• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, June 16, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்காவிடின் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வோம்.!

Mathavi by Mathavi
June 16, 2026
in இலங்கை செய்திகள்.
0
உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்காவிடின் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வோம்.!
Share on FacebookShare on Twitter

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையை, மாணவர்களின் நலன் கருதி கல்வி அமைச்சு உடனடியாக ஒத்திவைக்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் மாணவர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்காக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்றும் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் சட்டத்தரணியுமான உதய கம்மன்பில எச்சரித்துள்ளார்.

எதுல்கோட்டேயிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
“இலங்கையில் 500 ஆண்டுகளுக்கும் மேலாகப் பௌத்தர்களும் கத்தோலிக்கர்களும் மிகுந்த நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறான பின்னணியில், பௌத்த – கத்தோலிக்க ஒற்றுமையைத் தகர்த்துச் சிங்கள சமூகத்தைப் பலவீனப்படுத்தும் நுட்பமான சதியொன்று அரங்கேறி வருகின்றது. கத்தோலிக்கத் திருச்சபைக்குள் ஆதிக்கம் செலுத்தும் சில மதகுருமார்களைக் கொண்ட என்.ஜி.ஓ. கும்பலே இதற்குத் தலைமையேற்கின்றது.

ஈஸ்டர் தாக்குதலின் பொறுப்பிலிருந்து முஸ்லிம் தீவிரவாதிகளை முழுமையாக விடுவித்து, அதனைப் பௌத்தர்கள் மீது திட்டமிட்டுச் சுமத்துவதே இவர்களின் பிரதான நோக்கமாகும். இதற்காகவே அசாத் மௌலானா போன்றோரின் பொய் வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டு, பேராயர் கர்தினாலும் செயற்பட்டு வருகின்றாரா என்ற பலத்த கேள்வி எழுகின்றது.

மறுபுறம், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசு ஈஸ்டர் தாக்குதலின் முக்கிய சாட்சியான இப்ராஹிம் நானாவின் வீட்டுப் பணிப்பெண்ணை மர்மமான முறையில் வெளிநாடு செல்ல அனுமதித்துள்ளது. இதன் மூலம், இப்ராஹிம் நானா சட்டப் பிடியிலிருந்து விடுதலையாவதற்கும், அவரது முடக்கப்பட்ட சொத்துக்கள் மீண்டும் அவருக்கே கிடைப்பதற்கும் இந்த அரசு மறைமுகமாக வழிவகை செய்துள்ளது.

2026ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் ஆகஸ்ட் 10ஆம் திகதி நடத்துவதற்கு அரசு எடுத்துள்ள முடிவானது மாணவர்களின் அடிப்படை உரிமைகளைக் கடுமையாக மீறும் செயலாகும். கடந்த பரீட்சைப் பெறுபேறுகள் மார்ச் 31 அன்றே வெளியானதால், இரண்டாம் மற்றும் மூன்றாம் முறை பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு இம்முறை தயாராவதற்கு வெறும் 133 நாட்கள் மட்டுமே கிடைத்துள்ளன. கடந்த 2024 இல் 178 நாட்களும், 2025 இல் 198 நாட்களும் அவகாசம் வழங்கப்பட்டிருந்த பின்னணியில் இம்முறை வழங்கப்பட்டுள்ள காலம் பெரும் அநீதியாகும்.

அதேபோல், முதலாம் முறை பரீட்சை எழுதும் மாணவர்களுக்கும் கடந்த காலங்களில் 27 முதல் 32 மாதங்கள் வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த போதிலும், இம்முறை வெறும் 21 மாதங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ‘டித்வா’ புயல் அனர்த்தம், ஆசிரியர் வேலைநிறுத்தம் மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் புத்தகங்கள் மற்றும் உடமைகளை இழந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்த மாணவர்களுக்கு இழைக்கப்படும் இந்த அநீதியானது, அரசமைப்பின் 12(1) பிரிவின் கீழ் உறுதிப்படுத்தப்பட்டுள்ள ‘அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும்’ என்ற விதியை நேரடியாக மீறுகின்றது.

கடந்த 2022 இலும் இதேபோன்றதொரு சவாலான சூழல் ஏற்பட்ட போது, அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் சட்டபூர்வ நியாயங்களை ஏற்றுக்கொண்டு பரீட்சையை ஒத்திவைத்தனர்.

தற்போதைய திசைகாட்டி அரசும் அரசியல் பிடிவாதங்களை விடுத்து, மாணவர்களின் எதிர்காலம் கருதி மனிதாபிமானத்துடன் பரீட்சையை ஒத்திவைக்க முன்வர வேண்டும்.” – என்றார்.

Related Posts

சுயநலத்திற்காக தொழிலாளர்களை பழிவாங்க முடியாது; வீதிக்கு இறங்கிய தோட்ட மக்கள்.!

சுயநலத்திற்காக தொழிலாளர்களை பழிவாங்க முடியாது; வீதிக்கு இறங்கிய தோட்ட மக்கள்.!

by Mathavi
June 16, 2026
0

இன்று புஸ்சலாவ பிளான்டேஷன் பெருந்தோட்டக் கம்பனிக்குச் சொந்தமான ரொத்ஸ்சைல்ட் தோட்டத்தில் உள்ள சுமார் 1500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் பொதுமக்களும் ஒன்றிணைந்து நீதிக்கான போராட்டத்தில் கலந்துகொண்டனர். கடந்த...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை; கைது செய்வதை தடுக்கக் கோரி கோட்டாபய மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு.!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை; கைது செய்வதை தடுக்கக் கோரி கோட்டாபய மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு.!

by Mathavi
June 16, 2026
0

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி...

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

by Mathavi
June 16, 2026
0

ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொடிவீகும்பூர பகுதியில், நேற்று திங்கட்கிழமை வலான மத்திய ஊழல் ஒழிப்புப் படையினரால் நடத்தப்பட்ட முற்றுகையின் போது, பெருந்தொகையான சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர்...

வீதிக்கு இறங்கிய விவசாயிகள்.!

வீதிக்கு இறங்கிய விவசாயிகள்.!

by Mathavi
June 16, 2026
0

நெல்லுக்கான நிர்ணய விலையை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி கிளிநொச்சி விவசாயிகள் இன்றையதினம் கவனயீர்ப்பு பேரணி ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். கிளிநொச்சி நகர் சித்திவிநாயகர் ஆலய முன்றலிருந்து மாவட்ட செயலகம்...

ஐந்து மாதங்களின் பின்னர் நடைபெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம்.!

ஐந்து மாதங்களின் பின்னர் நடைபெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம்.!

by Mathavi
June 16, 2026
0

யாழ். வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது. இப்...

சிறுவனைத் தாக்கிய நால்வர் கைது.!

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி; மூவர் கைது.!

by Mathavi
June 16, 2026
0

நீர்கொழும்பு பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்டு வந்த விபச்சார விடுதி ஒன்றை வலான மத்திய ஊழல் ஒழிப்புப் படையினர் முற்றுகையிட்டு, மூன்று சந்தேகநபர்களைக் கைது...

முச்சக்கரவண்டி பள்ளத்தில் பாய்ந்து விபத்து.!

முச்சக்கரவண்டி பள்ளத்தில் பாய்ந்து விபத்து.!

by Mathavi
June 16, 2026
0

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை, கரோலினா பகுதியில் நேற்று (15) மாலை முச்சக்கரவண்டி ஒன்று சுமார் 75 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. கட்டுநாயக்க விமான...

வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்கள்; இருவர் உயிரிழப்பு.!

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்கள்; மூவர் உயிரிழப்பு.!

by Mathavi
June 16, 2026
0

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில், நேற்று (15) திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், இரு சிறுவர்கள் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர். அதன்படி, மீரிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீரிகம...

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர்வெட்டு.!

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர்வெட்டு.!

by Mathavi
June 16, 2026
0

அத்தனகல்ல - கரஸ்னாகல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக, கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தேசிய நீர்...

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது.!

by Mathavi
June 16, 2026
0

தங்கச் சங்கிலி கொள்ளை உள்ளிட்ட பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய, தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கட்டான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி