1983
கறுப்பு ஜூலை: இலங்கையில் இரண்டு வாரங்களில் 3000 தமிழர்கள் சிங்கள பௌத்த இனவாதிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.
1874
இலங்கையின் சட்டசபையின் தமிழ்ப் பிரதிநிதி முத்து குமாரசுவாமி இங்கிலாந்தில் சேர் பட்டம் அளித்துக் கௌரவிக்கப்பட்டார்.
1981
இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.
1983
திருநெல்வேலி தாக்குதல் : விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தில் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தியதில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். புலிகளின் மூத்த உறுப்பினர் செல்லக்கிளி இத்தாக்குதலில் கொல்லப்பட்டார்.
1813
மால்ட்டா பிரித்தானியாவின் அரச குடியேற்ற நாடானது. சர் தோமசு மெயிற்லண்ட் அதன் முதலாவது ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
1829
ஐக்கிய அமெரிக்காவில் வில்லியம் ஆஸ்டின் பேர்ட் என்பவர் “டைப்போகிராஃபர் என்ற முதலாவது தட்டச்சியந்திரத்திற்கான காப்புரிமத்தைப் பெற்றார்.
1840
கனடா மாகாணம் என்ற பெயரில் பிரித்தானிய குடியேற்ற நாடு வட அமெரிக்காவில் அமைக்கப்பட்டது.
1881
சிலிக்கும் அர்கெந்தீனாவுக்கும் இடையில் எல்லை உடன்பாடு புவெனஸ் ஐரிஸ் நகரில் ஏற்படுத்தப்பட்டது.
1885
அமெரிக்க அரசுத்தலைவர் யுலிசீஸ் கிராண்ட் தொண்டைப் புற்றுநோய் காரணமாக இறந்தார்.
1903
போர்டு நிறுவனம் தனது முதலாவது தானுந்தை விற்றது.
1914
ஆஸ்திரியாவின் முடிக்குரிய இளவரசர் பிரான்ஸ் பேர்டினண்ட்டின் கொலையாளியைக் கண்டுபிடிக்க ஆத்திரியா – அங்கேரி சேர்பியாவுக்கு காலக்கெடு விதித்தது. இதனை அடுத்து ஜூலை 28, 1914 இல் முதலாம் உலகப் போர் ஆரம்பமானது.
1921
சீனப் பொதுவுடமைக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
1927
அனைத்திந்திய வானொலியின் முதலாவது வானொலி நிலையம் பம்பாய் நகரில் தனது ஒலிபரப்பு சேவையை ஆரம்பித்தது.
1929
இத்தாலியில் பாசிச அரசு வெளிநாட்டுச் சொற்களைப் பயன்படுத்தத் தடை விதித்தது.
1942
பெரும் இன அழிப்பு: போலந்தில் திரெப்ளிங்கா வதை முகாம் யூதர்களுக்காகத் திறக்கப்பட்டது.
1942
பல்கேரியக் கவிஞரும், கம்யூனிசத் தலைவருமான நிக்கோலா வப்த்சாரொவ் சுட்டுக் கொல்லப்பட்டு மரண தண்டனைக்குள்ளாக்கப்பட்டார்.
1952
எகிப்தியப் புரட்சி: எகிப்தின் பாரூக் மன்னரின் ஆட்சிக்கு எதிரான இயக்கத்தை ஜமால் அப்துல் நாசிரின் பின்னணியில் இராணுவத் தளபதி முகமது நாகிப் ஆரம்பித்தார்.
1961
நிக்கராகுவாவில் சண்டினீஸ்டா தேசிய விடுதலை முன்னணி அமைக்கப்பட்டது.
1962
லாவோஸ் அரசியலில் வெளிநாடுகள் தலையிடாதிருக்க பன்னாட்டு ஒப்பந்தம் லாவோஸ் உட்பட 15 நாடுகளுக்கிடையில் ஜெனீவாவில் கையெழுத்திப்பட்டது.
1967
அமெரிக்காவின் வரலாற்றில் மிகப் பெரும் கலவரம் ஆபிரிக்க அமெரிக்கர்கள் செறிந்து வாழும் டிட்ராயிட் நகரில் இடம்பெற்றது. 43 பேர் கொல்லப்பட்டு 342 பேர் காயமடைந்தனர். ஆயிரத்துக்கும் அதிகமான கட்டிடங்கள் எரிக்கப்பட்டன.
1968
இஸ்ரேலிய போயிங் 707 விமானம் 48 பேருடன் மூன்று பாலத்தீனத் தீவிரவாதிகளினால் கடத்தப்பட்டது. 40 நாட்களின் பின்னர் 16 அரபுப் போர்க் கைதிகளின் விடுவிப்புடன் கடத்தல் முடிவுக்கு வந்தது.
1970
ஓமானில் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு, சுல்தான் சயீது பின் தைமூர் அவரது மகன் காபூசு இப்னு சஈத் ஆலு சஈத்தால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1974
கிரேக்க இராணுவ ஆட்சி கலைந்தது. கிரேக்கத்தின் முன்னாள் பிரதமர் கான்ஸ்தந்தீனசு கரமான்லிசு புதிய அரசை அமைக்க அழைக்கப்பட்டார்.
1980
வியட்நாமைச் சேர்ந்த பாம் துவான் சோவியத்தின் சோயுஸ் 37 விண்கலத்தில் விண்ணுக்கு சென்ற முதலாவது ஆசியர் என்ற பெருமையைப் பெற்றார்.
1988
பர்மாவில் இடம்பெற்ற மக்களாட்சிக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களை அடுத்து 1962ம் ஆண்டில் இருந்து ஆட்சி நடத்திய இராணுவத் தளபதி நெ வின் பதவியைத் துறந்தார்.
1992
அப்காசியா ஜோர்ஜியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1992
தற்பால் சேர்க்கையாளர்களின் உரிமைகளைக் கட்டுப்படுத்தும் தீர்மானத்தை யோசப் ரட்சிங்கர் தலைமையிலான சிறப்புக் குழு வத்திக்கானில் முடிவெடுத்தது.
1995
ஏல்-பாப் என்ற வால்வெள்ளி சூரியனுக்கு வெகு தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டது. இது கிட்டத்தட்ட ஓராண்டிற்குப் பின்னர் வானில் தெரிந்தது.
1999
தோக்கியோ நகரில் ஜப்பானிய விமானம் ஒன்று 517 பேருடன் கடத்தப்பட்டது. விமான ஓட்டி கொல்லப்பட்டார்.
1999
சந்திரா எக்ஸ்-கதிர் அவதான நிலையம் என்ற செய்மதி ஏவப்பட்டது.
1999
மாஞ்சோலை தொழிலாளர்கள் படுகொலை: ஊதிய உயர்வு கேட்டு தமிழ்நாடு, திருநெல்வேலியில் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நடத்திய பேரணியின் போது காவல்துறை நடத்திய தடியடியில் பதினேழு பேர் உயிரிழந்தனர்.
2005
எகிப்தில் இடம்பெற்ற மூன்று குண்டுவெடிப்புகளில் 88 பேர் கொல்லப்பட்டனர்.
2015
கெப்லர்-452பி என்ற புறக்கோள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக நாசா அறிவித்தது.
















