கராச்சி பங்குச்சந்தையான கே.எஸ்.இ. (KSE 100).குறியீடு ஆரம்ப வர்த்தகம் 6.272 புள்ளிகள் சரிந்து 107, 007.68 ஆக சரிந்தது. நேற்றைய தினம் இதே பங்குச் சந்தை 113,568.51 என்ற புள்ளிகளில் நிறைவடைந்து இருந்தது. வங்கிகள், தொழில்துறை நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. முதலீட்டாளர்கள் அனைவரும் தங்கள் பங்குகளை திரும்ப பெற்றதால் கராச்சி பங்குச்சந்தைகளில் பெரும் சரிவு காணப்பட்டது.
ஆபரேஷன் சிந்தூர் பற்றி இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வ தகவல்களை புது டில்லியில் இருந்தபடியே வெளியிட்ட அடுத்த தருணமே பாகிஸ்தான் பங்குச்சந்தைகள் வீழ்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
ADVERTISEMENT