உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் (06.05.2025), யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது வாக்களிப்பு சுமூகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
சில வாக்களிப்பு நிலையங்களுக்கு அரசாங்க அதிபரும், தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் நேரில் சென்று அவதானித்தார்.
இதேவேளை யாழ்ப்பாண மாவட்டத்தில் பி.ப 02.00 மணி நிலவரப்படி 44.03℅ வீதமான வாக்குப் பதிவு இடம்பெற்றிருக்கின்றது என மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ADVERTISEMENT


