கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கினிகத்தேன நகரில் பயணிகள் நலன் கருதி அமைக்க பட்ட அரச பேருந்து நிலையம் பாரிய அளவில் சுகாதார சீர் கேட்டுடன் உள்ளது.
இந்த பேருந்து நிலையம் ஹட்டன் அரச பேருந்து நிலைய அதிகாரத்துக்கு உட்பட்டது.அங்கு நாளாந்தம் பல நூற்றுக்கணக்கான பேருந்துகள் அங்கு தரித்து செல்வதை காண கூடியதாக உள்ளது. குறிப்பாக நாட்டின் பல பாகங்களுக்கும் இந்த பேருந்து தரிப்பிடத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அத் தரிப்பிடத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயணிகள் நாளாந்தம் தரித்து இருந்து செல்வார்கள்.அத்துடன் வர்த்தக நிலையங்கள் உள்ளன இரண்டாம் மாடியில் முறையான பாதுகாப்பு இல்லாத காரணத்தால் பறவைகளின் எச்சம் மற்றும் மனிதர்களின் வெற்றிலை எச்சில் முறையான பாதுகாப்பு இல்லாத காரணத்தால் பாரிய துர் நாற்றம் வீசுகிறது.
அங்கு நாளாந்தம் வந்து வர்த்தகம் செய்யும் வர்த்தகர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பயணிகள் சாரதிகள் நடத்துனர்கள் பாதசாரிகள் பாரிய தாக்கத்தை எதிர் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அம்பகமு பிரதேச சபையின் தவிசாளர் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.










