலாவை ரயில் பாதைக்கு அருகில் சுமார்...
உயர் நீதிமன்ற நீதியரசர் வெற்றிடங்களால் நீதித்துறை முடக்கம்.!
உயர் நீதிமன்றத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் நீதியரசர் வெற்றிடங்கள் நிரப்பப்படாததன் காரணமாக நீதித்துறையில் ஏற்பட்டுள்ள முடக்கம் குறித்து, நாடாளுமன்றத்தில் அவசர விவாதம் ஒன்றை நடத்துவதற்கான விசேட பிரேரணை...










