இலங்கை தொழிலாளர் கட்சியின் இறுதி பிரச்சார கூட்டம் வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் நேற்று (03.05) இரவு இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் முதன்மை அதிதியாக கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் கலந்து கொண்டிருந்தார்.
இலங்கை தொழிலாளர் கட்சி சார்பாக வவுனியா மாநகர சபைக்காக பட்டானிச்சி புளியங்குளம் வட்டாரத்தில் முநௌபர், பர்ஸான், சிப்தி, நாசில் ஆகியோர் போட்டியிடுகின்ற நிலையில் அவர்களை ஆதரித்து இப் பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்றது.
ADVERTISEMENT
இக்கூட்டத்தில் மௌலவிகள், உலமாக்கள், கட்சியின் தொண்டர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.



