ராஜபக்சக்கள் கொள்ளையடித்த சொத்துக்களை அரசுடமையாக்குமாறு ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கோரியுள்ளார்.
டுபாயில் எமக்கு சொந்தமானது என கூறப்படும் மரியோட் ஹோட்டலை அரசுடமையாக்குமாறும், உகண்டாவில் காணப்படுவதாக கூறப்பட்ட பணத்தையும் அரசுடமையாக்குமாறும் கூறியுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் ராஜபக்சக்கள் பணம் உழைத்திருந்தால் அவற்றை அரசாங்கம் அரசுடமையாக்க வேண்டுமென கோரியுள்ளார். கடந்த காலங்களில் ரணில் விக்ரமசிங்க கூறிய பொய்களையே இன்று கூறுகின்றார்கள் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க மிகவும் தந்திரமான ஓர் அரசியல்வாதி எனவும் அநுரகுமார தரப்பினர் இந்த பொய்களை சமூகத்திற்கு எடுத்துச் சென்று தற்பொழுது தடுமாறுகின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக குவித்த சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கு எந்தவொரு ஒத்துழைப்பினையும் வழங்கத் தயார் எனவும், வேண்டுமென்றால் சத்தியக்கடதாசி ஒன்றை வழங்கவும் தயார் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.