ஒன்ராறியோ மாகாணத்தின் பிராம்ப்டன் (Brampton) நகரில், தமிழின அழிப்பை நினைவுகூரும் முக்கிய நினைவுச்சின்னம் நேற்றைய தினம் சனிக்கிழமை, மே 10ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
Chinguacousy பூங்காவில் மாலை 6 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வில், இலங்கை அரசால் நிகழ்த்தப்பட்ட தமிழினப் படு கொலையில் உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக இந்தச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நினைவுச்சின்னம், தமிழ் மக்களின் வரலாற்றை வெளிக்கொணரும் ஒரு முக்கியமான அடையாளமாகக் கருதப்படுகிறது.
ADVERTISEMENT
தமிழர் சமூகத்தினர் மட்டுமன்றி, அனைத்துப் பின்புலங்களையும் சேர்ந்த மக்களும் இதில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.









