• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, June 13, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் கவனயீர்ப்பு பேரணி.!

Mathavi by Mathavi
June 10, 2025
in இலங்கை செய்திகள், மன்னார் செய்திகள்
0 0
0
மன்னாரில்  முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் கவனயீர்ப்பு பேரணி.!
Share on FacebookShare on Twitter

மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளைய தினம் புதன் கிழமை (11) மன்னாரில் இடம்பெற உள்ள கவனயீர்ப்பு பேரணியில் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவை வழங்குமாறு மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மன்னார் பிரஜைகள் குழுவில் இன்று செவ்வாய்க்கிழமை (10) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ADVERTISEMENT

மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது.

காற்றாலை மின் உற்பத்தி மக்களுக்கு நன்மையை ஏற்படுத்தும் செயற்திட்டமாக காணப்பட்டாலும், குறித்த காற்றாலைகள் அமைக்கப்படும் இடம் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

மேலும் மன்னார் தீவு மற்றும் பெரு நிலப்பரப்பிலும் கனிய மணல் அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பை தெரிவித்து வருகின்ற போதும், குறித்த நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

எனவே மக்களின் வாழ்வியலை பாதிக்கின்ற காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மன்னார் பிரஜைகள் குழு, பொது அமைப்புக்கள், மீனவ அமைப்புகள் உள்ளடங்களாக சிவில் அமைப்புக்கள் இணைந்து நாளைய தினம் புதன்கிழமை காலை மன்னாரில் கவனயீர்ப்பு பேரணி ஒன்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காலை 9 மணிக்கு மன்னார் பொது விளையாட்டு மைதான வீதியில் ஆரம்பமாகி பிரதான வீதியூடாக மன்னார் பஜார் பகுதியை சென்றடையும்.

அதனை தொடர்ந்து ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட வேண்டிய கோரிக்கை அடங்கிய மகஜர் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு வழங்கி வைக்கப்படும். எனவே குறித்த பேரணியில் மன்னார் மாவட்ட மக்கள், வர்த்தகர்கள் உள்ளடங்களாக அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு எமது இருப்பை தக்க வைக்க அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts

வீட்டுத் திட்டத்திற்கான நிதி அமைச்சரவையினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவிப்பு.!

வீட்டுத் திட்டத்திற்கான நிதி அமைச்சரவையினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவிப்பு.!

by Mathavi
June 13, 2025
0

வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம், பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம், வீடமைப்புத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட...

தமிழ் முற்போக்குக் கூட்டணி உறுப்பினர்களின் ஆதரவோடு ஹல்துமுல்லயில் ஆட்சியமைத்தது தேசிய மக்கள் சக்தி.!

தமிழ் முற்போக்குக் கூட்டணி உறுப்பினர்களின் ஆதரவோடு ஹல்துமுல்லயில் ஆட்சியமைத்தது தேசிய மக்கள் சக்தி.!

by Mathavi
June 13, 2025
0

பதுளை, ஹல்துமுல்ல பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ளது. தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பில் தெரிவான இரண்டு உறுப்பினர்கள் என்.பி.பிக்கு ஆதரவளித்தனர். ஹல்துமுல்ல பிரதேச சபைத்...

தமிழரசிடம் இருந்து விக்கியை பாதுகாக்க இனி யாரும் இல்லை.!

தமிழரசிடம் இருந்து விக்கியை பாதுகாக்க இனி யாரும் இல்லை.!

by Mathavi
June 13, 2025
0

வடக்கு மாகாண முதலமைச்சராகப் பதவி வகித்த சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக இலங்கைத் தமிழரசுக் கட்சியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்குக் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி தாமே அவரைப் பாதுகாத்ததாகச் சுட்டிக்காட்டியுள்ள...

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை.!

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை.!

by Mathavi
June 13, 2025
0

மேல், வடமேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும்...

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபரின் இல்லத்துக்கு ரிஷாட் விஜயம்..!

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபரின் இல்லத்துக்கு ரிஷாட் விஜயம்..!

by Thamil
June 12, 2025
0

அண்மையில் திருகோணமலை, குச்சவெளி பிரதேசத்தில் மீன் பிடிப்பதற்காகக் கடலுக்குச் சென்ற வேளையில், கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி, பாரிய காயங்களுக்குள்ளான இனூஸின் இல்லத்திற்கு, அகில இலங்கை மக்கள்...

தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்ட தொண்டர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு..!

தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்ட தொண்டர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு..!

by Thamil
June 12, 2025
0

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களிள் கண்காணிப்பில் ஈடுபட்ட தன்னார்வத் தொண்டர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த 10 ஆம் திகதி ஏறாவூர் அல்...

மட்டக்களப்பு ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கு..!

மட்டக்களப்பு ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கு..!

by Thamil
June 12, 2025
0

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு, ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்புடன் (FAQ) இணைந்து, ஐரோப்பிய ஒன்றியக் குழுவின் (EU) நிதி உதவியுடன்,...

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு..!

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு..!

by Thamil
June 12, 2025
0

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்துவ வர்த்தக பீடத்துக்கு 2023/2024 கல்வியாண்டின் புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் தொடக்க நிகழ்வு, 2025.06.12 ஆம் திகதி முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதி...

வந்தாறுமூலை ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக நிகழ்வு..!

வந்தாறுமூலை ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக நிகழ்வு..!

by Thamil
June 12, 2025
0

நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையான மட்டக்களப்பு வந்தாறுமூலை ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன் ஆலயத்தினுடைய மகா கும்பாபிஷேக நிகழ்வானது எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்து மா...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி