உலகத்தில் முதன் முதலில் செல்வம் பெருகுவதற்காக பல நாடுகளுக்கு பயணித்து, பல நாடுகளில் மிக முக்கியமான வியாபார வெற்றியாளர்களாக மாறியவர்கள் தமிழர்கள். உலகத் தமிழர்கள் முன்னேற்றம் பல்வேறு துறைகளில் நிகழ்ந்து வருகிறது.
இதன்படி வரும் ஜூலை மாதம் மலேசியா கோலாலம்பூரில் உலக தமிழர்களின் வர்த்தக மாநாடு இடம்பெறவுள்ளது.
இந்த மாநாட்டின் மூலம் 15 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருக்கும் வியாபார வெற்றி தமிழர்களை ஒன்றிணைத்து உலக அளவில் தமிழர்களின் வியாபார முன்னேற்றத்திற்கான பல்வேறு விதமான கலந்துரையாடல்களையும் ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த மாநாட்டின் மூலமாக வரும் காலத்தில் எந்த மாதிரியான வியாபாரத்தில் வெற்றி பெற முடியும், அதற்கு முதலீடுகளை எவ்வாறு உருவாக்க வேண்டும், அதற்குரிய திட்டங்களை எவ்வாறு தீட்ட வேண்டும், அதற்குரிய செயற்பாடுகளை செய்ய என்ன மாதிரியான விடயங்களை கற்றுக் கொண்டு செயற்பட வேண்டும் என்கின்ற விஷயங்களை கலந்துரையாட இருக்கின்றார்கள்.
தமிழ் முன்னேற வேண்டும் என்றால் தமிழர்கள் முன்னேற வேண்டும். தமிழர்கள் உலக அளவில் தமிழர்களுக்கான வியாபார வர்த்தக வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். அதற்குரிய வாய்ப்புகளை அதிகரிக்கவே இந்த அற்புதமான நிகழ்வை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது..
