கடந்த மூன்று ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான இணையவழிக் குற்றங்கள் தொடர்பாக சுமார் 12,000 முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இன்று 07 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இதைத் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
2023, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் பெறப்பட்ட சுமார் 2,300 முறைப்பாடுளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 2023-ஆம் ஆண்டில், பெண்களுக்கு எதிரான 4103 இணையவழிக் குற்றங்கள் பதிவாகின, அவற்றில் 753 குற்றங்கள் தீர்க்கப்பட்டன.
மேலும் 3348 முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணைகளும் வழக்கு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2024-ஆம் ஆண்டில் பெறப்பட்ட 3159 முறைப்பாடுகளில், 982 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
மேலும் 2177 முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணைகளும் வழக்கு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2025-ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான இணையவழிக் குற்றங்கள் தொடர்பாக 4,742 முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளன.
இவற்றில் 572 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும் 4,170 முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணைகளும் வழக்கு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளது – என்றார்.










