மாத்தறை, எலியகந்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று (13) இரவு 7 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மோட்டார் சைக்கிள் பேருந்தை முந்திச் செல்ல முயன்ற போது சறுக்கி விழுந்ததில், பேருந்தின் பின் சக்கரத்தின் கீழ் இருவரும் நசுங்கி உயிரிழந்தனர்.
விபத்தில் மாத்தறை, தெலிஜ்ஜிவில பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபரும், மாத்தறை, காசிவத்த பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய பெண்ணும் உயிரிழந்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.
ADVERTISEMENT
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
