• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, May 31, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

தற்போதைய அரசு தமக்கு நெருக்கமான ஒரு சில குழுக்களுக்குச் சாதகமாகவே செயற்படுகிறது!

selvan by selvan
May 31, 2026
in இலங்கை செய்திகள்.
0
தற்போதைய அரசு தமக்கு நெருக்கமான ஒரு சில குழுக்களுக்குச் சாதகமாகவே செயற்படுகிறது!
Share on FacebookShare on Twitter

தற்போதைய அரசு தமக்கு அரசியல் ரீதியாக நெருக்கமான ஒரு சில குறிப்பிட்ட வணிகக் குழுக்களுக்குச் சாதகமாகவே தொடர்ந்து அநாவசிய முடிவுகளை எடுத்து வருகின்றது” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

குளியாப்பிட்டிய பகுதியில் நேற்று நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் தற்போதைய நிர்வாகத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது:-“

அரசு எடுக்கும் தவறான கொள்கை முடிவுகளின் பாரிய சுமையானது, கடுமையான வரி அதிகரிப்பு, வாழ்க்கைச் செலவு உயர்வு, மின்சாரம் மற்றும் எரிபொருள் விலை உயர்வு ஆகியவற்றின் மூலமும், உள்நாட்டுத் தொழில்துறைகள் மற்றும் வாழ்வாதாரங்களின் வீழ்ச்சி மூலமும் சாதாரண அப்பாவி மக்கள் மீது அநியாயமாகச் சுமத்தப்பட்டுள்ளது.

விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோர் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் வாழ்வாதாரப் போராட்டங்களைப் புறந்தள்ளிவிட்டு, தனது நலன்களுடன் இணைந்த ஒரு சில பிரதான வணிகர்களைப் பாதுகாப்பதையே இந்த அரசு தேர்ந்தெடுத்துள்ளது.

அரசு மக்களுடன் நிற்கவில்லை. அது ஆட்சியில் இருப்பவர்களுக்கு நெருக்கமான ஒரு சில வர்த்தகர்களுடனேயே நிற்கின்றது.

அவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவும் இறுதியில் பொதுமக்கள் சுமக்கும் சுமையாக மாறுகின்றது.

நாட்டிலுள்ள உள்நாட்டுத் தொழிற்சாலைகள் பல வேகமாக மூடப்பட்டு வரும் வேளையில், அங்கு பணிபுரியும் ஊழியர்களைப் பாதுகாப்பது குறித்தோ, அவர்களின் வேலைவாய்ப்புகளைப் பாதுகாப்பது குறித்தோ அரசு ஆழமான மௌனம் காக்கின்றது.

தொழில்துறை மற்றும் முதலீட்டுக்கு நிலையானதொரு சூழலை உருவாக்குவதற்குப் பதிலாக, இந்த நிர்வாகம் தொடர்ந்து பொதுமக்கள் மீதான நிதிச் சுமையை மட்டுமே அதிகரித்து வருகின்றது.

அரசின் வலுசக்தி கொள்முதல் மற்றும் பொது விலைமுறிக் கோடல்களைக் கையாண்ட விதம் சமூகத்தில் கடுமையான விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

தரம் குறைந்த இறக்குமதிகள் மற்றும் முறையற்ற நிர்வாகத்தால் அரசுக்கு ஏற்படும் நட்டங்கள், இறுதியில் அதிக செலவுகள் மற்றும் வரிகள் மூலம் மக்கள் மீதே பழி சுமத்தப்படுகின்றது.

கட்டமைப்புக்குள் இருக்கும் தோல்விகளுக்கும் ஊழல்களுக்கும் மக்கள் பணம் செலுத்த வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள்.

விவசாய சமூகத்துக்குப் போதிய நிவாரணமும் பாதுகாப்பும் வழங்குவதாகப் போலி வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த போதிலும், உள்ளுர் விவசாயிகளுக்கு உரிய ஆதரவளிக்க அரசு முற்றிலும் தவறிவிட்டது.

உர விலையின் கடுமையான உயர்வையும், உற்பத்திச் செலவுக்கும் விவசாயிகளுக்குக் கிடைக்கும் சந்தை வருவாய்க்கும் இடையே பாரிய இடைவெளி காணப்படுவதையும் இன்று நாம் நேரில் காண்கிறோம்.

இலங்கைக்கு இன்று அவசரமாகத் தேவைப்படுவது முதலீடுகளை ஈர்ப்பது, வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, உள்ளுர் உற்பத்திகளை ஆதரிப்பது மற்றும் இளைய தலைமுறையினருக்குத் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்துறைகளை அறிமுகப்படுத்துவது ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஒரு நடைமுறைப் பொருளாதார மீட்புத் திட்டமாகும்.

அரசியல் எதிராளிகளைக் பழிவாங்கும் நோக்கில் கைது செய்வதோ அல்லது அரசுக்கு எதிரான விமர்சனங்களை அதிகார பலத்தால் முடக்க முயல்வதோ மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும் தீர்வாகாது.

