ஐக்கிய மக்கள் சக்தியின் இறுதி பிரச்சார கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன் தலைமையில் வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் நேற்று(03.05) இரவு இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் முதன்மை அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் கலந்து கொண்டிருந்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக வவுனியா மாநகர சபைக்காக பட்டாணிச்சி புளியங்குளம் வட்டாரத்தில் லரீப், அப்துல் பாரி ஆகியோர் போட்டியிடுகின்ற நிலையில் அவர்களை ஆதரித்து இப் பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் மௌலவிகள், உலமாக்கள், கட்சியின் தொண்டர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.




