1911
யாழ்ப்பாணத்தில் தேசவழமைச் சட்டத்தின் திருமண விதிகளுக்கு மாற்றாக “யாழ்ப்பாண திருமண சிறப்புச் சட்டம்” கொண்டுவரப்பட்டது.
1979
இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அடுத்த மூன்று நாட்களில் 47 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
1902
வில்லிசு கேரியர் முதலாவது குளிரூட்டியை நியூயோர்க்கில் உருவாக்கினார்.
1917
பிரித்தானிய அரச குடும்பத்தினரின் ஆண் வாரிசுகள் மட்டுமே வின்சர்ரென்ற பெயரைப் பெறுவார்கள் என்ற ஆணையை ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ் மன்னர் பிறப்பித்தார்.
1918
போல்செவிக்குகளின் உத்தரவின் பேரில் ரஷ்யப் பேரரசர் இரண்டாம் நிக்கலாசும் அவரது முழுக் குடும்பத்தினரும் எக்கத்தரீன்பூர்க் நகரில் கொல்லப்பட்டனர்.
1918
டைட்டானிக் கப்பலில் இருந்து 705 பேரைக் காப்பாற்றிய கர்பாத்தியா என்ற கப்பல் அயர்லாந்துக்கருகில் ஜேர்மானிய யூ-55 மூழ்கடிக்கப்பட்டதில் 5 பேர் உயிரிழந்தனர்.
1932
நாட்சிக் குழுக்களுக்கும், எசுஎசு, எஸ்ஏ, மற்றும் ஜேர்மானியக் கம்யூனிசக் கட்சி உறுப்பினரக்ளுக்கும் இடையே கலவரம் மூண்டது.
1936
எஸ்ப்பானிய உள்நாட்டுப் போர்: எஸ்ப்பானியாவில் அண்மையில் அமைக்கப்பட்ட இடதுசாரி அரசுக்கெதிராக இராணுவக் கிளர்ச்சி ஆரம்பமாகியது.
1944
இரண்டாம் உலகப் போர்: கலிபோர்னியாவில் ஆயுதங்கள் ஏற்றிச் சென்ற இரண்டு கப்பல்கள் வெடித்ததில் 320 பேர் உயிரிழந்தனர்.
1945
இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகளின் மூன்று முக்கிய தலைவர்கள் வின்ஸ்டன் சர்ச்சில், ஹாரி எஸ். ட்ரூமன், ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் போரில் தோல்வியடைந்த ஜேர்மனியின் எதிர்காலத்தை நிர்ணயிக்க ஜேர்மனியின் போட்சுடாம் நகரில் உச்சி மாநாட்டை நடத்தினர்.
1953
அமெரிக்காவில் புளோரிடா மாநிலத்தில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 44 பேர் உயிரிழந்தனர்.
1955
வால்ட் டிஸ்னி கலிபோர்னியாவில் டிஸ்னிலாண்ட்டைத் திறந்து வைத்தார்.
1967
நாசாவின் சேர்வயர் 4 ஆளில்லா விண்கலம் சந்திரனில் “சைனஸ் மெடை” என்ற இடத்தில் மோதியது.
1968
ஈராக்கில் இடம்பெற்ற புரட்சியில் ஜனாதிபதி அப்துல் ரகுமான் ஆரிஃப் பதவியில் இருந்து அகற்றப்பட்டு அகமது அசன் அல்-பாக்கர் தலைவரானார்.
1973
ஆப்கானித்தான் மன்னர் முகமது சாகிர் ஷா கண் சிகிச்சைக்காக இத்தாலி சென்றிருந்த போது பதவியில் இருந்து அகற்றப்பட்டு அவரது உறவினர் முகமது தாவுத் கான் மன்னரானார்.
1975
அமெரிக்காவின் அப்பல்லோ விண்கலமும் சோவியத்தின் சோயுசு விண்கலமும் விண்வெளியில் ஒன்றாக இணைந்தன. இரண்டு நாடுகளின் விண்கலங்கள் ஒன்றாக இணைந்தது இதுவே முதற் தடவையாகும்.
1976
கனடாவின் மொண்ட்ரியால் நகரில் கோடை ஒலிம்பிக் விளையாட்டுகள் ஆரம்பமாயின. இனவொதுக்கல் காலத்தில் தென்னாப்பிரிக்காவில் நடந்த போட்டிகளில் கலந்து கொண்ட நியூசிலாந்து அணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து 25 ஆபிரிக்க நாடுகள் இப்போட்டிகளைப் புறக்கணித்தன.
1976
கிழக்குத் திமோர் இந்தோனேசியாவுடன் இணைக்கப்பட்டு, அதன் 27ஆவது மாகாணமானது.
1979
நிக்கராகுவா அரசுத்தலைவர் அனஸ்தாசியோ சமோசா டெபாயில் பதவியில் இருந்து விலகி மயாமிக்குத் தப்பி ஓடினார்.
1981
அமெரிக்காவில் கேன்சசு நகரில் நடைப் பாலம் ஒன்று இடிந்ததில் 114 பேர் உயிரிழந்தனர்.
1984
ஐக்கிய அமெரிக்காவில் மது அருந்துவோருக்கான குறைந்த பட்ச வயது 18 இலிருந்து 21 ஆக அதிகரிக்கப்பட்டது.
1989
திரு ஆட்சிப்பீடத்திற்கும் போலந்துக்கும் இடையே உறவுகள் புதுப்பிக்கப்பட்டன.
1994
பிரேசில் இத்தாலியை வென்று உலக உதைபந்து உலகக்கிண்ணத்தைப் பெற்றது.
1996
நியூயோர்க்கில் லோங் தீவில் பாரிசு சென்றுகொண்டிருந்த போயிங் 747 அமெரிக்க விமானம் வெடித்துச் சிதறியதில் அனைத்து 230 பேரும் உயிரிழந்தனர்.
1998
பப்புவா நியூ கினியில் 7.0 அளவு நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக 10 கிராமங்கள் அழிந்தன. 2,700 பேர் உயிரிழந்தனர்.
1998
பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் ஒன்றை நிரந்தரமாக அமைப்பதற்கான உடன்பாடு ரோம் நகரில் எட்டப்பட்டது.
2000
பாட்னாவில் அலாயன்ஸ் ஏர் வானூர்தி 7412 செயப் பிரகாஷ் நாராயண் பன்னாட்டு வானூர்தி நிலையத்தை அண்மித்தபோது, குடியிருப்புப் பகுதியில் மோதியதில் 60 பேர் உயிரிழந்தனர்.
2001
ஜூலை 2000 விபத்தின் பின்னர் கான்கோர்டு மீண்டும் சேவையில் விடப்பட்டது.
2006
இந்தோனேசியா, ஜாவாவில் 7.7 அளவு நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக 668 பேர் உயிரிழந்தனர்.
2006
இந்தியா சத்தீஸ்கர் மாநிலத்தில் தந்தேவாடா மாவட்டத்தில் எர்ராபோரே நிவாரண முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர்.
2007
பிரேசிலில் விமானம் ஒன்று தரையில் மோதியதில் 199 பேர் உயிரிழந்தனர்.
2014
ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த மலேசியா எயர்லைன்சு விமானம் 17 உக்ரைன் – ரஷ்ய எல்லையில் ஏவுகணைத் தாக்குதல் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் பயணம் செய்த அனைத்து 298 பேரும் கொல்லப்பட்டனர்.
2015
ஈராக், தியாலாவில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 120 பேர் கொல்லப்பட்டனர்.















