தேசிய வெசாக் நிகழ்வு நுவரெலியாவில் நடைபெறுவதால் வருடம் தோறும் நடைபெறும் வெசாக் நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் வெளிமாவட்டங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பெருந்தொகையான சுற்றுலா பயணிகள் நுவரெலியாவிற்கு வருகை தருகின்றார்கள்.
அரசாங்கத்தின் ஏற்பாட்டில் இம்மாதம் 10ம் திகதி ஆரம்பித்தது. தொடர்ந்து 16ஆம் திகதி வரை தினந்தோறும் வெசாக் கூடு மற்றும் காலாச்சார தோரண இரவு நடைபெறும்.
இந்த நாட்களில் நுவரெலியாவுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதற்கு காலநிலை பொருத்தமானதாக உள்ளமையாலும் நாட்டில் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையிலும், வெசாக் பண்டிகை விடுமுறை வழங்கப்பட்டுள்ளமையால் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் நுவரெலியாவுக்கு விடுமுறையினை கழிப்பதற்காக வருகை தந்துள்ளனர்.


