• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, May 28, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

இடர் நிலைமை ஏற்படுமாயின் எதிர்கொள்ள வடக்கு மாகாணம் தயார் நிலையில்!

User1 by User1
November 22, 2024
in இலங்கை செய்திகள்
0 0
0
இடர் நிலைமை ஏற்படுமாயின் எதிர்கொள்ள வடக்கு மாகாணம் தயார் நிலையில்!
Share on FacebookShare on Twitter

எதிர்வரும் நாட்களில் வடக்கு மாகாணத்தில் இடர் பாதிப்புக்கள் ஏற்படுமாக இருந்தால் அவற்றை எதிர்கொள்வதற்குத் தயார் நிலையில் இருப்பதாக துறைசார் திணைக்களத் தலைவர்கள், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் தெரிவித்தனர்.

பருவகால மழை மற்றும் இடர்தணிப்பு முன்னாயத்தக் கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று காலை 22.11.2024 இடம்பெற்றது. கூட்டத்தின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த வடக்கு ஆளுநர், எதிர்வரும் நாட்களில் தாழமுக்கம் ஒன்று வங்கக் கடலில் உருவாகலாம் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது. அதன் நகர்வுப் பாதை சரியாக இன்னமும் கணிக்கப்படவில்லையாயினும், நாம் அதை எதிர்கொள்ளும் வகையில் ஆயத்தங்களுடன் இருக்கவேண்டும்.

பருவமழை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் – செப்ரெம்பர் மாதத்துக்கு முன்னதாக, எமது பிரதேசத்திலுள்ள வாய்க்கால்கள் அனைத்தும் துப்பரவாக்கப்பட்டிருக்கவேண்டும். சில இடங்களில் வாய்க்கால்களை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளனர். அவற்றை சட்டரீதியாக அணுகி உடனடியாக இடித்து அகற்றுங்கள். தேவையேற்படின் பொலிஸாரின் உதவியையும் பெற்றுக்கொள்ளுங்கள்.

ADVERTISEMENT

ஒவ்வொரு திணைக்களங்களும் மற்றைய திணைக்களங்களைப் பார்த்துக்கொண்டிருக்காமல் உடனடியாக இந்தப் பணிகளை செய்யுங்கள். மேலும் பல இடங்களில் வாய்க்கால்களுக்குள், வீதிகளில் மக்கள் குப்பைகளை வீசுகின்றார்கள். அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதுதான் வழி. பல தடவைகள் விழிப்புணர்வுகளை செயற்படுத்தியும் மக்களின் மனங்களில் மாற்றம் ஏற்படாவிட்டால், சட்ட நடவடிக்கை ஊடாக தண்டிக்கவேண்டும் என்றார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 5 வெள்ள அபாய இடர் பிரதேசங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், முல்லைத்தீவு மாவட்டச் செயலர் இங்கு குறிப்பிட்டார்.

யாழ்ப்பாண மாவட்டத்திலும் இடரை எதிர்கொள்வதற்கு தயாரான நிலையில் இருப்பதாக மேலதிக மாவட்டச் செயலர் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில், மன்னார் மாவட்ட மருத்துவமனையூடாகச் செல்லும் கால்வாய் துப்புரவு செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட மாவட்டச் செயலர், மக்கள் இடரின்போது இடம்பெயர நேரிட்டால் அவர்களை தங்க வைப்பதற்குரிய நிலையங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கால்வாய்கள் அனைத்தும் ஏற்கனவே துப்புரவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலர் சுட்டிக்காட்டினார்.

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர், யாழ். மாவட்டத்தில் நேற்று 6 மணி நேரத்தினுள் 130 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவானமையால் திடீரென வெள்ள நிலைமை ஏற்பட்டது என்று குறிப்பிட்டார்.

யாழ். மாவட்டத்தின் உப்பாறு மற்றும் தொண்டமனாறு நன்நீரேரிகளினதும், வழுக்கையாறினதும் வெள்ள நீரை கடலுக்கு வெளியேற்றும் தடுப்பணை கதவுகள் இம்முறை முன்னதாகவே திறக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் நாட்களில் கடும் மழை எதிர்பார்க்கப்படும் நிலையில் அதைக் கருத்தில் கொண்டு அவை திறக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும், கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் 18.3 அடியாக உள்ளது. 350 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவானால் 30 அடி வரையில் நீர் மட்டம் உயர்வடையக்கூடும். இருப்பினும் நீர் வெளியேற்றும் வாய்க்கால்களை அண்மித்து உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது என்று குறிப்பிட்டார்.

