மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்புகள் சுமூகமான முறையில் நடைபெற்ற நிலையில் 60.69 வீதமான வாக்குப் பதிவுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான திருமதி ஜஸ்ரினா முரளிதரன் தெரிவித்தார்.
144 வாக்களிப்பு நிலையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இன்றைய தினம் மட்டும் 139 தேர்தல் விதிமீறல்கள் இடம்பெற்றுள்ளதுடன் ஒரு தேர்தல் வன்முறைச்சம்பவம் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்று மாலை மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் நடைபெற்ற இறுதி ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.