வெசாக் தினத்தை முன்னிட்டு வவுனியா மாவட்ட செயலகத்தின் இன்று (12.05) தன்சல் வழங்கப்பட்டது.
வவுனியா மாவட்ட செயலகம் முன்பாக வீதியோரத்தில் புத்தரின் உருவத்துடன் கூடிய காட்சிக் கூடம் ஒன்று பார்வைக்காக திறந்து வைகப்பட்டதுடன், கொட்டகை அமைத்து தன்சலும் வழங்கப்பட்டது.
மரவள்ளி கிழங்கு சம்பலுடன் தன்சலாக வழங்கப்பட்டது. வீதியால் சென்ற பலரும் நீண்ட வரிசையில் நின்று அதனைப் பெற்றிருந்தனர்.
இந்நிகழ்வில் பௌத்த மதகுரு, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், மேலதிக அரசாங்க அதிபர் (காணி)நா.கமலதாசன், உதவி மாவட்ட செயலாளர் சபர்ஜா, மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
அத்துடன், வவுனியா, பண்டாரிக்குளம் பொலிஸ் நிலையம் முன்பாகவும் பொலிசாரால் தன்சல் வழங்கபபட்டது. அவர்களும் மரவள்ளி கிழங்கு மற்றும் சம்பல் வழங்கி வைத்தனர்.
மேலும், வவுனியா தேக்கவத்தைப் பகுதியில் மதியச் சாப்பாடு தன்சலாக வழங்கப்பட்டதுடன், பல இடங்களில் ஐஸ்கிறீமும் தன்சலாக வழங்கப்பட்டது. இதில் பெருமளவான தமிழ் மககள் கலந்து கொண்டு அதனைப் பெற்றுச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