நாட்டுக்குத் தேவையானது உண்மையான தீர்வுகள், முதலீடுகள், வேலைவாய்ப்புகள் மற்றும் சாதாரண மக்களின் கஷ்டங்களைப் புரிந்து கொள்ளும் ஒரு முதிர்ச்சியான தலைமைத்துவம் ஆகும்.

எனவே, அரசியல் அச்சுறுத்தல்கள் மற்றும் தவறான பிரச்சாரங்களை விடுத்து, மக்கள் நலக் கொள்கைகளைக் கடைப்பிடிக்குமாறும், பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் ஆட்சி செய்யுமாறும் அரசுக்கு நாம் அழைப்பு விடுக்கின்றோம்.” – என்றார்.

Related Posts

புதிய தாதியர் நியமனங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்

புதிய தாதியர் நியமனங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்

by selvan
May 31, 2026
0

இந்த வருடம் ஒக்டோபர் மாதத்திற்குள் மேலும் 2,867 புதிய தாதியர் நியமனங்கள் வழங்கப்படும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற...

மின்வெட்டு தொடர்பில் சஜித்தின் குற்றச்சாட்டு

மின்வெட்டு தொடர்பில் சஜித்தின் குற்றச்சாட்டு

by selvan
May 31, 2026
0

மின்வெட்டுக்கு முதலில் ஒரு குரங்கு மீது பழி சுமத்திய அரசாங்கம், பின்னர் அதனை கடந்த அரசாங்கங்கள் மீது சுமத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்....

நிறைவுக்கு வரும் சிவனடி பாத மலை யாத்திரைக் காலம்.

நிறைவுக்கு வரும் சிவனடி பாத மலை யாத்திரைக் காலம்.

by selvan
May 31, 2026
0

2025/2026 சிவனடி பாத மலை பருவ காலம் கடந்து 2025 டிசம்பர் மாதம் பௌர்ணமி நாளில் ஆரம்பமானது. தொடர்ந்து ஆறு மாதங்களாக இப் பருவகாலம் இடம் பெற்று...

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற நான்கு விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு!

வெள்ளவத்தையில் புகையிரதத்தில் மோதி பெண் ஒருவர் பலி!

by selvan
May 31, 2026
0

கொழும்பு வெள்ளவத்தை புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதத்தில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாணந்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதியதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த...

பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டாது!

பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டாது!

by selvan
May 31, 2026
0

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் டீசல் விலையை உயர்த்திய போதிலும், பேருந்து கட்டணங்களில் எந்தவொரு திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது...

சூரிய மின் உற்பத்தித் தகடுகளை செயலிழக்கச் செய்யுமாறு கோரிக்கை

சூரிய மின் உற்பத்தித் தகடுகளை செயலிழக்கச் செய்யுமாறு கோரிக்கை

by selvan
May 31, 2026
0

திடீர் மின் தடை ஏற்படுவதைத் தவிர்த்து, மின் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பேணும் நோக்கில், இன்றைய தினமும் (31) முற்பகல் 8.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி...

முச்சக்கர வண்டி கட்டணங்களையும் உயர்த்துவதற்கு தீர்மானம்!

முச்சக்கர வண்டி கட்டணங்களையும் உயர்த்துவதற்கு தீர்மானம்!

by selvan
May 31, 2026
0

எரிபொருள் விலை திருத்தத்திற்கு இணையாக, முச்சக்கர வண்டி கட்டணங்களையும் உயர்த்துவதற்கு எதிர்பார்ப்பதாக தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழிலதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, கட்டண...

பருத்தித்துறை கடற்ப்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்களைக் காணவில்லை!

பருத்தித்துறை கடலில் காணாமல் போன நான்கு மீனவர்களைத் தேடுவதற்கு இந்தியாவின் உதவி கோரப்பட்டுள்ளது!

by selvan
May 31, 2026
0

பருத்தித்துறை கடலிலிருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன நான்கு மீனவர்களைத் தேடுவதற்கு இந்தியாவின் உதவியை நாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, சர்வதேச கடலில் தேடுவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளதாகக் கடற்றொழில்...

கட்டிலில் இருந்து தவறி விழுந்த குழந்தை மரணம்!

கட்டிலில் இருந்து தவறி விழுந்த குழந்தை மரணம்!

by selvan
May 31, 2026
0

அனுராதபுரம், கெக்கிராவை பிரதேசத்தில் பெற்றோருடன் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த இரண்டு வயது ஆண் குழந்தை ஒன்று, எதிர்பாராதவிதமாகக் கட்டிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளது. இந்தத் துயரச்...

லங்கா ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் நிறுவனங்களும் எரிபொருட்களின் விலைகளை உயர்த்தியுள்ளன.

லங்கா ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் நிறுவனங்களும் எரிபொருட்களின் விலைகளை உயர்த்தியுள்ளன.

by selvan
May 31, 2026
0

லங்கா ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் ஆகிய நிறுவனங்களும் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தங்களது எரிபொருள் விலைகளை உயர்த்தியுள்ளன. இருப்பினும், சினோபெக் நிறுவனம் சுப்பர்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி