இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் முதற்தர தமிழ் இணைய தளம் உங்கள் வீரமுரசு செய்தித்தளம்
ஜனாதிபதி செயலகம் ஊடாக நடை முறைப்படுத்தப்படும் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான பால் மா பைக்கட்டுக்கள் வழங்கி வைக்கப்பட்டன.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதளுக்கிணங்க (06) பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்ற குறித்த பால் மா பக்கட்டுக்களை பொன்டெறா நிறுவனத்தின் அனுசரணையில் வழங்கி வைக்கப்பட்டன. தம்பலகாமம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட 12 கிராம சேவகர் பிரிவிலும் தெரிவு செய்யப்பட்ட 90 குடும்பங்களுக்கு ஒருவருக்கு தலா 02 பைக்கட்டுக்கள் வீதம் மொத்தமாக 180 பக்கட்டுக்கள் வழங்கி வைக்கப்பட்டன. மந்தபோசணையுடைய பிள்ளைகளின் போசாக்கினை அதிகரிக்கும் நோக்கில் இவை வழங்கி வைக்கப்பட்டன.
இதில் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப்,தம்பலகாமம் இரானுவ முகாம் மேஜர் டபிள்யூ.எம்.சீ. வன்னிநாயக்க ,நிர்வாக உத்தியோகத்தர் உடகெதர உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.