வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பழையவாடி புளியங்குளம் பகுதியில், வனவள திணைக்களத்தினால் பொதுமக்களுக்கு சொந்தமான காணிகள் அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை தொடர்ந்து, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப. சத்தியலிங்கம் இன்று (25.03.2026) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
குறித்த பகுதியில் வசிக்கும் மக்களுடன் குறைகேள் கலந்துரையாடலில் ஈடுபட்ட அவர், வனவள திணைக்களத்தினரால் எல்லைக்கற்கள் நாட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படும் காணிகளை நேரில் பார்வையிட்டார்.மேலும், இந்த விடயம் தொடர்பாக மக்களால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களையும் அவர் பெற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, மாவட்டச் செயலாளர் (அரசாங்க அதிபர்), வனவள திணைக்களம் மற்றும் பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி, மக்கள் காணிகளை மீளப் பெறுவதற்கான தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

Related Posts
கபில சந்திரசேனவின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காட்சிகள் தொடர்பில் வெளியான தகவல்.!
மர்மமான முறையில் உயிரிழந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன வசித்து வந்த வீட்டில் சி.சி.டி.வி காட்சிகள் பதிவாகவில்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக...
இளம் குடும்பஸ்தர் கொ*லை.!
இரத்தினபுரி, எஹெலியகொட - பொல்வத்தை கடை சந்திப்புக்கு அருகில் நபரொருவர் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்டவர் அவிசாவளையைச் சேர்ந்த நுவன்...
எரிபொருள் விநியோகத்துக்கான கியூ.ஆர் குறியீடு தொடர்பில் வெளியான அறிவிப்பு.!
எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், எரிபொருள் விநியோகத்துக்காக அறிமுகப்படுத்தப்பட்ட கியூ.ஆர் குறியீட்டு முறைமை தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில்...
மண்மேட்டிலிருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு.!
நாவலப்பிட்டிய, பெனிதுடுமுல்ல பகுதியில் நேற்று (18) திங்கட்கிழமை மண்மேடு ஒன்றிலிருந்து கீழே தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் பெனிதுடுமுல்ல பகுதியைச் சேர்ந்த 58...
அரச வாடி வீட்டில் வெடிப்புச் சம்பவம்.!
கெகிராவ வாடி வீட்டின் சமையலறைக்குள் இன்று (19) காலை வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் அங்கிருந்த நபர் ஒருவர் பலத்த காயமடைந்து தம்புள்ளை ஆதார...
ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது.!
கடவத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஹல பியன்வில பகுதியில் ஒரு கிலோகிராமுக்கும் அதிகளவிலான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் பேலியகொட பகுதியைச்...
யாழில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நபர் திடீரென உயிரிழப்பு.!
யாழ்ப்பாணத்தில் பொலிஸ் விசாரணைக்காக அழைக்கப்பட்ட நபர் ஒருவர், பொலிஸ் நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார்...
கொழும்பில் இன்று விசேட போக்குவரத்து!
கொழும்பில் இன்று 19 ஆம் திகதி பிற்பகல் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில், கொழும்பு, பத்தரமுல்லையில் அமைந்துள்ள இராணுவ...
இலங்கை ஊடகவியலாளர் தேசமாணி இர்ஷாத் ரஹ்மத்துல்லாவுக்கு தமிழகத்தின் தங்க மகன் விருது.!
தமிழ் கலை மற்றும் பண்பாடு மற்றும் தமிழ் ஊடகத் துறைக்கு சிறப்பான பங்களிப்புகள் மற்றும் அர்ப்பணிப்பான சேவைகளைப் பாராட்டி இலங்கையினை சேர்ந்த ஊடகவியலாளர் தேசமாணி இர்ஷாத் ரஹ்மத்துல்லாவுக்கு...
18ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தீர்வு திட்டத்தை முன்னெடுக்கும் ஆண்டாக உலகுக்கு சொல்ல வேண்டும்.!
18ஆவது முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவாண்டாவது ஒரு சடங்காக இல்லாமல் விடியலுக்கான ஒரு தீர்வு திட்டத்தை முன்னெடுக்கின்ற ஆண்டாக இந்த உலகிற்கு சொல்ல வேண்டும் என தென்னிந்திய பிரபல...










