1823
யாழ்ப்பாணத்தில் பட்டிக்கோட்டா குருமடம் டானியேல் வாரன் புவர் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
1802
பேரரசர் கியா லொங் அனோய் நகரைக் கைப்பற்றி வியட்நாமை ஒன்றிணைத்தார்.
1812
நெப்போலியப் போர்கள்: வெல்லிங்டன் பிரபு தலைமையிலான பிரித்தானியப் படைகள் எசுப்பானியாவில் சலமாங்கா என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்தனர்.
1916
கலிபோர்னியா, சான் பிரான்சிஸ்கோவில் ஊர்வலமொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்தனர், 40 பேர் காயமடைந்தனர்.
1933
தனியே உலகைச் சுற்றி வந்த முதல் மனிதர் வைலி போஸ்ட் 7 நாட்கள், 18 மணி, 45 நிமிடங்களில் உலகைக் கடந்து நியூயார்க்கை வந்தடைந்தார்.
1942
இரண்டாம் உலகப் போர்: போர்க்காலத் தேவைக்காக அமெரிக்காவில் பெற்றோல் பங்கீட்டு அடிப்படையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
1942
பெரும் இன அழிப்பு: போலந்து, வார்சாவில் இருந்து யூதர்களின் நாடுகடத்தல் ஆரம்பமானது.
1943
இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகளின் சிசிலியப் படையெடுப்பு: நேச நாடுகள் பலெர்மோவைக் கைப்பற்றின.
1944
போலந்தின் தேசிய விடுதலைக்கான குழு நாட்டில் சீர்திருத்தங்களையும், நாட்சிகளுக்கெதிரான போரை முன்னெடுத்துச் செல்லவும், தொழிற்சாலைகளை தேசிய மயமாக்கும் திட்டத்தையும் அறிவித்தது. போலந்தில் கம்யூனிச ஆட்சி ஆரம்பமானது.
1946
எருசலேமில் கட்டளைப் பலத்தீனின் நிர்வாக மையம் அமைந்திருந்த கட்டடத்தில் சியோனிஸ்டுகள் குண்டுத் தாக்குதல் நடத்தியதில் 91 பேர் கொல்லப்பட்டனர்.
1962
நாசாவின் மரைனர் 1 விண்கலம் ஏவப்பட்டு சில நிமிடங்களில் கட்டுக்கடங்காமல் சென்றதால் அது அழிக்கப்பட்டது.
1963
முடிக்குரிய குடியேற்றமான சரவாக் சுயாட்சி பெற்றது. இதே ஆண்டு செப்டம்பர் 16 இல் இது மலேசியக் கூட்டமைப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டது.
1976
இரண்டாம் உலகப் போரின் போது பிலிப்பைன்சில் ஜப்பான் இழைத்த போர்க் குற்றங்களுக்கான இழப்பீட்டை ஜப்பான் முழுமையாகச் செலுத்தியது.
1977
சீனத் தலைவர் டங் சியாவுபிங் மீண்டும் ஆட்சிக்கு வந்தார்.
1983
போலந்தில் இராணுவச் சட்டம் அதிகாரபூர்வமாகத் திரும்பப் பெறப்பட்டது.
1992
மெதெயின் அருகே, கொலம்பியாவின் போதைப்பொருள் கடத்தல்காரர் பப்லோ எசுகோபர் சிறையில் இருந்து தப்பினார்.
1999
விண்டோஸ் லைவ் மெசன்ஜர் மைக்ரோசாப்டினால் வெளியிடப்பட்டது.
2003
ஈராக்கில் சதாம் உசேனின் புதல்வர்கள் குவாசி, உதய் இருவரும் அமெரிக்க இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். இவர்களுடன் சதாமின் 14 வயதுப் பேரனும் கொல்லப்பட்டான்.
2009
21ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம் நிகழ்ந்தது. வட இந்தியா, நேபாளம், வங்காள தேசம் போன்ற இடங்களில் முழு கிரகணம் ஏற்பட்டது.
2011
நோர்வேயில் இரண்டு தீவிரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றன. மொத்தம் 77 பேர் கொல்லப்பட்டனர்.
2013
சீனாவில் டிங்கி என்ற இடத்தில் இடம்பெற்ற நிலநடுக்கங்களில் 89 பேர் உயிரிழந்தனர்.
2019
இந்தியாவில் சந்திரயான்-2 என்ற விண்கலம் நிலாவை ஆய்வு செய்வதற்காக ஏவப்பட்டது.

















