கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரத்மலானை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (31) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 31 வயதான இரத்மலானை பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார்.
கல்கிஸ்ஸை குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 13 கிராம் 100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.