இடர்நிலைமை ஏற்பட்டால் அதை எதிர்கொள்ளக்கூடிய வகையில் இரவிலும் பணியாற்றுவதற்கு பணியாளர்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாக யாழ். மாநகர சபையின் சார்பில் பங்கேற்ற பிரதிநிதி குறிப்பிட்டார்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதான வீதிகளை ஒட்டி மக்கள் வீட்டு மதில்களை அமைத்திருப்பதன் காரணமாக, வெள்ளநீர் வழிந்தோடக்கூடிய வழிமுறைகளை உருவாக்க முடியாமல் இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டது.

குறிப்பாக வீடுகள் மற்றும் மதில்கள் அமைப்பதற்கான அனுமதியைப் பெற்ற பின்னர் அதற்கு முரணாக அவற்றை அமைப்பதால் இந்த நிலைமை ஏற்படுகின்றது எனத் தெரிவிக்கப்பட்டது. எனவே அனுமதியை வழங்குவதுடன் மாத்திரமில்லாது, அவற்றை தொடர் கண்காணிப்புக்கும் உட்படுத்த வேண்டும் என கௌரவ ஆளுநர் அறிவுறுத்தினார்.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் அதற்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலர் இங்கு குறிப்பிட்டார்.

இடர்நிலைமையின் போது தீவகத்திலுள்ள நோயாளர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கான உதவிகளை கடற்படையினர் மேற்கொள்ளவேண்டும் எனவும், கடல் மார்க்கமாக பயணிக்க முடியாத நிலைமை ஏற்பட்டால் விமானப்படையினர் உதவவேண்டும் என்றும் சுகாதாரப் பணிப்பாளர் கோரிக்கை விடுத்தார்.

கடற்படையினர் தமது உதவிகளை வழங்குவதாக உறுதியளித்தனர். குறிகாட்டுவான் இறங்குதறையிலிருந்து பயணிகளை ஏற்றி இறக்கும் இரண்டு படகுகளையும், புயல் நிலைமை ஏற்பட்டால் பாதுகாத்து தருவதற்கு கடற்படையினரின் உதவியை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் கோரினார். அதற்கும் கடற்படையினர் இணக்கம் தெரிவித்தனர்.

கால்நடைகள் கடந்த காலத்தில் இடர்நிலைமையில் அதிகளவில் உயிரிழந்தமையை கருத்தில்கொண்டு, கால்நடைகளை முற்கூட்டியே பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்துவதற்குரிய ஒழுங்குகள் கண்டாவளை மற்றும் நானாட்டானில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

வீதிகளில் குப்பைபோடுபவர்கள் தொடர்பில் ஆதாரங்களுடன் தமக்கு சமர்ப்பித்தால் சட்டநடவடிக்கை எடுக்க முடியும் என வடக்கு மாகாண சிரேஸ்ட பதில் பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டார். இதேவேளை, யாழ். மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் வீதிகளில் குப்பைபோடுபவர்களிடம் தண்டப்பணம் அறவிடுவதற்குரிய வர்த்தமானி தயாரிக்கப்பட்டு வருவதாகவும் மாநகர சபை சார்பில் பங்கேற்ற பிரதிநிதி தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரையோரப் பகுதிகளில் இராணுவத்தினர் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டதாகவும் ஆனால் மக்கள் மீண்டும் மீண்டும் அங்கு குப்பைகளைப் போடுவதாகவும் இது கவலையளிப்பதாகவும் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி சார்பில் பங்கேற்ற பிரதிநிதி தெரிவித்தார்.

இதேவேளை எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் குப்பைகளை அகற்றி துப்பரவான நகராக்குவதற்கான நடவடிக்கையை தாம் யாழ். மாநகர சபையுடன் இணைந்து செய்வதற்கு பொறுப்பெடுப்பதாக உள்ளூராட்சி அமைச்சின் செயலர் தெரிவித்தார்.

இதேவேளை, இடர் நிலைமைகளை எதிர்கொள்வதற்காக கடற்படையினரின் 16 குழுக்கள் படகுகளுடன் தயாராக இருப்பதாகவும் மேலதிகமாக தேவைப்பட்டால் அதையும் பெற்றுக் கொள்ளக்கூடிய தயார் நிலையில் தாம் இருப்பதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

எதிர்வரும் இடர்நிலைமைகளின் போது பொதுமக்கள் இடர்முகாமைத்துவப் பிரிவின் 117 என்ற இலக்கத்துக்கு தொடர்புகொள்ள முடியும் எனவும், அதேநேரம் யாழ். மாவட்டத்தில் 021 222 1676, 0773957894 என்ற இலக்கங்களுக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் 021 228 5330, 0772320528 என்ற இலக்கங்களுக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 021 229 0054 என்ற இலக்கத்துக்கும், மன்னார் மாவட்டத்தில் 023 211 7117 என்ற இலக்கத்துக்கும், வவுனியா மாவட்டத்தில் 0760994883 என்ற இலக்கத்துக்கும் தொடர்புகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Thinakaran
408 720.9K
  • Videos
  • Playlists
  • தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.!
    தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.! 1 day ago
  • தமிழ் மக்கள் ஓரணியில் திரள வேண்டும் என்றவர்கள் ஓட பாதை தெரியாமல் குடும்பிச்சண்டையில் ஈடுபட்டுள்ளனர்
    தமிழ் மக்கள் ஓரணியில் திரள வேண்டும் என்றவர்கள் ஓட பாதை தெரியாமல் குடும்பிச்சண்டையில் ஈடுபட்டுள்ளனர் 1 day ago
  • நுவரெலியாவில் மீண்டும் பேருந்து விபத்து - 23 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
    நுவரெலியாவில் மீண்டும் பேருந்து விபத்து - 23 பேர் வைத்தியசாலையில் அனுமதி! 4 days ago
  • 395 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • User1

