ஈரான் மீது மீண்டும் ட்ரம்ப், கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். பாகிஸ்தானிய மத்தியஸ்தத்தின் வழியாக அமெரிக்காவின் அமைதித் திட்டத்திற்கு ஈரான் தனது பதிலைச் சமர்ப்பித்த சில மணிநேரங்களிலேயே ட்ரம்ப் இந்த விமா்சனத்தை மேற்கொண்டுள்ளார்.
ஈரான் கடந்த 47 ஆண்டுகளாக அமெரிக்காவுடனும் ஒட்டுமொத்த உலகத்துடனும் விளையாடிக் கொண்டிருக்கிறதாகவும், அவர்கள் இனி சிரிக்கப் போவதில்லை எனவும் ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
ஈரானின் புதிய முன்மொழிவை அமெரிக்கா முழுமையாக ஆய்வு செய்ததா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. எனினும், ஜனாதிபதி ட்ரம்ப் தனது பதிவில் அந்த முன்மொழிவை நேரடியாகக் குறிப்பிடாமல், “ஈரானின் பதில் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று சாடியுள்ளார்.
ஈரான் தனது அமைதித் திட்டப் பதிலைப் பாகிஸ்தான் தூதர்கள் மூலம் அமெரிக்காவிடம் வழங்கியது. ஈரானின் இந்த பதிலைத் தொடர்ந்து, அவர்கள் அமெரிக்காவை ஏமாற்ற முயற்சிப்பதாக ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜனாதிபதி ட்ரம்ப் மிகவும் தெளிவாக உள்ளார். ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது; உலகப் பொருளாதாரங்களை அவர்களால் பணயக்கைதியாக வைத்திருக்கவும் முடியாது” என ஐநாவுக்கான அமெரிக்கத் தூதர் மைக் வால்ட்ஸ் தெரிவித்துள்ளார்.










