2025/2026 சிவனடி பாத மலை பருவ காலம் கடந்து 2025 டிசம்பர் மாதம் பௌர்ணமி நாளில் ஆரம்பமானது.
தொடர்ந்து ஆறு மாதங்களாக இப் பருவகாலம் இடம் பெற்று வந்த நிலையில் இன்று வைகாசி விசாகம் பௌர்ணமி நாளில் காலை 10.30 மணி தொடக்கம் 1.30 மணி வரை வரும் சுப வேளையில் சிவனடி பாத மலை உச்சியில் இருந்து சமன் தெய்வம் மற்றும் ஆபரணங்கள் பூஜை பொருட்கள் என்பன இரத்தினபுரி பலாபத்பல குருவிட்ட வழியாகவும், நல்லதண்ணி நோட்டன் வழியாகவும், நல்லதண்ணி பொகவந்தலாவ பலங்கொட வழியாக கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வைகாசி மாதம் வைகாசி விசாகம் பௌர்ணமி நாளான 31 ம் திகதி இவ் வருட பருவ காலம் நிறைவுக்கான விஷேட பிரித் வைபவம் இடம் பெற்ற பின்னர் 2025/2026 க் கான சிவனடி பாத மலை பருவ காலம் சுப வேளையில் நிறைவு பெற உள்ளது.
இன்றைய தினம் சுவாமிகள் நல்லதண்ணி நகருக்கு லக்சபான இராணுவ முகாம் வீரர்கள் இணைந்து பல்லக்கில் வைத்து எடுத்து வரப்பட்டு நல்லதண்ணி நகரில் உள்ள பௌத்த மத்திய நிலையத்தில் வைத்து நல்லதண்ணி நகரில் உள்ள அனைத்து வர்த்தகர்கள் மற்றும் பொது மக்கள் வணங்கிய பிறகு சிவனடி பாத மலைக்கு பொறுப்பான பெங்கமுவ தம்மதின்ன மஹநாயக்க தேரர் அவர்களின் வழிகாட்டலில் சுவாமிகள் பூஜை பொருட்கள் மற்றும் ஆபரணங்கள் மூன்று வழிகளில் மிகவும் பாதுகாப்பான முறையில் எடுத்து செல்ல பட்டு இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள கல்பொத்தாவில ரஜமஹா விகாரையில் அங்கு சுப வேளையில் பிரதிஷ்டை செய்ய பட உள்ளது என சிவனடி பாத மலைக்கு பொறுப்பான பெங்கமுவ தம்மதின்ன மஹநாயக்க தேரர் தெரிவித்தார்.
மேலும் எதிர் வரும் டிசம்பர் மாதம் பௌர்ணமி நாளில் மீண்டும் 2026/2027 க்கான சிவனடி பாத மலை பருவ காலம் ஆரம்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.