      User1

      Related Posts

      கொழும்பில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்க இடமளியோம்.!

      கொழும்பில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்க இடமளியோம்.!

      by Mathavi
      May 28, 2025
      0

      "கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மைப் பலத்தை தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வழங்கவில்லை. எனவே, அக்கட்சி ஆட்சியமைப்பதற்கு எந்த சந்தர்ப்பத்திலும் ஆதரவு வழங்கப்படமாட்டாது. ஏனெனில் அது...

      இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த காணி விடுவிப்புக்கு எதிராக தெற்கில் சிலர் இப்போதும் போர்க்கொடி.!

      இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த காணி விடுவிப்புக்கு எதிராக தெற்கில் சிலர் இப்போதும் போர்க்கொடி.!

      by Mathavi
      May 28, 2025
      0

      "அரசால் வடக்கு மாகாணத்தில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த பாதைகள் விடுவிக்கப்படுதல் மற்றும் காணிகள் விடுவிக்கப்படும்போது தென்பகுதியிலுள்ள சில அரசியல்வாதிகள் அதற்கு எதிராகக் குரல் கொடுக்கும் நிலைமை இப்போதும் காணப்படுகின்றது."...

      போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.!

      போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.!

      by Mathavi
      May 28, 2025
      0

      வடமாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தை தவிர்ந்த விவசாய திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தைச் சேர்ந்த ஒப்பந்த அடிப்படையில் பல வருட காலம் பணிபுரியும் ஊழியர்கள்...

      மன்னார் – வங்காலையில் கடலரிப்பு; நிலைமைகளை நேரடியாகச் சென்று பார்வையிட்டார் ரவிகரன் எம்.பி.!

      மன்னார் – வங்காலையில் கடலரிப்பு; நிலைமைகளை நேரடியாகச் சென்று பார்வையிட்டார் ரவிகரன் எம்.பி.!

      by Mathavi
      May 28, 2025
      0

      மன்னார் - நானாட்டான் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட, வங்காலைப் பகுதியிலுள்ள கடலரிப்பு நிலைமைகளை அப்பகுதி மக்களின் அழைப்பையேற்று வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேற்று (27)...

      துசிதவின் வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம்; மேலும் மூவர் கைது.!

      துசிதவின் வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம்; மேலும் மூவர் கைது.!

      by Mathavi
      May 28, 2025
      0

      தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாக பணிப்பாளர் துசித ஹல்லோலுவவின் வாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்துடன் தொடர்புடைய மேலும் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக...

      பெருமளவிலான போதைப்பொருட்களுடன் சிக்கிய படகுகள்.!

      பெருமளவிலான போதைப்பொருட்களுடன் சிக்கிய படகுகள்.!

      by Mathavi
      May 28, 2025
      0

      பெருமளவிலான போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற 2 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. தெற்கு கடற்கரைக்கு அப்பால் ஆழ்கடலில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் பெருமளவிலான போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற இரண்டு...

      அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.!

      அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.!

      by Mathavi
      May 28, 2025
      0

      அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் அம்பாறை மாவட்ட செயலகத்தில் நேற்று 27.05.2025 நடைபெற்றது. அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்குரிய பல நாள் மீன்பிடிப் படகுகளில் மீன் பிடிக்கப்படுகிறது....

      நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை.!

      நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை.!

      by Mathavi
      May 28, 2025
      0

      சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என...

      துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது..!

      துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது..!

      by Thamil
      May 27, 2025
      0

      தெஹிவளை பொலிஸ் பிரிவின் நெதிமால பகுதியில் கடந்த 19 ஆம் திகதி நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த விடயம்...

      Load More
      Next Post
      ஒலுமடு தமிழ் மகா வித்தியாலயத்தின் ஒளிவிழா.!

      ஒலுமடு தமிழ் மகா வித்தியாலயத்தின் ஒளிவிழா.!

      தமிழ் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா

      தமிழ் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா

      போலி கிரீம் வகைகளுடன் மூவர் கைது.!

      யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் கசிப்புடன் மூவர் கைது!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி