மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவிய போர் மோதல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.அதற்கமைய, இன்று (03) பிற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து துபாய் நோக்கி முதல் விமானம் புறப்பட்டுச் சென்றது.
ஃபிட்ஸ் எயார் நிறுவனத்துக்குச் சொந்தமான 8D 821 என்ற விமானம் இன்று பிற்பகல் 1.20 மணியளவில் கட்டுநாயக்கவிலிருந்து துபாய் நோக்கி புறப்பட்டது என விமான நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். இதில் 47 பயணிகளும் 10 விமான பணியாளர்களும் பயணித்தனர்.
மத்திய கிழக்கு வான்வெளி குறிப்பிட்ட காலத்திற்காக திறக்கப்பட்டுள்ளதால், அந்த இடைப்பட்ட நேரத்தில் விமானங்கள் மீண்டும் இயக்கப்படுகின்றன.இதற்கிடையில், ஏர் அரேபியா நிறுவனத்துக்குச் சொந்தமான G-9509 என்ற விமானம் இன்று மாலை 4.45 மணியளவில் கட்டுநாயக்கவிலிருந்து சார்ஜா நோக்கிப் புறப்பட்டது. இதில் 44 பயணிகளும் 10 பணியாளர்களும் பயணித்தனர்.எதிர்வரும் நாட்களில் மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கான ஏனைய விமான சேவைகளும் படிப்படியாக வழமை நிலைக்கு திரும்பும் வாய்ப்பு உள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.










