குருநாகல், நாரம்மலை பிரதேசத்தில் இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் சிக்கி இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நாரம்மலை வீதியில் நேற்று சனிக்கிழமை மாலை இரண்டு உந்துருளிகள் மிக அதிவேகமாகப் பயணித்துள்ளன. இதன்போது, ஒரு உந்துருளி மற்றொன்றுடன் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் பலத்த காயமடைந்த இரண்டு உந்துருளிகளின் ஓட்டுநர்களும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், சிகிச்சை பலனின்றி 26 வயதுடைய இளைஞன் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞன் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த மற்றொரு நபரான 29 வயதுடைய இளைஞன், ரயில்வே திணைக்களத்தில் பணியாற்றுபவர் என்பதுடன் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்த விபத்து குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Related Posts
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு.!
மட்டக்களப்பு - வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தில் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இந்த நிகழ்வு கிழக்கு பல்கலைக்கழகத்தில் உள்ள...
முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவேந்தலுக்குரிய அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி.!
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவேந்தலுக்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளது. அந்தவகையில் தமிழின படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவு நாளான நாளை...
கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ள செல்லும் மாணவி உட்பட ஐவர் கௌரவிப்பு.!
மலேசியாவில் எதிர்வரும் 21 ஆம் திகதியிலிருந்து 28 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கின்ற சர்வதேச '2s இன்டர்நேஷனல் ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப்' போட்டியில் கலந்து கொள்ள செல்லும்...
புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தின் கொடியேற்றம்..!
யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் ஆரம்ப நிகழ்வான கொடியேற்றம் நிகழ்வு இன்றைய தினம் மாலை 5 மணியளவில்...
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பயணித்த வாகனம் விபத்து.!
ஹினிதும, ஹபரகடை பகுதியில் இன்று (17) பிற்பகல் தேசிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே ஜயசுந்தர பயணித்த கெப் ரக வாகனம், முச்சக்கரவண்டி...
மணற்காட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் கஞ்சி வழங்கல் நிகழ்வும்.!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கிழக்கு மணற்காட்டு பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் கஞ்சி வழங்கல் நிகழ்வும் இன்று காலை 10:30 மணியளவில் மணற்காட்டு பாடசாலை முன்பாக உணர்வு ரீதியாக...
நீரில் மூழ்கி மூன்று இளைஞர்கள் உயிரிழப்பு.!
விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீராட சென்று நீரில் மூழ்கி 3 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இன்றைய (17) தினம் தெல்தெனிய - பம்பரகல விகாரைக்கு அருகில் உள்ள விக்டோரியா நீர்த்தேக்கத்தில்...
மர்மமான முறையில் ஒருவர் உயிரிழப்பு.!
கல்கிஸ்சை, படோவிட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் கல்கிஸ்சை, பதோவிட்ட பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய நபர்...
யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்தும் போர்க் குற்றங்களுக்கு நீதி கிடைக்கவில்லை.!
யுத்தம் முடிவடைந்து 17 ஆண்டுகள் ஆகியும் முள்ளிவாய்க்கால் மண்ணில் இனப்படுகொலை செய்யப்பட்ட எமது ஈழத்து தமிழ் உறவுகளுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என தென்னிந்திய பிரபல திரைப்பட...
வடக்கு, கிழக்கில் ஊழல் செய்த அதிகாரிகளை அரசு கைது செய்யாது அவர்களை மிரட்டி கட்சி அரசியலை செய்கிறது.!
வடக்கு, கிழக்கில் ஊழல் முறைகேடுகளை செய்த அரச அதிகாரிகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கைது செய்யாது அவர்களை மிரட்டி நிர்வாக விடயங்களில் தமது கட்சி சார்ந்தவர்களுக்கு...










