கம்பஹா மாவட்டத்தில் கிரிந்திவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கன்னிமஹர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) மாலை சந்தேகத்திற்கிடமான முறையில் தம்பதி ஒன்று உயிரிழந்துள்ளதாக கிரிந்திவெல பொலிஸார் தெரிவித்தனர்.
கிரிந்திவெல, கன்னிமஹர பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயதுடைய கணவரும் 79 வயதுடைய மனைவியுமே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் வத்துப்பிட்டிவல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ADVERTISEMENT
குறித்த சம்பவம் தொடர்பில் கிரிந்திவெல பொலிஸார் விசாரணைகள் ஆரம்பித்துள்ளனர்.